·   · 34 jokes
  •  · 3 friends
  • I

    8 followers

தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....


மனைவி :  " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "



கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "



மனைவி :  " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "



மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..



மனைவி :  " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "



கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "



மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "



கணவர் : " சுமார் தான்....! "



கொஞ்ச நேரம் கழிச்சி..



மனைவி :  " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "



கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "



மனைவி :  " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "



 Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..



மனைவி :  " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "



கணவர் : " சேலையைதான் பார்க்கணுமா...?  அதை நீ சொல்லவே இல்ல....



ஸ்டார்ட் மியூசிக்..


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 69
  • More
Comments (0)
    Latest Jokes (Gallery View)
    1-14
    Info
    Created:
    Updated:
    சிறப்பு நகைச்சுவைகள்
    My new wife
    என் புது பொண்டாடி செய்தது
    Happy Mothers day
    Mothers day
    குதிரை பந்தயம்
    குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வ
    ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்."கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு  கடைக்கு கிளம்பினார்.அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்." என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்."என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்