- · 1 friends
-

புத்திசாலித்தனம் எப்போது ஆபத்தாக மாறும்?
ஒரு பிராடு சாமியார்,ஒரு அரசியல் வாதி,ஒரு இயற்பியல் பேராசிரியர் என்று மூவருக்கு கில்லட்டின் இயந்திரத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
முதல்ல பூசாரி -
சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?
நான் கும்புடுற சாமி என்னய காப்பாத்தும்.
மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.
சரி!இறங்கு.பொழைச்சுப்போ!
நெக்ஸ்ட்!
அரசியல்வாதி.
சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?
என் நாடும் என் தலைவனும் என் உசுரை காப்பாத்துவாங்க.
மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.
சரி!இறங்கு.பொழைச்சுப்போ!
நெக்ஸ்ட்!
சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?
யெஸ்!
சொல்லு?
ஏ முட்டாப் பசங்களா!அந்த கில்லட்டின் கத்தி இறங்குறப்போ முடிச்சு ஒரு இடத்துல லாக் ஆகி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுடுது.இதை பாக்க துப்பில்லே!
செக் பண்ணுங்கப்பா!
ஆமாங்க.உண்மைதான்.அவரு புத்திசாலி.
சரி செஞ்சாச்சு!
சரி!ஸ்டேஜ்ல ஏறு!
லீவரை இழு!
சக்ஸஸ்!