·   ·  1579 posts
  • 3 members
  • 3 friends

குரு பகவானின் பொன்னான பார்வை இந்த 6 ராசிக்காரர்களுக்கு.....

குரு பகவான் மேஷ ராசியில் வலிமையான நிலையில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் கன்னி, விருச்சிகம் மகரம் ராசிக்காரர்களை பார்வையிடுகிறார். குரு பகவான் பார்வையால் 2024 ஆண்டில் வெற்றியை ருசிக்கப்போகும் 6 ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம்.

மேஷம்: 

ஜென்ம குரு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் குரு பகவான் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் பொருளாதார விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்துச் செயல்படுங்கள். யாரையும் நம்பியும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்க வேண்டாம். அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அலுப்பும் சலிப்பும் ஏற்படும் என்பதால் உற்சாகமாக செயல்படுங்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்வீர்கள். வெற்றிகள் குவியும். இழுபறியாக இருந்த சொத்துகள் கைக்கு வரும். வீட்டில் வசதிகள் பெருகும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்குசெல்லப் போவதால் பண வருமானம் அதிகரிக்கும்.

 சிம்மம்: 

ஒன்பதில் குரு ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு. நல்ல வாய்ப்புகள் தானாக தேடி வரும் பாக்கியங்கள் உங்களை தேடி வரும். வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு யோகம் என அனைத்து விதத்திலும் அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பார்வையால் திடீர் பண வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கும். சொந்தமாக வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். 2024ஆம் மே மாதத்திற்கு பிறகு பத்தாம் வீட்டில் குரு பதவி யோகத்தை தரப்போகிறார். 

கன்னி: 

2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார். தனது பொன்னான பார்வையால் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும். 

துலாம்: 

களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் குரு பயணம் செய்கிறார். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு குரு பகவானின் பார்வை கிடைக்கிறது. உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்கள் ராசியை பார்த்தாலும் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். சிலருக்கு திடீர் பணவரவு வரும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவசியமில்லாத வெளியூர் பயணங்களை தள்ளிப்போடுங்கள். 

விருச்சிகம்: 

2024ஆம் ஆண்டு முதல் குரு பகவான் களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குரு பார்வையால் தொட்டது துலங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திருச்சி சென்று சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தால் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு: 

குரு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதுடன் அவரது பார்வையும் கிடைப்பதால் தனுசு ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும் எதிர்பார்ப்பை விட கூடுதலாகவே நடக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமணம், சுபகாரியம் அற்புதமாக நடக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் தேடி வரும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் வரும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

மகரம்: 

2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வீடு, இடம் மாற்றம் உண்டாகும். அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஏழரை சனியால் சிரமப்பட்டாலும் குரு பகவானின் பார்வை குதூகலத்தை தரப்போகிறது. 

  • 358
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங