·   · 45 jokes
  •  · 5 friends
  • I

    9 followers

சிரிப்பதற்கு மட்டுமே.....

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும். அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர்.


ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது....


ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க.. ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா வாசனை வந்தது..


அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..விரதம் என்பதால் சாப்பிடவும் முடில... சிக்கன் சாப்பிடும் ஆசையும் தூண்டியது..


அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.


நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..இனி 40 நாட்களுக்கு veg தான்..


நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..


இவரும் மண்டைய ஆட்டினார்.


மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் fry வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..


அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..


எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று புகார் செய்தனர்.


போப் அந்த பஞ்சாபி யை நேரில் அழைத்து அறிவுரை கூறி..சிக்கன் சமைக்காதே னு சொல்லி அனுப்பினார்..


மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி


இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல


எல்லோரும் திபு திபு னு போப்பிடம்.. ஓடினர்..


போப் க்கு என்ன பண்ண னு தெரில..


ஒரு ஐடியா பண்ணார்..


அந்த பஞ்சாபி யை கிறிஸ்துவரா ஞானஸ்னானம் பண்ணி விட்ருவோம் ன்னு முடிவு பண்ணினார்..


மறுநாள் அவரை அழைத்து..கிறிஸ்து பற்றி பல விஷயங்களை எடுத்து கூறி அவரை ஒரு tank இல் மூன்று முறை முக்கி கிறிஸ்துவரா மாற்றினார்..


"உன் பேர் என்ன ?


"சுக்விந்தர் சிங் "


"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு தண்ணி ல மூன்று முறை முக்கி சொன்னார்.


இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்ட கூடாது...ஜீஸ்ஸ் மீது ஆணை ன்னு சொல்ல



சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்


எல்லோருக்கும் நிம்மதி..


போப் க்கும் பெருமிதம்.


அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் வெய்ட் பண்னாங்க..


பஞ்சாபி என்ன செய்றான் னு பாக்க..


மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை வந்தது..


எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட ..


போப் பஞ்சாபியை அழைத்து விசாரிக்க..


நான் ஜீசஸ் மீது..


சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா சிக்கன் சாப்பிடல potato தான் சமச்சேன் னு சொல்ல..


கூட இருந்தவர்கள் மறுத்தனர்..


இல்ல..நான் பொய் சொல்லல னு சாதித்து போய்ட்டார் பஞ்சாபி..


மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது potato ன்னு பஞ்சாபி சாதித்தார்


என்னடா இது...


மக்கள் புகார் பண்றாங்க..


இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...


யாரு பொய் சொல்றா னு தெர்லயே ன்னு போப் மறுநாள் அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன நடக்குது எட்டி பார்த்தார்..

பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார்


ஏன்னா...


அந்த பஞ்சாபி ஒரு full சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி..


இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல ..


Potato..

Potato..

Potato.. ன்னு சொல்லிட்டிருந்தார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 125
  • More
Comments (0)
    Latest Jokes (Gallery View)
    1-14
    Info
    Created:
    Updated:
    சிறப்பு நகைச்சுவைகள்
    My new wife
    என் புது பொண்டாடி செய்தது
    Happy Mothers day
    Mothers day
    குதிரை பந்தயம்
    குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வ
    ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்."கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு  கடைக்கு கிளம்பினார்.அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்." என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்."என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்