·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நன்றியை வெளிப்படுத்திய விதம் - (உண்மைச்சம்பவம்)

2009 ஆம் ஆண்டு.

தாய்லாந்து நாட்டின் ரேயாங் காட்டில் உள்ள ஒரு யானை உயிருக்குப் போராடியவண்ணம் பெருந்துயருடன் இருந்தது.

31 வயதான பிளாய் தான்க் என்ற பெயருடைய அந்த யானைக்கு Parasitic என்ற ஒட்டுண்ணியின் தாக்குதலால் Trypanosomiasis என்ற கொடிய ஒட்டுண்ணித் தாக்குதல் நோய் வந்திருந்தது.

Sleeping sickness காரணமாக அவதியுற்ற அந்த யானை கடுமையான காய்ச்சலுக்கு ஆளானது.

பசியின்மையும், முகம் கழுத்து வயிற்று வீக்கத்தாலும், கால்கள் மரத்துப் போன தன்மையாலும், இரத்தசோகையும் ஏற்பட்டு மரணவாசலின் நுழைவாயிலில் தான்க் நின்று கொண்டிருந்தது.

அத்தகைய சூழலில் அந்த யானையைக் கண்டார் Dr.Pattrapol

எவ்வாறேனும் அதைக் காப்பாற்ற வேண்டும் என்று முயன்று Lampang என்ற‌ இடத்தில் உள்ள Forest Industry Organisationக்கு எடுத்துச் சென்றார்.

அங்கிருந்த மருத்துவர்கள், வனத்துறை ஊழியர்கள், தேசிய பூங்கா பராமரிப்புப் பணியாளர்கள் ஆகியோர் துணையுடன் தொடர்ந்து சிகிச்சையளித்தார்.

சில மாதங்கள் தொடர் கவனிப்பின் விளைவாக அந்த யானை நோயின் பிடியிலிருந்து வெளியேறியது. மீண்டும் அதைக் கொண்டு போய் ரேயாங் வனப்பகுதியில் விட்டு விட்டனர்.

அண்மையில் ஒரு வாரத்திற்கு முன்பு Dr.Pattrapol வழக்கம் போல் வனப்பகுதியில் தன்னுடைய ரோந்துப் பணியினை மேற்கொண்டிருந்தார்.

திடீரென்று மரங்களுக்கு இடையில் இருந்து ஒரு பிளிறல் சத்தம் கேட்டது. அது யானைகள் வழக்கமாகச் செய்கின்ற பிளிறல் ஒலியினைப் போன்று இல்லை.

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் ; உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்" என்ற கண்ணதாசனின் பாடல்வரியைக் கேட்டுள்ளீர்களா?

ஊருலகிற்கான பொதுப்பார்வையைத் தவிர்த்து ஒரேயொருவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பார்வையைப் போல அந்த ஒலி தனக்கே தனக்கான அழைப்பொலி என்பதை உணர்ந்தார் டாக்டர்.

வண்டியை நிறுத்தி காட்டினுள் நோக்கினார். அவரை நோக்கி பிளிறியபடி வந்து கொண்டிருந்தது ஒரு யானை.

அடையாளம் கண்டு கொண்டார் Dr.Pattrapol. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பிளாய் தான்க் தான் அது.

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அந்த யானை டாக்டரைப் பார்த்தவுடன் மறக்காமல் நினைவில் வைத்திருந்து அவரை நோக்கி விரைந்து ஓடிவந்தது.

ஓடிவந்த தான்க்கை நோக்கி கையை நீட்டினார் மருத்துவர். அதுவும் தன்னுடைய தும்பிக்கையை நீட்டி அன்பினையும் நன்றியையும் வெளிப்படுத்தியது.

ஒன்றல்ல... இரண்டல்ல...

நூறு மொழிகளில் தன்னுடைய அன்பினை எவரேனும் வெளிப்படுத்தி கேட்டிருக்கிறீர்களா நீங்கள்?

ஒன்றல்ல... இரண்டல்ல...

கோடி சொற்களில் பாசத்தைப் பகிர்ந்து கொண்டதைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?

பாவம்... அந்த யானைக்குப் பிளிறி கத்துவதைத் தவிர வேறேதும் தெரியாது.

ஆயினும் நீட்டிய தும்பிக்கையால் மருத்துவரின் கைகளைத் தடவியபோது அதன் கண்களில் வழிந்த கண்ணீரில் கலந்திருந்த அன்பினையும் நன்றியையும் விவரிக்க ஆயிரம் கவிதைகளாலும் முடியாது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"

  • 843
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்