அமரர் தனபாலசிங்கம் பாக்கியலட்சுமி

  • 1 members
  • 1 followers
  • 1529 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
Added a post 
ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன.ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன.நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது என்றது செவ்வெறும்பு.நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போறேன்;’ என்றது செவ்வெறும்பு.இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், ‘ இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல’ என்று சொல்ல,  இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க போறோம் ’ என்று தன் மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு, சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது.மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து,கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க.?’நான் உன்ன சாகடிக்கல நீயா தான் இறந்துட்டஎன்ன சொல்லுறீங்க..’நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போரடுறத விட்டுட்டு தண்ணீல மூழ்கி இறந்துட்ட. ஆனா நீ மட்டும் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்த நிச்சயம்; எதாவது ஒரு வகையில உதவி செஞ்சு காப்பாத்திருப்பேன்.கடைசியா ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்கோ வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்’ என்றார் கடவுள்.
  • 9
  • 18
  • 43
Added article 
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவருக்கு வந்தது. ஆனால், அதற்கு முன் அவர் மிகவும் ஆக்ரோஷமான மனிதராகவே இருந்தார். அதற்கு காரணம் இரவு, பகல் என ஓய்வில்லாமல் படங்களில் நடித்ததுதான். அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டது.படப்பிடிப்பிற்கே குடித்துவிட்டு வாருவார். தூக்கம் வரக்கூடாது என்பதற்காக ஜர்தா பீடா போடுவார். ஆனால், அப்படி இருந்த ரஜினியை ஒரு பெண் மாற்றியது பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். தர்ம யுத்தம் படத்தின் படப்பிடிப்பு ஒரு கிறிஸ்துவ தொழிலதிபரின் வீட்டில் நடந்தது. அந்த வீட்டில் ரெஜினா வின்செண்ட் என்கிற வயதானவர் தங்கியிருந்தார்.அவருக்கு அந்த வீட்டை படப்பிடிப்புக்கு கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும், அவரின் வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு ரஜினியை பிடிக்கும் என்பதால் மேலே தங்கிகொண்டு கீழ் போர்ஷனை கொடுத்தார். ஆனால், ரஜினி சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வந்தாலும் மதுபோதையில் இருந்தார். படப்பிடிப்பு சரியாக நடக்காமல் இருப்பதற்கு ரஜினிதான் காரணம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.ஒருநாள் அவரை பார்த்த ரஜினிக்கும் குற்ற உணர்ச்சி வர ‘உங்களிடம் பேச வேண்டும்’ என சொல்ல, அந்த அம்மாவும் ‘நானும் உன்னிடம் பேச வேண்டும். தினமும் இப்படி குடித்துவிட்டு வரலமா?. இப்படி வந்தா படப்பிடிப்பு எப்படி நடக்கும்?’ எனக்கேட்க ‘இனிமேல் இப்படி செய்யமாட்டேன் அம்மா’ என ரஜினி சத்தியம் செய்தார். சொன்னதுபோல கொஞ்சம் மாறி இருந்தார் ரஜினி.ரஜினி அப்போது மருத்துவர் செரியனிடம் மனநல சிகிச்சையும் பெற்றுவந்தார். ஒருநாள் செரியனிடமிருந்து அந்த அம்மாவுக்கு போன் வந்தது. ரஜினி மருத்துவமனயில் மிகவும் வயலண்டாக இருக்கிறார். அவர் அம்மா அம்மா என உங்கள் பெயரை சொல்கிறார். நீங்கள் இங்கே உடனே வாங்க’ என சொல்ல ரெஜினா அங்கே விரைந்து சென்றார். அங்கே மருத்துவர்களும், செவிலியர்களும் ரஜினியிடம் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்கள். அந்த அம்மா ரஜினியை சமாதனப்படுத்த ஹாஸ்பிட்டலில் இருந்து ரஜினி வெளியேறி அந்த அம்மாவின் வீட்டுக்கு போனார்.‘நான் இங்கேயே கொஞ்சநாட்கள் தங்கலாமா?’ என ரஜினி கேட்க அந்த ரெஜினாவும் சம்மதித்தார். அடுத்தநாள் நேற்று நன்றாக தூங்கியதாக ரஜினி சொல்ல அது செரியனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த அம்மாவிடம் ‘நீங்கள் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்திட்டீங்க’ என பாராட்டினார். அந்த அம்மா செலுத்திய அன்பில் மாறிய ரஜினி படப்பிடிப்புக்கு ஒழுங்காக போனார். அவரோடு தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி பார்த்துக்கொண்டு, படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வரசொன்னார் ரெஜினா. மொத்தத்தில் ரெஜினா அம்மா பெறாத மகனாகவே ரஜினி மாறியிருந்தார்.அந்த வீடு. அந்த அம்மா மற்றும் குழந்தைகளின் அன்பு என ரஜினி மொத்தமாக மாறினார். ஒருநாள் அந்த அம்மா அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. ’நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?’ என புலம்பிய ரஜினிக்கு நல்ல அறிவுரைகளை சொல்லிவிட்டு போனார் ரெஜினா.சில மாதங்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது ரஜினி நன்றாகவே மாறியிருந்தார். அதோடு, லதாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தார். ரெஜினா அம்மாவுக்கும் மிகவும் சந்தோஷம். ரஜினி திருமண வாழ்க்கையில் நுழைந்து ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்துவிட ரெஜினா அம்மா சமூக சேவகியாக மாறி பல நன்மைகளை மக்களுக்கு செய்தார்.80களில் பிரபலமான சமூக சேவகி இவர். மதர் தெரசா சமூக நல அமைப்பின் சென்னை நகர பொறுப்பாளராக இருந்தவர் இவர். இயற்கை வைத்தியத்தில் பல்வேறு பட்டங்களையும் பெற்றிருக்கார். ஆனாலும், அதை தொழிலாக செய்யாமல் தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்துவந்தார். அவரது அன்பிலும், சிகிச்சையிலும் மாறியவர்தான் ரஜினி.தர்மயுத்தம் படத்தில் ரஜினி பாடும் பாடல் வரிகள் இப்படி வரும்..கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா..முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா..என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா..எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்!…
  • 57
  • 60
  • 60
Added a post 
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மானிப்பாய் - காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில், பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.இதன் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்..இதேவேளை பட்டாரக வாகனம், இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்மை குறிப்பிடத்தக்கது000
  • 131
Added a post 
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளது.அதுமாத்திரமன்றி இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி கூறுகிறது.சில பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சில தரப்பினரின் கூற்றுக்களை நிராகரிப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான பிரமிட் திட்டங்கள் தொடர்பில், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 83 (இ) பிரிவின்‌ ஏற்பாடுகளின்‌ நியதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரைக்‌ கோரியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 124
Added a post 
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிவுறுத்தலானது இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் வயிற்றோட்டம் தொடர்பான நோயாளர்கள் அதிகம் பதிவாகி வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு பாடசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே, பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 110
Added a post 
எத்தனையோ ஜென்மங்களில் எத்தனையோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலொழிய நமக்கு ஒரு ஞானியின் தரிசனம் கிட்டாது. அப்படியே கிட்டினாலும் அவர்கள் ஞானிதான் என்பதை உணர முடியாது. ஏதேனும் ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் ஞானிகள் பெரும்பாலும் சாதாரணமாக இருப்பார்கள் பார்ப்பதற்கு ஒரு பெரிதாக அவர்களிடம் எந்த ஒரு குணநலமும் தெரியாது. அதனால் எளிதில் ஏமாந்து போவோம். நஷ்டம் நமக்குத்தானே ஆக ஏதேதோ சந்தேகங்கள் வந்து நம்மை குழப்பி விட்டு ஒரு ஞானியிடம் இருக்க விடாமல் செய்து விடும். வேறு ஏதேதோ மாயைகளை எல்லாம் உண்மை என்று நம்பிப் போய் விடுவோம். ஜெய் யோகி ராம்சுரத்குமார் -அன்னை மா தேவகி அவர்களின் சத்சங்கம்
  • 206
  • 199
Added a post 
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றதுமாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேராதனை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.ரயில்வே வீதிகள் மற்றும் தொழில்கள் தலைமைப் பொறியாளர் மற்றும் உள்கட்டமைப்பு மேலதிக பொது முகாமையாளர் உள்ளிட்ட பல உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 219
Added a post 
2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
  • 223
  • 211
Added article 
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்கான உடல் அமைப்பு, .பெரிய கண்கள் ,சர்வ லட்சணம் , நல்ல நடிப்பு திறன் ஆகிய அனைத்தும் பொருந்தி இருந்தும் தமிழ் திரையுலகில் பெரிதளவில் பேசப்படவில்லை . இப்படி நாயகிக்குரிய அனைத்தும் உள்ளடக்கிய ஒரு நடிகை பெரிய அளவில் வர இயலாமல் போனது .எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ‘குடும்பம்’ ( 1984 ) படத்தில் விஜய்காந்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். பி.மாதவன் இயக்கிய ‘கரையைத்_ தொடாத_அலைகள்’ (1985 ) படத்தில் நாயகியாகவும் நடித்தவர் தேவிஸ்ரீ.. இதில் இயக்குனர் பி மாதவனின் மகன் கதாநாயகனாக நடித்து இருந்தார் .முதலில் மனோபாலாவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட ‘பொண்ணு புடிச்சிருக்கு’ படத்தில் தேவிஸ்ரீ தான் நடிக்க வேண்டியது . பின்னர் இயக்குனர் கே.ரங்கராஜ் ஒப்பந்தம் ஆனதால் நாயகி மாற்றப்பட்டார் .படத்தில் இந்த வேடத்தில் நடித்தது அப்போதைய மண் வாசனை புகழ் ரேவதி .பின்னர் குறிப்பாக "வாங்க மாப்பிள்ளை_வாங்க" (1984) சங்கர் கணேஷ் இசையில் நடராஜன் குரலில் நடிகர் சிவசங்கருடன் இவர் ஆடிய டப்பாங்குத்து பாடல் " என்னடி_முனியம்மா_உன்_கண்ணுல மை".. பாடல் இன்றளவும் ஃபேமஸ்.பொருத்தமில்லாத படத்தில் பொருத்தி வைக்கப்பட்ட பாடலில் பொருத்தமில்லாத ஹீரோவுடன் ஆடி பாடியும் பாட்டு மட்டும் ஹிட் ஆகி விட்டது . ஹிட் ஆன பாடலில் நாம் இருக்கிறோம் என்ற திருப்தியுடன் தேவிஸ்ரீ இருந்து விட்டார் .பின்னாளில் இந்த "என்னடி முனியம்மா' பாடல் அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் சுஜா வருனி' கவர்ச்சி ஆட்டத்தோடு ரீ மிக்ஸ் செய்யப்பட்டு பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சாகரிகா' என்ற பெயரில் ஆட பொம்மா, மல்லி மொகுடு ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தெலுங்கிலும் இவர் பெரிய அளவில் தடம் பதிக்கவில்லை.தேவிஸ்ரீ இந்திராலயா பிலிம்ஸ் தயாரித்த ‘ஊமைக்குயில்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். இன்னொரு நாயகி இளவரசி . நாயகன் பாக்கியராஜ் அவர்களின் க்ளோனிங் யோகராஜ் என்றொரு நடிகர் . . இந்தப் படமாவது தமிழில் தனக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நம்பினார் தேவிஸ்ரீ.பின்னர் 1990 வெளியான ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் படத்தில் வில்லன் சரண் ராஜ் கெடுத்த அபலைப் பெண்ணாக நடித்து இருப்பார்.மு க ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த சீரியல் பெயர் குறிஞ்சிமலர். இந்த சீரியலில் ஸ்டாலினின் பெயர் அரவிந்தன். தூர்தர்ஷனில்13 பாகங்களாக ஒளிபரப்பான இந்த தொடரில் மு.க.ஸ்டாலின் கதாப்பாத்திரம் பெயர் அரவிந்தன். அந்த சீரியல் தாக்கத்தால், தி.மு.க தொண்டர்கள் அக்காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தனர். இதில் ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து பெரும் பாராட்டுகளைப் பெற்றவர் தேவிஸ்ரீ.தற்போது இவர் சினிமாவில் விட்டு ஒதுங்கி, அமைதியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
  • 226
Added a post 
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலையை 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் வாங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்றையதினம் (22.04.2024) புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இடம்பெற்றது.இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில் பல பகாங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. அதில் சேலை ஒன்றுக்கு 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.000
  • 235
Added a post 
சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் சமூக பொலிஸ் குழுக்களை நியமிப்பதன் உண்மையான நோக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்களை ஒன்று சேர்ப்பதாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இந்த சமூக பொலிஸ் குழுக்களை ஸ்தாபிப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதரவை கிராம மட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல குழுவை அமைக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், இலங்கையில் உள்ள 14,022 கிராம அதிகாரிகளும் இந்த குழு முறையை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 226
Added a post 
இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடும் முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுமுன்பதாக குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட இருந்ததாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 232
Added a post 
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி புதன்கிழமை கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகைதரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் தெரிவித்துள்ளது.ஈரானின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சேர்க்கப்படவுள்ளது.அத்துடன் இத்திட்டம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஈரானிய ஜனாதிபதி தற்போது மூன்று நாள் பயணமாக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை சீர்செய்வதற்காக இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.
  • 242
Added a post 
இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.கொழும்பில் தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இந்த தரைப்பாதை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்பதோடு நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும்.சுற்றுலாவை மேம்படுத்துவது இரண்டு நாடுகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர்,இலங்கையைப் பொறுத்தவரை இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.000
  • 242
Added a post 
நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெளிவுபடுத்தியுள்ளது.யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், அண்மையில் மேற்படி விடயம் சமபந்தமாக பல ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பான உண்மைநிலையை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்குறித்த கர்ப்பிணித் தாய் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது கடமையிலிருந்த வைத்திய அதிகாரியும் குடும்பநல உத்தியோகத்தரும் கர்ப்பிணித் தாயுடன் படகில் கூடவே சென்றுள்ளனர். இவருக்கு படகில் பிரசவம் சம்பவித்தபோது அவர்கள் இருவருமே பிரசவத்தை கையாண்டனர்.தற்போது நயினாதீவு வைத்தியசாலையின் அன்புலன்ஸ் படகு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை திருத்தி பழைய நிலைக்கு கொண்டுவர முடியாதென தொழிநுட்ப ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.எனவே புதிய அன்புலன்ஸ் படகினை பெற்றுக் கொள்ளும்வரை தற்காலிக ஏற்பாடாக பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளை வாடகைக்கு அமர்த்தியே நோயாளர்களை இடமாற்றம் செய்கின்றோம். அவ்விதம் நோயாளர்களை இடமாற்றம் செய்யும் போது நோயாளர்களும் மருத்துவ பணியாளர்களும் மட்டுமே அப்படகில் பயணம் செய்வார்கள். அப்போது வேறு பயணிகள் யாரும் அப்படகில் பயணம் செய்வதில்லைமேற்படி செய்தியில் குறிப்பிட்ட கர்ப்பவதி சாதாரண படகில் அனுப்பப்பட்டதாகவும் படகில் இருந்த பயணிகளே பிரசவம் பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறப்பித்தக்கது
  • 245
Added a post 
சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், காணொளிகளை பார்ப்பதற்காக பயனர்களுக்கு பணம் செலுத்தும் புதிய செயலி குறித்த மேலதிக தகவல்களை வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. டிக்டொக் செயலியை பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.  பாதுகாப்பு காரணிகள் காரணமாக குறித்த தடையை, இந்தியா அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 243
Added a post 
மலேசியாவில் கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை (23) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரோயல் மலேசியன் கடற்படை கொண்டாட்ட நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும் உயிரிழந்தவர்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.M503-3 கடல்சார் செயற்பாட்டு ஹெலிகப்டரில் (HOM) ஏழு பணியாளர்கள் இருந்ததாகவும், மற்றைய ஹெலிகப்டரான M502-6, இல் மூன்று பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் மூன்றாம் திகதிமுதல் ஐந்தாம் திகதி வரை இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவிருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.000
  • 253
Added a news 
கடந்த ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வைர வியாபாரியும் இவரது மனைவியும் தங்களுடைய சொத்துக்களை தான தர்மம் செய்து விட்டு சன்னியாசிகளாயினர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது 12 வயது மகனும் துறவியானர். ஜைன மத சமய தர்மத்தின் படி, இவர்கள் உலகத்தையும் அதன் செல்வங்களையும் பொருளுலகத்தையும் ஆசைகளையும் பாசங்களையும் துறக்க ‘தீஷை’ பெற்றவர்கள். ஆனால், தீஷை பெறுவதற்கு ஃபெராரியிலும் ஜாகுவார் காரிலும் வருவார்கள். அதே போல், 2017-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜைன மத தம்பதியினர் சுமித் மற்றும் அனாமிகா ரூ.100 கோடி பெறுமான சொத்துக்களைத் துறந்து தீஷை பெற்று துறவிகளாயினர். சுமித்திற்கு வயது 35, அனாமிகாவின் வயது 34. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் மைனர். எனவே, இவர்கள் தீஷை பெறக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தடுக்க முயன்றனர். மகளை அத்ரதையாக விட்டு விட்டு இவர்கள் தீஷை பெறுவது மனித உரிமைக்கு எதிரானது என்று அவர்கள் வாதிட்டனர். மகள் இப்யாவுக்கு என்ன ஏற்பாடுகளை இவர்கள் செய்துள்ளனர் என்று குஜராத் மாநில அரசு குழந்தைகள் உரிமைகள் அமைப்பு சிவில் மற்றும் போலீசாரிடம் அறிக்கை சமரிப்பிக்கக் கோரியதும் கவனிக்கத்தக்கது. பிறகு இவர்கள் குழந்தை இப்யாவின் எதிர்காலத்துக்குரியதை ஏற்பாடு செய்து கொடுத்தது உறுதி செய்யப்பட்ட பின்பே தீஷை சாத்தியமானது. மேலும், அனாமிகாவின் உறவினர் ஒருவர் குழந்தையை வளர்க்க தானே மனமுவந்து ஒப்புக் கொண்ட நற்செய்தியும் வெளியானது. இதன் பின்னணியில் பார்த்தோமானால் சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக இன்னுமொரு குஜராத் தொழிலதிபரும் அவரது மனைவியும் ரூ.200 கோடி சொத்துக்களைத் துறந்து சன்னியாசம் பெற்றுக் கொண்டனர். இந்த தம்பதியினர் குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரி என்ற இந்த தொழிலதிபர் கட்டுமானத் தொழிலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 200 கோடி ரூபாய் சொத்துக்களை தான தர்மத்துக்கு எழுதி வைத்து விட்டு தீக்‌ஷை பெற்றார். இந்த தம்பதியினரின் 19 வயது மகள், 16 வயது மகள் இவர்களுக்கு முன்னரே 2022-ம் ஆண்டிலேயே துறவறம் மேற்கொண்டு விட்ட்னார், தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை என்ற பழமொழி தலைகீழாக்கப்பட்டு, வாரிசுகள் எவ்வழியோ பெற்றோர் அவ்வழி என்று இவர்கள் மகன், மகள் துறவறத்தினால் தாங்களும் துறவறம் மேற்கொண்டனர். ஜைன மத துறவற தர்மத்தின்படி இவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது, அடுத்தவர் கொடுக்கும் உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும். மிகப்பெரிய வர்த்தக சமூகமான ஜெயின் சமூகத்தினர் தங்கள் மதத்தின் அறவொழுக்கங்களுக்கு ஏற்ப வாழ முடிவு செய்து வருவது ஜைன மத தலைவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு ஜைன சமூகமே இதனை எண்ணி பெருமைப்படுகிறது.
  • 261
விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது. இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, "இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது.ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க, இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்.படித்ததில் பிடித்தது..👍
  • 243
காலை வணக்கம்
  • 244
  • 248
Added a post 
ஒரு ஊரில் ஒரு இளைஞன், சோம்பேறியாய்த் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏதாவது சொன்னால் தர்க்கம் செய்வான். படித்திருந்தும், வேலைக்குப் போகாமல் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு சமயம் அந்த ஊர்க்கோவிலில் ஒரு திருவிழா நடந்தது. இடைவிடாத 'கிருஷ்ண நாம ஜபம்' என்று ஒரு நாள் ஏற்பாடாகி இருந்தது. "கிருஷ்ண நாம ஜபத்தில்" தம்மை ஈடுபடுத்திக் கொள்ள, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.இந்த இளைஞனோ, " இந்த கிருஷ்ண நாமத்தில் அப்படி என்னதான் இருக்கிறதோ?" என்று நினைத்தான். அருகிலிருந்த பெரியவர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டான். அவரும், "அது மிகவும் உன்னதமான நாமம்" என்று கூறினார். அந்த இளைஞன், " இதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை, உங்கள் கிருஷ்ணனால் என் பசிக்குச் சோறு தர முடியுமா?" என்று கேட்டான். பெரியவரும், " கிருஷ்ண நாமம் சோறு மட்டுமல்ல, வேண்டிய அனைத்தையும் கொடுக்கும், மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த நாமத்தை ஜபித்துப் பார்" என்று கூறினார்.அவனுக்கு அதில் துளியும் நம்பிக்கையில்லை. இருப்பினும், அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்று, ஒரு மரத்தடியில் தனியே அமர்ந்து, "கிருஷ்ண, கிருஷ்ண" என்று ஜபிக்க ஆரம்பித்தான். அப்போது ஏதோ சத்தம் வரவே, சிங்கம், புலி என்று பயந்து மரத்தின் மீது ஏறிக் கொண்டு மீண்டும் "கிருஷ்ண, கிருஷ்ண" என்று சொல்லத் தொடங்கினான்.ஒரு வழிப்போக்கன் அந்த வழியே வந்து, மரத்தடியில் அமர்ந்து, தான் கொண்டு வந்த கட்டு சாதத்தைத் தின்று விட்டு, இளைப்பாறிவிட்டுச் சென்றான். கீழே இறங்கி வந்தவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த வழிப்போக்கன் இன்னொரு கட்டு சாதத்தை மறந்து விட்டுச் சென்றிருந்தான். கிருஷ்ண நாம மகிமையால் தான் பசிக்குச் சோறு கிடைத்தது என்று மகிழ்ந்து, அதை உண்ணப் போனான். அவனது தர்க்கஅறிவு அப்போது எட்டிப் பார்த்தது. உண்மையிலேயே கிருஷ்ண நாமத்திற்கு மகிமை உண்டென்றால், இந்த சாதத்தை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படட்டும், அது வரை சாப்பிடக் கூடாது, பசித்தாலும் பரவாயில்லை என்று எண்ணினான். அப்போது மீண்டும் ஏதோ சத்தம் வரவே, சாதத்தைக் கீழே வைத்துவிட்டு அவசர அவசரமாக மரத்தின் மீது ஏறி மீண்டும், 'கிருஷ்ண, கிருஷ்ண' என்று ஜபிக்கத் தொடங்கினான்.இப்போது அங்கே ஒரு கொள்ளைக்கூட்டம் வந்தது. மரத்தடியில் அவர்கள் அமர்ந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களைக் கீழே இறக்கி வைத்தனர். பின்னர், யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். பின்னர் மரத்தின்மேல் பார்த்தனர். அங்கே இந்த இளைஞன் அமர்ந்திருந்தான். அவனைக் கீழே இறக்கி மரத்தில் கட்டி வைத்தனர்.பசியுடன் இருந்த ஒரு கொள்ளையன், அங்கு இருந்த கட்டுசாதத்தைப் பார்த்து, எடுத்து அதைத் தின்னப் போனான். மறவர்கள் தடுத்து, "தின்னாதே! நம்மை வேவு பார்க்க வந்த இவன்தான் இதை வைத்திருப்பான். இதில் ஏதாவது விஷம் கலந்திருப்பான். அதை முதலில் அவன் சாப்பிடட்டும்" என்று கூறி வலுக்கட்டாயமாக அதை அவனுக்குக் கொடுத்தனர். அவனும் சாப்பிட்டான். அதற்குள் தூரத்தில் குளம்புச் சத்தம் கேட்டது. கொள்ளையர்கள், அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் விரைந்து சென்றனர். அவசரத்தில் சிறிது தங்கக் காசுகள் கீழே சிதறின.நம்பிக்கையில்லாமல் "கிருஷ்ண நாமம்" சொன்னதற்கே இவ்வளவு பலனா!! என்று ஆச்சர்யமடைந்த அந்த சோம்பேறி இளைஞன், இனிமேல் உழைக்க வேண்டும், தர்க்கம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான். ஊருக்குத் திரும்பிச் சென்று, உண்மையான செல்வம் கிருஷ்ண நாமம் தான் என்பதை உணர்ந்து, கோவில் உண்டியலில் அந்த தங்கக் காசுகளைப் போட்டான். இனிமேல் பக்தியுடன் இருப்பேன், உழைத்து சாப்பிடுவேன் என்று கிருஷ்ணன் முன் பிரதிக்ஞை செய்தான். வாழ்க்கையில் நன்கு முன்னேறி, நல்ல நிலைமையையும் அடைந்தான்
  • 262