Support Ads
 ·   ·  971 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கோடையை எப்படி சமாளிப்பது?

கோடையை எதிர்நோக்க தொடங்கியிருக்கிறோம். இந்த சூழலில் உடல் ஆரோக்கியம் குறித்து நினைக்கும் இல்லத்தரசிகள் வீட்டில் இருக்கும் வளரும் சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

கோடைக்காலத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும் போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்கும் போது இதை கவனத்தில் கொள்வது நல்லது.

 குழந்தைகளை அதிகப்படியான வெயில் நேரத்தில் வெளியே விட வேண்டாம். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே அனுப்ப வேண்டாம். மற்ற நேரங்களில் வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டிலோடு அனுப்புங்கள் ஆடைகள் இறுக்கமில்லாமல் தளர்வாக பருத்தி ஆடைகளை மட்டும் போட்டுவிடுங்கள்.

நீரிழப்பு அபாயம்

 பெரியவர்களுக்கு தான் இந்த நீரிழப்பு உண்டாகும் என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை வரக்கூடும். கோடைக்காலங்களில் வியர்வை அதிகமாக இருக்கும். வியர்வை போன்று சிறுநீர் வழியாகவும் உடலில் இருக்கும் திரவம் இழப்பு அதிகரிக்கிறது.

 சிறுவர்கள் இயல்பாகவே போதுமான தண்ணீர் குடிப்பதில்லை. இந்நிலையில் உடலில் நீரிழப்பு என்பது அதிகமாகவே இருக்கும். அதோடு விளையாடுவதால் வியர்வையும் அதிகமாக இருக்கும்.

 குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வந்தால் அவர்களுக்கு நீர்ச்சத்து பற்றாக்குறை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இயன்றவரை குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் கொடுக்க முயற்சியுங்கள். உடன் திரவ ஆகாரமான இளநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சரியான இடைவெளியில் கொடுப்பதன் மூலம் நீரிழப்பு அபாயம் உண்டாகாமல் தடுக்கலாம்.

கொப்புளங்கள்

 வெப்ப கொப்புளங்கள் அதிக உபாதை தரக்கூடியது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் உடலில் கொப்புளங்கள் வரக்கூடும். குறிப்பாக மண்ணில் விளையாடும் குழந்தைகள் வியர்வையோடு மண்ணும் சருமத்தில் ஒட்டிகொள்ளும் போது அவை கொப்புளங்களை ஊக்குவிக்க செய்யும்.

 உடலின் உள்ளும் வெளியும் படும் வெப்பம் கொதித்து கொப்புளங்களாக வெளியேறும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கிவிடும். கொப்புளங்கள் பரவக்கூடும். இது மிகப்பெரிய உபாதையாகவே இருக்கும்.

உணவு மற்றும் நீர் மூலம் பரவும் #நோய்கள்

 பொதுவாக மழைக்காலங்களில் தான் நீரில் பரவும் நோய்கள் அதிகமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் கோடை காலங்களிலும் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் குழந்தைகள் வெளியில் சாப்பிடும் போது சுகாதாரமற்ற நிலையில் தெருவோரங்களில் சாப்பிடும் போது உண்டாக வாய்ப்புண்டு.

 குழந்தைகளுக்கு உணவு வழியாகவும் ஆரோக்கிய குறைபாடு உண்டாகலாம். பாக்டீரியாக்கள் வெப்பமான நேரத்திலும் மற்றும் ஈரமான சூழலிலும் செழித்து வளர்கின்றன. உணவு நச்சு மற்றும் உணவு தொற்றூ காரணமாக நோய் உண்டாவது கோடைக்காலத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்க செய்வது நல்லது.

சின்னம்மை

 கோடையில் குழந்தைகளுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களில் சின்னம்மையும் உண்டு. இது உடல் முழுவதும் திரவம் நிறைந்த சிறிய கொப்புளங்களாக வரக்கூடும். இது குழந்தைகள் போன்றே நீரிழிவு நோயாளிகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களையும் தாக்க செய்யலாம்.

 இந்த தொற்று நோய் காற்றின் வழியாக பரவுகிறது. இது பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும் போது பரவுகிறது. இந்த பாதிப்பு தீவிரமானால் அது மோசமான பாதிப்பை உண்டாக்கிவிடும்.

ஃபுட் பாய்ஸன்

உணவு வீட்டில் தயாரிக்கும் போது கவனம் தேவை. ஏனெனில் கோடையில் ஃபுட் பாய்ஸன் என்பது கோடையில் பரவும் மற்றொரு நோய் ஆகும். இது அசுத்தமான உணவு தண்ணீரின் மூலம் பரவக்கூடும் என்றாலும்  சமைத்த உணவு கோடை காலத்தில் விரைவாக கெட்டுப்போகும் அது ஃபுட் பாய்ஸன் உண்டாக்கலாம்.

  • 329
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்