·   ·  2155 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

முருகப் பெருமானின் அருளை பெற அருமையான இரண்டு வழிகள்

மனிதனின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதில் முருகப் பெருமானுக்கு நிகரான கடவுள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதனாலேயே பெரும்பாலோனரின் இஷ்ட தெய்வமாகிறார். முருகா என்று மனம் உருகி கூப்பிடும் குரலுக்கே வந்து நின்று அவர்களின் தேவைகளை உடனே நிறைவேற்றி தரக்கூடிய அரும்பெரும் கடவுளாக திகழ்பவர் இந்த கந்த கடவுள். முருகப் பெருமானை ஒரே ஒரு மூல மந்திரத்தின் மூலம் பூஜித்து அவரின் அருள் பார்வையை முழுதாக பெற முடியும் என்றால் அது எத்தனை பெரிய விஷயம். அந்த மந்திரம் குறித்த தகவலை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். முருகர் வழிபாடை செய்வதற்கு இன்னொரு சிறப்பு காரணமும் உண்டு. குரு பார்க்கின் கோடி நன்மை உண்டு என்ற பழமொழியை அறியாதவர் எவரும் இல்லை.

 

ஒருவருடைய ராசியில் குரு பகவானின் அருட்பார்வையானது பட்டு விட்டால் அவர்கள் வாழக்கூடிய ராஜபோக வாழ்க்கையை யாராலும் தடுக்க முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த குருவிற்கு குருவாக விளங்கக்கூடியவர் எனில் அது கந்த கடவுள் தான். ஆகையால் தான் குரு ஸ்தலமான திருச்செந்தூரில் கந்தக்கடவுளான முருகர் குருவாகவே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

முருகனுடைய கடைக்கண் பார்வை முழுவதுமாக கிடைத்து உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் தூரப் போக வேண்டும் எனில் நிச்சயம் திருச்செந்தூர் ஆலயம் சென்று முருகனை தரிசித்து அங்கு ஒரு மணி நேரம் அந்த ஆலயத்தில் அமர்ந்து அவரின் அருளை பெற்று கொள்ளலாம். அங்கு எதை வேண்டி செல்கிறோமோ அதை நிச்சயம் தரக்கூடிய தெய்வமாக இவர் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்த வழிபாடை நாம் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 யிலிருந்து 7 செவ்வாய் ஓரையில் செய்வது மிகவும் சிறப்பு. செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். ஆகையால் அந்த நாளில் அவருடைய இந்த நாமத்தை உச்சரித்து வேண்டுவது அதிக பலன்களை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை காலையிலே எழுந்து உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாட்டிற்கு தயாராகி விடுங்கள். 

முருகர் படத்திற்கு செவ்வரளி மாலையை சூட்டி 2 அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த ஏதேனும் எளிமையான நெய்வேத்தியத்தை படைத்த பிறகு வெற்றிலை, பாக்கு, பூப்பழம், ஊதுபத்தி என பூஜைக்கான சகலத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு முருகரின் திரு உருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து மனதார இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். 

ஓம் ளெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் கீலிம் க்ளெம் ளெளம் நமஹ என்ற இந்த மூல மந்திரத்தை ஒரே ஒரு முறை மனதார முருகனை நினைத்து உருகி சொல்லிய பின் உங்களுடைய எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அதையும் நினைத்து நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த வழிப்பாட்டை முருகர் ஆலயத்தில் சென்று செய்தாலும் சிறப்பு அங்கு இதே போல செவ்வரளி மாலையை வாங்கி கொடுத்து முருகருக்கு முன்பாக நெய் விளக்கு தீபம் வைத்து விட்டு அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபித்து வேண்டினாலும் இன்னும் கூடுதல் பலன்களை பெறலாம். 

  • 315
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங