- · 5 friends
-
I
மரணம் வந்துவிட வேண்டும் (படித்ததில் பிடிததது)
கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகன்/மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் மரணம் வந்து விட வேண்டும்.
உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் மற்றவர்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.......
வாழ்க்கையின் யதார்த்தம் இது..!!!
அத்தனை வார்த்தை வரிகளும் அர்த்தமுள்ளவை..
உயிரோட்டம் நிரம்பிய வார்த்தைகள் இவை என்று சொன்னால் அது மிகையல்ல..
ஆனால் இதன் முழு அர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மனித மனம் சற்று பக்குவம் அடைய வேண்டும்…
இந்த பதிவு யாரையும் நோக வைக்கும் நோக்கத்தில் பதிவிடவில்லை. வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு, தைரியமாகவும், தன்னம்பிக்கயுடன் வாழ்ந்து, மற்றவருக்கு முடிந்த உதவி செய்து இந்த வாழ்வை கழிக்க வேண்டும் என்பது மனதில் நிறுத்தி வாழ்ந்திடவே.
அன்பை விதைப்போம்.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·