Feed Item
Added a news 

 ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான உத்தண்ணா. இவர் வழக்கு ஒன்றின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றதால் 14 வயது சிறுமி மற்றும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த உத்தண்ணா, அந்த சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அந்த சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனை எதிர்பாராத அந்த சிறுமி உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் 65 கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்துள்ளனர். அப்போது உத்தண்ணா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் என்பதைக் கண்டு அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களைத் தாக்கி விட்டு அங்கிருந்து உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அவர் மீது கற்களை வீசி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கீழே மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கும்போது அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராய் சோட்டி காவல் துறையினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 444