Support Ads
Main Menu
 ·   · 911 posts
  •  · 5 friends
  • I

    9 followers

நாம் மகிழ்ச்சியுடன் வாழ ஆரோக்கியமே அவசியம்

தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம்.  


இன்றைய உலகில் பெரும் பிரச்சினை தொற்று நோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம்.


நாம் சுத்தமாக இல்லாவிடில் நோயாளியாகி விடுவோம். நல்ல ஆரோக்கியம் என்பது மிகப் பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும். ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோஷமான மனிதனின் வெற்றியின் ரகசியமாகும். ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். 


சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதனால் ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும். சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை உண்டாக்கி வாழ்வை இருளாக்கி விடும். நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கின்ற குடும்பத்தினர் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். 


வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் உளவியல் ரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும்.   ஊட்டசத்துள்ள உணவுகளை உண்ணல், நிம்மதியை தருகின்ற வேலை, தரமான சுகாதார சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் இவை அனைத்தும் கிடைக்க பெறுவதே சிறந்த நலவாழ்வாகும். 


சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப் போது கிருமி நாசினி ஜெல் அல்லது சோப் போட்டு கையைக் கழுவக்கற்றுக் கொடுங்கள். மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும், பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும்.


நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நம் உடல் நலத்தில் நம் உடுத்தும் ஆடைகளுக்கும் பங்குண்டு. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் நன்றாகத் துவைத்த, தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். தூய்மையான ஆடை நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.


உடல் சுத்தத்தில் கவனம் செலுத்துவதுபோல நாம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தூய்மையான காய்கறிகள், சமையல் பொருள்களைப் பயன்படுத்தியே உணவு செய்ய வேண்டும். உணவு தயார் செய்வதற்கு முன்பும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உணவுப் பொருள்களை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். 


வெளியில் உள்ள கடைகளில் சாப்பிட நேரும் சமயங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளதா என்பதை அறிய வேண்டும். அதன்பின்னர் உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். சாப்பாடு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர் தூய்மையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 75
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
    குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
    கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
    உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
    சுவையான சம்பவம்...
    கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
    வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
    ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
    சின்னப் பையன்     (குட்டிக்கதை)
    இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
    வெற்றிக்கான சூத்திரம்
    தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
    பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
    தூக்கமின்மைக்கான காரணங்கள்
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
    வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
    வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
    ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
    பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
    நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
    ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
    முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
    விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
    அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
    ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
    இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
    எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
    Ads
    Latest Posts
    சிப்பிக்குள் முத்து - குஞ்சரம் அம்மா (கதையல்ல.... நிஜம்)
    ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்
    பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்
    பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்.ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 23 ஆம் திகதி மேஷம்Aries புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்ப
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 9.12.2023.  சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 05.24 வரை ஏக
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 8, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 8, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 22 ஆம் திகதி மேஷம்Aries  காப்பீட்டுத் துறைகளில் லாபம் அதிகரிக்கும். மனதி
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.06 வரை த
    எப்படி இருக்கணும் தெரியுமா?
    இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கணும்,புரட்டி போட்டாலும் தோசை மாதிரி பொறுமையா இருக்கணும்,உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சிய
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி மேஷம்Aries எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்க
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 7.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 02.23 வரை ந
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 6, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 6, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 20 ஆம் திகதி மேஷம்Aries மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீ
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 12.21 வரை அஷ்
    காலச் சக்கரம் ----- வாழ்க்கையின் நிதர்சனம்
    இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூடபரவா
    குரங்குகளின் விரதம் (குட்டிக்கதை)
    ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.  எனவே தலைவர் குரங்கிடம் போய் ம
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 5, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 5, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 19 ஆம் திகதி மேஷம்Aries குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 5.12.2023. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் அஷ்டமி. 
    Ads