Cinema
Latest Cinema
  •  · 
  •  ·  sivam
நடிகை இலியானா தான் மீண்டும் தாயாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.. குழந்தை பிறந்து 9 நாட்களுக்குப் பிறகு, இந்தச் செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2025-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று தனக்கு குழந்தை பிறந்ததாக அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'நண்பன்' படத்தில் நடித்த இவர், தனது இரண்டாவது மகனுக்கு கீனு ரஃபே டோலன் என்று பெயரிட்டுள்ளார். இதற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  •  · 
  •  ·  sivam
நடிகை அனுஷ்கா விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு, சில வருடங்களுக்கு முன்பிருந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ.5-7 கோடி சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. ரெட்ரோ பட நாயகி பூஜா ஹெக்டே, தமிழில் கனிசமான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அடுத்து கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இவர், ஒரு படத்திற்கு ரூ.2.5-7 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.  நடிகை சமந்தா. இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர், ஒரு படத்திற்கு ரூ.3-8 கோடி வரை சார்ஜ் செய்வதாக கூறப்படுகிறது. நடிகை த்ரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி வெவ்வேறு மொழிகளில் தற்போது நடித்து வர
  •  · 
  •  ·  sivam
1999ல் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யை வைத்து 'குஷி' படத்தை இயக்கினார். அடுத்தடுத்த படங்களின் வெற்றி மூலம் தன்னை தவிர்க்க முடியாக இயக்குநராக நிலைநிறுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா, அதனைத்தொடர்ந்து ‘நியூ', ‘அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி தானே கதாநாயகனாகவும் களம் இறங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘இசை’. இந்தப்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அதன்பிறகு தொடர்ந்து படங்கள் இயக்குவதை தவிர்த்துவிட்ட அவர், முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து தனது தனித்துவமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
  •  · 
  •  ·  sivam
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’ என்றே அழைக்கப்பட்டது. இந்தியில் மட்டும் ‘மஜதூர்’ என்று தலைப்பை இறுதி செய்தது படக்குழு. இந்த தலைப்புக்கு இணையத்தில் பலரும் மிகவும் சாதாரணமாக இருப்பதாக விமர்சனம் செய்தனர்.இதனை பலரும் இணையத்தில் தெரிவிக்கவே, உடனடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தி தலைப்பை மாற்றிவிட்டது. இந்திப் பதிப்புக்கு ‘கூலி - தி பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இது இணையவாசிகளை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பெயர் மாற்றத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய எக்ஸ் தள பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இதில் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்
  •  · 
  •  ·  sivam
அந்த நடிகருக்கு அப்படி ஒரு ரோல் யாரும் தந்ததில்லை. எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு.அதுவும் ஒரு நீதிபதியின்வேடத்துக்கு.தன் மெலிந்த உடலை வைத்து காமெடி காட்சிகள் தான் எடுப்பார்கள் என அவருக்குத் தெரியும். அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போலக்கூட காட்சி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு நீதிபதி வேடத்தை தர...ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். 'நாரதரும் நான்கு திருடர்களும்' என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு. ஜப்பானிய கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை வைத்து எழுத நரசிம்மனோ அதை 'ஓமக்குச்சி' ஆக்கி விட்டார்.குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் ஓமக்குச்சி விசுவை பார்த்து சாப்பிட்டாச்ச
  •  · 
  •  ·  sivam
விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்."நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட்
  •  · 
  •  ·  sivam
கவிஞர் எழுதிய பாடல்களின் வரிகளில் பல காலம் கடந்தும் பொருந்திப்போவதுண்டு.Adidasனு ஒரு ஷூ Brand உங்களுக்கு தெரிந்திருக்கும். உலக ஷூ விற்பனையில் இரண்டாம் இடம். Nike முதல் இடம். ஜெர்மனியில் 19924ல் Adolf dasler, Rudolf daslerனு சகோதரர்கள் தன் அம்மாவோட லாண்டரி ரூம்ல ஒரு ஷூ தயாரிப்பு கம்பெனி தொடங்குகிறார்கள். டஸ்லர் பிரதர்ஸ் ஷூ கம்பெனி என்கிற பெயரில் தொடங்கப்பட்ட கம்பெனி ரன்னிங் செல்லப்பயன்படும் ஸ்போர்ட்ஸ் ஷூ தான் தயாரித்தார்கள். வியாபாரம் செமயா பிச்சுக்கிட்டு போகிறது. அதற்குப்பின்னால் அவர்களின் உழைப்பு சாதாரணம் கிடையாது. பவர் இல்லாத சமயத்தில் சைக்கிள் பெடலை சுற்றி அந்தப்பவரை வைத்தெல்லாம் செய்திருக்கிறார்கள். 1936 ஒலிம்பிக் போட்டிக்கு ஷூசப்ளை செய்யும் அளவுக்கு வளர்கிறார்கள்.ஹிட்லரின் நாஜி படைகளில்
  •  · 
  •  ·  sivam
இது ஒரு நடிகையைப் பற்றிய செய்தி என்றாலும் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லதொரு பண்பு அது !13 வயதிலேயே நடிக்க வந்து விட்டாராம் கே. ஆர். விஜயா.1963 இல் வெளிவந்த முதல் படம் 'கற்பகம்' சூப்பர் ஹிட். தொடர்ந்து வரிசையாக பல படங்கள்.பலப்பல சோதனைகள் அவமானங்கள் அத்தனையையும் தன் வாழ்க்கையில் பார்த்து விட்டார். இரண்டு மூன்று முறை சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிப் போனாலும், யாராவது ஒருவர் மீண்டும் சினிமாவிற்குள் அழைத்து வந்து நடிக்க வைத்து விடுவார்கள்.பழைய அவமானங்களை மறந்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுப்பார் கே ஆர் விஜயா. ஆனால் எதிர்பாராமல் ஒரு சில படங்கள் தோல்வி அடைவது உண்டு.கே. ஆர்.விஜயாவை ஹீரோயினாக நடிக்க வைத்து, இயக்குநர் மாதவன் 'முகூர்த்தநாள்' (1967)
  •  · 
  •  ·  sivam
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு. இவர் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கும்கி’ அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகவும் மாறியது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘இவன் வேற மாதிரி’ திரைப்படமும் விக்ரம் பிரபுவுக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது.'லவ் மேரேஜ்' படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.‍https://youtu.be/_7a6elPVHK0‍டிரெய்லரைப் பார்க்கும் பொழுது 30 வயதை கடந்த
  •  · 
  •  ·  sivam
‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். ஏ.ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தில் துல்கர் சல்மான், பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் படத்திலிருந்து விலகியது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த படம் கேங்ஸ்டர் படம் என கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான பின்னர் கேங்ஸ்டர் கதையம்சத்திற்கான திரைக்கதை அமைக்கப்படவில்லை. இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. கதையின் மையமக்கரு தெளிவாக காட்டப்படாதது, தலைமை கதாபாத்திரத்தில் லட்சியம் என்ன என்பது தெளிவாக வலியுறுத்தப்படாதது படத்தின் ஆகியவை பெரும் பின்னடைவாக கருதப்பட
அனுபமா பரமேஸ்வரன் "எனக்கு நடிக்கத் தெரியாது
  •  · 
  •  ·  Senthuran
சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் "எனக்கு நடிக்கத் தெரியாது என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பத்துவிட்டார்கள். என்னை விமர்சனம் செய்யுங்கள், அதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனம் என் வாழ்வையே மொத்தமாக அழித்துவிடக்கூடாது" என்று வருத்தமாகப் பேசினார்.அனுபமாவிற்கு ஆதரவாகப் பேசிய நடிகை சுரேஷ் கோபி, "இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்னை. நடிகை சிம்ரன் இங்கு வந்தபோது இதேபோலத்தான் இங்கு அவரைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.அசின், நயன்தாரா என இன்று உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகைகளுக்கும் அவர்களது ஆரம்ப காலத்தில் இதேபோலத்தான் பிரச்னைகள் வந்தது. நீங்கள் பெரிய நடிகையாக வலம் வருவீர்கள்''' என்று கூறினார்.
பிரேம் நஸீரின் பெருமைக்குரிய குணம்
  •  · 
  •  ·  sivam
ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக்கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக்கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.படப்பிட
சிவாஜி பற்றி சோ கூறியவை
  •  · 
  •  ·  sivam
ஒரு படபடிப்பில் சிவாஜி நடித்த ஒரு காட்சி படமாக்கப்பட்டது.காட்சி முடித்ததும் உடன் நடித்த நடிகர்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்கள்.ஆனால் சோ மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அனைவரும் கலைந்து சென்ற பின்பு சிவாஜி சோவை பார்த்து கேட்டார். ஏண்டா நீ மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கே என்றார்.சோ சொன்னார்...உண்மையை சொல்லட்டுமா சார்...நீங்க இன்று நடித்த நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங். அவங்கெல்லாம் உங்க கிட்டே நல்ல பேர் வாங்குறதுக்காக புகழ்றாங்க....என்றார்.சிவாஜி எந்த சலனமும் இல்லாமல் கேட்டு, இப்ப கவனி.நான் நடிச்சு காட்டுறேன் என்று எழுந்து நின்று நடித்தார்.மெல்லிய குரலில், உடலில் அதீதமான அசைவுகளின்றி எளிமையான ஆனால் ஆழமான முகபாவங்களில் நடித்து காட்டினார்.சோவால் நம்ப மு
சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,  அவர்கள் வாழ்ந்த நாட்கள்
  •  · 
  •  ·  sivam
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.*10. சட்டமுனி* – 800 வருடம் 1
நரசிம்ம அவதாரம்
  •  · 
  •  ·  sivam
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.கன்றுக்குட்டியானது ஓரிடத்தில் இருந்துகொண்டு தன் தாயை காணாமல் ‘அம்மெ’ என்று கத்தினால், அவ்வொலி தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு வேகமாக ஓடி வந்து கன்று பக்கத்தில் நிற்பது போலவே ‘நரசிம்மா!’ என்றழைத்தால் அக்கணமே தேடிவந்து அருள்புரிவான் என்று நரசிம்மரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் பொய்கையாழ்வார்.நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்ச நிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உட
மறைந்த கிரேசி மோகன் அவர்களைப் பற்றி சில அறியப்படாத செய்திகள்
  •  · 
  •  ·  sivam
வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.யார்கிட்டயும் கடனும்
சிவாஜி நீண்ட வசனம் பேசி நடித்த காட்சிகள்
  •  · 
  •  ·  sivam
சிவாஜிக்கு வசனம் எழுதுவது என்றால் எழுத்தாளர்களின் பேனாக்கள் அதிக மையை செலவழிக்கும்.மற்ற நடிகர்களுக்கு எழுதுவதை விட அதிக வார்த்தைகளை அவர்கள் தேடவேண்டியிருக்கும்.வார்த்தைகள் தான் வடிக்கப்படுகின்றன.சிவாஜி பேசும் போதுஅனலாய் தெறிக்கப்படுகின்றன.கஷ்டப்பட்ட தேடிய வார்த்தைகளுக்கு தங்கமுலாம் பூசியிருப்பார் நடிகர்திலகம் தன் நாவால்..பராசக்தி ..நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த என்ற சொல்லாடலில் அமைதியாக பயணிக்க ஆரம்பிக்கும் குணசேகரனின் நீதிமன்ற வாதம். பயனுள்ள அரசியல் தத்துவம் என்ற வார்த்தையை முடிக்கும் போது தமிழ்நாடு அதிர்ந்தது அன்றே.அந்த நீதிமன்ற காட்சியிலே சிவாஜியின் தனி மனித ஆட்சி தான்.இது சிங்கமடா! இதற்கு தீனி கொடுக்க புது மாமிசம்தான் படைக்க வேண்டும் என்று புறப்பட்டார்கள்வசன கர்த்தாக்கள்.புதிது புதிதாய்
எம்.ஜி.ஆர். பற்றி இயக்குநர் கே. சங்கர் கூறியவை....
  •  · 
  •  ·  sivam
கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் கே.சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட்டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீ்க?’’ என்றார்.அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்தரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை
வசூலில் பலத்த அடி வாங்கிய 'தக் லைஃப்'
  •  · 
  •  ·  sivam
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தத் திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் - கமல் இணைந்து இருந்ததால் ரசிகர்கள் படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க கூடிய கதையாக, எந்த ஒரு திருப்பமும் இல்லாமல், சுவாரஸ்யம் சிறிதும் இன்றி படம் இருந்தது. படத்தைப் பார்த்த பலரும் இது மணிரத்னத்தின் படம்தானா? என கேள்வி எழுப்பினர். மேலும் திரை விமர
பாடல் உருவான விதம்
  •  · 
  •  ·  sivam
அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகாடிங்.பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார்.பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார். அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை
பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் ராஜேஷ்
  •  · 
  •  ·  sivam
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று மன்னார்குடி அருகே பிறந்த ராஜேஷ், ஆரம்பத்தில் கல்வி ஆசான் என்ற பணியைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் மனதுக்குள் ஏதோ ஒரு கலைவேட்கை. அதனால் தான் பலர் செய்யாத முடிவை அவர் செய்தார் – படம்பிடிக்கப்பட வேண்டிய மனிதராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.கே. பாலச்சந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" (1974) படத்தில் அறிமுகம். அதில் சிறிய பாத்திரம். ஆனால் அந்த பாத்திரமே அவரது அடையாளமாக மாறியது. பின்னர், "கன்னிப்பருவத்திலே" (1979) படத்தில் நாயகனாக வலம் வந்து ரசிகர்களின் மனங்களை வென்றார்.சினிமா மட்டுமல்ல, பல துறைகளில் அடையாளம்நடிப்புக்கு அப்பாலும் ராஜேஷ் பலதுறைகளில் தன்னை அடுத்தடுத்த பரிணாமங்களாக மாற்றிக்கொண்டார். உணவகம், நிலம் வாங்கும் வணிகம், சோதிடம் என பல துறைகளை அவர் ஆர்வமுடன் ஈர்த்துக் கொண்
Download Apple Mobile App
Download Apple Mobile App 
Latest Cinema (Gallery View)
25-46