·   · 50 jokes
  •  · 5 friends
  • I

    9 followers

படித்ததில் ரசித்தது

கட்டின மனைவிய என்னன்னு நினைச்சீங்க?????? 
கணவன்: நான் கொஞ்சம் bank வரைக்கும் போயிட்டு வந்துடறேன்
மனைவி: ம்ம்ம்! சரி!
(ஒரு முக்கால் மணி நேரம் கழித்து)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? Bank வேலை முடிஞ்சுதா?
கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வரேன்.
மனைவி: அப்ப சரி! வரும்போது எனக்கு ப்ரஷர் மாத்திரை ஒரு 1மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க!
(15 நிமிடம் கழித்து)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா?
கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளில வரேன்.
மனைவி: அப்ப சரி! வரும்போது 1 லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க! சொல்ல மறந்துட்டேன்!
(கணவன் பாலையும் வாங்கிய பின் ஒரு இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக் கொண்டிருக்க, மறுபடியும்)
மனைவி: ஏங்க! பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?
கணவன்: எல்லா வேலையும் முடிஞ்சுது. ஆவின் பாலகத்துல ஒரு டீ குடிச்சுக்கிட்டிருக்கேன்!
மனைவி: அதானே பாத்தேன்! கரண்டு கம்பத்த பாத்த ஏதோ மாதிரி உங்க வண்டி கடையப் பாத்ததுமே தன்னால நின்னுடுமே!
கணவன்: (சற்றே எரிச்சலுடன்) சரி, இப்ப என்ன பண்ணனுங்கிற?
மனைவி: அங்க உளுந்துவடையும், கெழங்கு போண்டாவும் நல்லா இருக்கும், ஆளுக்கு ரெண்ரெண்டு வாங்கிட்டு வாங்க!
(கணவன் வீடு வந்து சேர்ந்தது மனைவிக்கு தெரியவில்லை. அந்தளவுக்கு சமையலறையில் பிசி!)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா?
கடுப்பான கணவன்: பெட் ரூம்ல ட்ரெஸ் மாத்திக்கிட்டிருக்கேண்டீ! இப்ப என்ன?
மனைவி: (அதே கடுப்பான தொனியில்) வந்ததும் வராததுமா அங்க உக்காந்துகிட்டு ஃபேஸ்புக்கு நோண்டாதீங்க! வந்து தேங்காய ஒடச்சு, துருவி குடுங்க! சாம்பாருக்கு வேணும்!
கணவன் தேங்காயை எடுத்தவாறே மனசுக்குள்: பேசாம சிவன் குடுத்தாப்ல ஒடம்புல பாதிய குடுத்திருக்கலாம்! எங்க போனாலும் கூடவே வந்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிடுவா! வெளில எங்க போனாலும் மனுசன் இங்கதான் இருப்பான்னு எப்படி கண்டுபிடிக்கிறான்னே தெரியல! ஒருவேளை எனக்கே தெரியாம என்னோட ஒடம்புல GPRS Chip வெச்சிருப்பாளோ!



Moral-1 : The God says, wherever you go, I’m there!


Moral-2: கட்டின மனைவி கடவுளுக்கு சமம்!



💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 34
  • More
Comments (0)
    Latest Jokes (Gallery View)
    1-14
    Info
    Created:
    Updated:
    சிறப்பு நகைச்சுவைகள்
    My new wife
    என் புது பொண்டாடி செய்தது
    Happy Mothers day
    Mothers day
    குதிரை பந்தயம்
    குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வ
    ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்."கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு  கடைக்கு கிளம்பினார்.அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்." என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்."என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்