Support Ads
 ·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

காதுதுது கேட்காதா? (குட்டிக்கதை)

ஒரு கணவனும் மனைவியும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர், அப்போது மனைவிக்கு திடீரென ஒரு சந்தேகம்...

"நான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறேன் ஒரு கேள்விக்கு கூட பதிலை காணோமே, இவருக்கு என்னாச்சு!" ஒருவேளை தன்னுடைய கணவனுக்கு காதுதான் கேட்கவில்லையோ காலையில் நன்றாகத்தானே இருந்தார் என்று? பயந்தவள் ஆனால் அதை... தன் கணவனிடம் நேரடியாக கேட்க அவளுக்கு கொஞ்சம் தயக்கம், உடனே தன்னுடைய செல்போனை எடுத்து இந்த விஷயத்தை அவளின் உறவுக்கார பெண் டாக்டருக்கு மெசேஜ் எழுதி அனுப்பினாள்...

அந்த டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...

இருபது அடி தூரத்தில் நின்றுகொண்டு உங்கள் கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,... அவரின் காதில் விழவில்லையா? அல்லது கேட்காதது போல் நடிக்கிறாரா! என்று அவர் கண்களை உற்றுப் பாருங்கள்,.... மேலும் சந்தேகம் எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்...

அதற்கும் பதில் வரவில்லை எனில் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லுங்கள், காது கேட்காதது போல் நடித்தாலும் சொன்னதையே திரும்ப சொன்னால் யாருக்கேனும் கோபம் வரும்தானே? அதுவும் பிடிபடவில்லை எனில்... அவரை என் கிளினிக்கு அழைத்து வாருங்கள்...

குழப்பத்தில் இருந்தவள், டாக்டர் சொல்லியதை செய்து பார்க்க... எழுந்து வீட்டு வாசலில் நின்று உள்ளிருந்த கணவனிடம்...

இன்று பசங்களுக்கு பள்ளிக்கூட கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள்...

பதில் எதுவும் இல்லை...

பின் வீட்டு வரவேற்பறையில் நின்று அதே கேள்வியைக் திரும்ப கேட்டாள்... அதற்கும் பதில் ஒன்றும் வரவில்லை... மீண்டும் ஹாலில் நெருங்கி வந்து திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்டாள்...

ம்ம்ஹும்ம்...

மறுபடியும் சமையலறை வாசலில் நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்... கணவரிடமிருந்து எந்தவொரு பதிலுமே வரவில்லை...

"அய்யய்யோ... போச்சு என் புருசனுக்கு ரெண்டு காதுமே கேட்கவில்லையே என்ன செய்வேன், என்று புலம்பியவள்... வேகமாக ஓடிவந்து கணவனின் அருகில் அமர்ந்து கொண்டு அவன் காது அருகே சென்றுச் சத்தமாக மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.... படார் என தலையை திருப்பிய கணவன் தலையை சொரிந்தபடியே எழுந்து கோபத்துடன்...

”ஏன்டீ லூசு ! இப்படி காதுல வந்து கத்துற, எத்தனை தடவைதான் கேட்ட கேள்வியே திரும்பத் திரும்ப கேட்ப... நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்..."

அவன் மனைவி அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய்விடுகிறாள்........

...ஓ... என்று தலையை சொரிந்தவள் மயங்கி கீழே விழுகிறாள்...

உண்மையில் காது கேளாமல் போனது அவன் மனைவிக்குத்தான்............!

இப்படித்தான் பலர் பிரச்சனையை தன்னிடம் வைத்துக்கொண்டு... அது பிறரிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்,

  • 920
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்