·   ·  8243 news
  •  ·  5 friends
  • I

    9 followers

புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியைச் சந்தித்தார்

புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றிருக்கும் தேசபந்து தென்னகோன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியைச் சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

அதனையடுத்து புதிய பொலிஸ்மா அதிபர் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினார்.

  • 502
  • More
Comments (0)
Login or Join to comment.