- · 5 friends
-
I

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ம.பரமேஸ்வரன் நீக்கப்பட்டார்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டமையினால் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புறிமையிலிருந்து ம. பரமேஸ்வரன் (ஈசன்) நீக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் ம. பரமேஸ்வரன் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீதான முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அந்நபரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மத்தியகுழு பரிசீலித்து அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.
இத்தீர்மானம் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.