Feed Item
Added a news 

கிளிநொச்சியில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கிய போது அரச வைத்திய அதிகாரிகள் சிலரின் செயற்பாட்டால் பிரதேச வைத்திய சாலைகளின் பணியாற்றும் அதிகளவானோர் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் ஏமாற்றறத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது 

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும்  சுகாதாரத் திணைக்களப்பணியாளர்களுக்கான எரிபொருள் (பெட்ரோல் )நேற்று(02-07-2022) பிற்பகல் முதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் சுமார் எண்பது  கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் உள்ள ஜெயாபுரம் வேரவில்  முழங்காவில் பச்சிலைப்பள்ளி போன்ற பகுதிகளில் வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் பணியாளர்களும் கிளி நொச்சி  பரந்தன் பகுதிக்கு வருகை தந்து பெட்ரோலை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் பெறுவதற்காக  காத்திருந்தனர்.

                              இந்த நிலையில் வாரந்தம் வழங்கப்படும் பெற்றோல் அளவு வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த அளவைில் மோட்டார் சயிக்கிளுக்கு நிரப்பிய பின்னர் மிஞ்சிய  பெற்றோலை  எடுக்கமுடியாது  என அரச வைத்திய அதிகாரிகளால்  தெரிவிக்கப்பட்டதுடன் துரப்பிரதேசங்களில் இருந்து வந்த வைத்திய சாலை பணியாளர்கள் பெற்றோல் பெற்றுக் கொள்ள முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

  • 349