Support Ads
 ·   ·  1126 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

வெற்றியின் இலக்கு (குட்டிக்கதை)

ஒரு ஊரில் தர்மன் என்ற ஒரு தொழில் அதிபர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான்.

அவன் ஒரு நாள் தன் தந்தையிடம் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு தர்மன், தன் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்றார்.

தோட்டத்திற்கு சென்று அங்கு மூடி வைத்திருந்த ஒரு கூடையை அப்படியே தூக்கினார்.

 அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த கோழிகள் அனைத்தும் சுதந்திரம் கிடைத்ததென்று நினைத்து தோட்டத்திற்குள் தலைதெறிக்க ஓடின.

 உடனே தர்மன், தன் மகனிடம், நீ விரைந்து சென்று அந்தக் கோழிகளைப் பிடித்து வரும்படி கூறினார்.

 அவனும் அந்தக் கோழிகளை விரட்டிக்கொண்டு கோழிகளின் பின்னாலேயே ஓடினான்.

 அடைபட்டுக் கிடந்த கோழிகள் தோட்டத்தில் நான்கு திசைகளிலும் மாறி மாறி ஓடிக் கொண்டு இருந்தன.

 கோழிகள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் இருந்ததால் தர்மனின் மகனுக்கு எந்தக் கோழியைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்து போய் வந்தான்.

தன் தந்தையிடம் என்னால் எந்த கோழியையும் பிடிக்க முடியவில்லை என்று சோகமாகச் சொன்னான்.

தர்மன் சிரித்துக் கொண்டே, மகனே! அதோ அந்த சிவப்பு நிறக் கோழியை மட்டும் துரத்திச் சென்று முதலில் பிடித்து வா.

 பிறகு மற்ற கோழிகளைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

அவனும் தன் தந்தைக் கூறியது போலவே, அந்த சிவப்பு நிறக் கோழியை மட்டும் குறிவைத்து துரத்திச் சென்றான்.

 சில நிமிடங்களிலேயே அந்த சிவப்பு நிறக் கோழி அங்கும் இங்கும் ஓடி ஓடி களைப்படைந்து  ஒரு இடத்தில் நின்றது.

உடனே அவன் அந்த சிவப்பு நிறக் கோழியைப் பிடித்து கொண்டான்.

 சிவப்பு நிறக் கோழியை பிடித்து வந்த தன் மகனைப் பார்த்து, தர்மன் நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இங்கே விடை கிடைத்து விட்டது என்றார்.

அவருடைய மகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பா, நான் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

அதற்கும் இந்த கோழியைப் பிடித்து வந்ததற்கும் என்ன சம்மந்தம் என்று சற்று விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டான். 

 உடனே தர்மன்,  நீ ஒரு சிவப்புநிறக் கோழியை மட்டும் குறி வைத்து துரத்திச் சென்றதால் நீ மிக எளிதாக அந்த சிவப்பு நிறக் கோழியைப் பிடித்து வந்து விட்டாய் அல்லவா,

 அதேபோல் தான் ஏதேனும் ஒரு இலக்கை தீர்மானித்துக் கொண்டு அந்த இலக்கை அடைவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.

தத்துவம் :

எளிதில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒரு இலக்கை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

  • 115
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்