சினிமா செய்திகள்
என்.எஸ்.கிருஷ்ணனின் சமயோசித யோசனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.வெளி
நகைச்சுவையில்  விசுவரூபம் எடுத்தவர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்....... வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்ப
’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறது ‘விடாமுயற்சி’ டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுய
‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கம்
“இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்ட
தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி
பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிதுன் தா என்றும் அழைக்கப்ப
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
Ads
 ·   ·  1503 news
  •  ·  0 friends
  • 1 followers

பொதுத் தேர்தலில் இளைஞர்கள், மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் பெஃரல் விடுத்துள்ள கோரிக்கை

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல் அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெஃரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகின்றது.

நாட்டில் போராட்ட களத்தின் பின்னர் இடம்பெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும். நாட்டில் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

எனவே தேர்தலில் இளைஞர்களுக்கும் மகளிருக்கு முன்னுரிமையளிக்குமாறு நாம் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

குறைந்தபட்சம் 2 பெண் வேட்பாளர்களையேனும் முன்னிறுத்துமாறு கோருகின்றோம்.  சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர்களுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபா மாத்திரமே செலவிட நேரிடும்.

ஏனெனில் சுயாதீன வேட்பாளர்கள் மாத்திரமே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 2000 ரூபா கட்டுப்பணம் அறவிடப்படுகின்றது. இது மிகவும் குறைந்த கட்டணமாகும்.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிடம் கட்டுப்பணம் அறவிடப்படமாட்டாது. 196 பேர் மாத்திரமே மக்கள் வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஏனைய 29 பேர் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

000

  • 533
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads