Feed Item
Added a news 

மத்தியபிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அவர் பணியாற்றி வரும் பகுதியில் வசித்து வரும் ஒரு ஆண் நபருக்கும் இடையே பேஸ்புக் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பேசிவந்துள்ளனர். 

 

அந்த ஆண் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வருமாறு பெண் போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இம்மாத தொடக்கத்தில் அந்த பெண் போலீஸ் ஏட்டு சமூகவலைதளம் மூலம் பழகிய தனது ஆண் நண்பனின் சகோதரன் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். 

 

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் அந்த ஆண் நபர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தை அந்த ஆண் வீடியோவாக எடுத்துள்ளான். இந்த செயலுக்கு அந்த ஆண் நபரின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். 

 

இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிட்டுவேன் என்று பெண் போலீசை அந்த ஆணின் தாய் மிரட்டியுள்ளார். அந்த வீடியோவை வைத்து பெண் போலீஸ் ஏட்டிடம் இருந்து பணம் பறிக்க அந்த ஆணின் தாய் முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் போலீஸ் ஏட்டு கடந்த 13-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இந்த புகாரை தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மற்றும் அந்த ஆணின் தாயார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் ஏட்டின் ஆண் நண்பன் மற்றும் அவரது தாயார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  • 587