·   ·  987 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தேங்காய் சட்னி சுவையாக இருக்க காரணமான இரண்டு பொருள்கள்

சட்னி வகைகளை நாம் வீட்டில் செய்வதற்கும் ஹோட்டல்களில் செய்வதற்கு நிறையவே வித்தியாசம் உண்டு. ஒரே தேங்காய் சட்னியை நாம் வீட்டில் அரைக்கும் போது ஒரு விதமாகவும், ஹோட்டலில் செய்யும் போது ஒரு விதமாகவும், வெளியில் ரோட்டு கடைகளில் கிடைக்கும் சட்னி வேறு விதமாகவும் இருக்கும். உடுப்பி ஹோட்டல்களில் செய்யப்படும் தேங்காய் சட்னி எப்படி அரைப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். 

முதலில் ஒரு கைப்பிடி அளவு புதினாவையும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியும் நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக தேங்காய்யை துருவி மூன்று டேபிள் ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் பிரஷ்ஷாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதன் பின்புறம் இருக்கும் கருப்பு நிறத் தோல் வராமல் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். 

அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு சுத்தம் செய்து வைத்த கொத்தமல்லி புதினாவையும் சேர்த்து லேசாக நிறம் மாறாதவாறு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதே கடாயை அடுப்பில் வைத்து நான்கு பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் அதிகம் தேவை என்பவர்கள் பச்சை மிளகாயின் அளவை கூட்டியோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். 

இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் பச்சை மிளகாயுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.  பின்னர் ஒரு சிறிய சைஸ் புளியை இதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை எல்லாம் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து விடுங்கள்.

மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்தவற்றை சேர்த்த பிறகு மூன்று டேபிள் ஸ்பூன் உடைத்த கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தேங்காயையும் சேர்த்த பிறகு அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சட்னி அரைத்த பிறகு கடைசியாக முதலில் வதக்கி வைத்த புதினா கொத்தமல்லியை சேர்த்த பிறகு இப்போது அதிகம் அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துப் பிறகு இந்த ஒரு பவுலில் மாற்றி விடுங்கள். 

இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பை சேர்த்து விடுவோம். அதற்கு அடுத்து தாளிப்பு கரண்டியை வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு காய்ஞ்ச மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி விடுங்கள். சட்னியில் நாம் கொத்தமல்லி புதினா இலை இரண்டும் சேர்த்ததுதான் இதன் தனி சுவைக்கு காரணம்.

  • 68
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்