சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1399 news
  •  ·  0 friends
  • 1 followers

வளமான எதிர்காலத்தை இளைஞா்களுக்கு கையளிக்கவே நாட்டைப் பொறுப்பேற்றேன் - ஜனாதிபதி தெரிவிப்பு

இளைய தலைமுறையின் ஆலோசனைகளை பெறுவதற்காக மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இளைஞர் மையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த புதிய செயற்திட்டத்தினை இளைஞர் சேவைகள் மன்றத்திடம் ஒப்படைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மஹரகமவில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்திருந்தார்.இவ்விடயம் தொடா்பாக மேலும் தொிவித்த அவா்,

அரசியல் களத்தில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்குவேன். இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகத்தை நிறுவி புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை அதிகரிக்க பாடுபடுவேன் .

ஜெனரல் இசட் தலைமுறையை இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய குழுவாக உருவாக்குவதே எனது விருப்பம்.

இந்த இடத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள். எதிர்காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க வேண்டியது நீங்கள்தான்.

நாம் 5 வருடங்கள் முன்னோக்கிச் சிந்திப்பதா அல்லது 25 வருடங்கள் முன்னே சிந்தித்து நாட்டைக் கட்டியெழுப்புகின்றோமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

சிலர் 2048 பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை என்றார்கள். ஆனால் நாங்கள் 2048 இல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறோம்.

தாய்லாந்தும் வியட்நாமும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் வர்த்தகப் பொருளாதாரமாக மாறியது. ஆனால் நாம் ஏன் அதைப் பற்றி சிந்திக்கவில்லை?

ஆனால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை எங்கு பலப்படுத்துவது என்பதை இப்போது நாம் சிந்திக்க வேண்டும். 2020 தேர்தலுக்காக நாங்கள் வாக்களித்தோம், ஆனால் எங்கள் நம்பிக்கை ஏமாற்றமடைந்ததாக இளைஞர்கள் கூறுகிறார்கள்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தோம் ஆனால் எங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என மற்றுமொரு குழு கூறுகின்றது. அதனால்தான் எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்கிறார்கள்.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை இருப்பதாகவும் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை காணாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டேன்.

இதன் விளைவு ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி. அப்போது நான் உண்மையைச் சொன்னதால் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் நான் அரசியலை விட்டு விலகவில்லை.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்த போது உங்களுக்கு எதிர்காலத்தை வழங்குவதற்காகவே நாட்டைப் பொறுப்பேற்றேன்.

எனவே நாம் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது குற்றமாகும்.

இந்த முடிவு உங்கள் எதிர்காலம்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமைகு

000

  • 1743
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads