·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

அதிகாரிகளாலும் அரசினாலும் தனித்து விடப்பட்டிருக்கின்ற பகுதியில் அன்றாடம் பருகும் குடிநீர் பெற்றுக்கொள்வது முதல் போக்குவரத்து வரை தினமும் சிரமங்களை எதிர்நோக்கும் புதுமாத்தளன் பிரதேச கிராமங்களைச் சேர்ந்த மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகாரிகளாலும் அரசினாலும் தனித்து விடப்பட்டிருக்கின்ற எமது பகுதியில் அன்றாடம் பருகும் குடிநீர் பெற்றுக்கொள்வது முதல் போக்குவரத்து வரை தினமும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பிரதேசத்தில் இருக்கின்ற 15 வரையான கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் பெருங்கடல் ஓரமாக அமைந்துள்ள அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவு பிற்பட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களும் அதேபோல முள்ளிவாய்க்கால் தெற்குப்பகுதியில் பகுதியைச் சேர்ந்த மூன்று கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்ற இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அன்றாடம் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கையின் உள்நாட்டு ப் போர் எங்கும் பெற்றதன் காரணமாக வடபகுதியில் பகுதியில் இருந்து முழுமையாக இடம் பெயர்ந்த மக்களும் இந்த பிரதேசத்திலேயே தங்கியிருந்து பெரும் துன்பங்கள் துயரங்களை அனுபவித்த ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அதிகவான பெருங் கடல் பகுதியை பகுதியை ஒரு புறமாகவும் சிறுகடல் பகுதியை மறு புறமுமாகவும் கொண்ட ஒரு பிரதேசமாக அமைந்துள்ள அம்பலவன்பொக்கணை புதுமாத்தளன் பழைய மாத்தளன் பேய் பாறைப்பட்டி வலஞ்சன் கரியல் வயல் தெற்கு பட்டிக்கரை நெல்லி மோட்டை காயா மோட்டை சாலை உள்ளிட்ட 12 கிராமங்களும் அதேபோல முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட சாளம்பன் வலைஞர்மடம் உள்ளிட்ட மூன்று கிராமங்களும் உள்ளடங்கலாக சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த பிரதேசத்திலேயே அமைந்துள்ளன.

இந்த 15 கிராமங்களுக்கும் ஒரே ஒரு பிரதான போக்குவரத்து பாதையாக ஏ 35 வீதியின் இரட்டைவாய்க்கால் சந்தையிலிருந்து சாலை வரைக்குமான சுமார் 13 கிலோ மீட்டர் வீதி பிரதானமான ஒரு பாதையாக காணப்படுகின்றது.இந்தப் பாதையூடாக பயணம் செய்வது என்பது மிகவும் கடினமானது அதாவது எந்த விதமான புனரமைப்புக்களுமின்றி பாரிய குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து செய்ய முடியாத கைவிடப்பட்ட பாதையாகவே காட்சி தருகின்றது.போக்கு வரத்து என்பது அறவே இல்லை இங்குள்ளவர்கள் பாடசாலைக் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவை மற்றும் மருத்துவ வசதி என எதற்கும் புதுக்குடியிருப்பு அல்லது முல்லைத்தீவுக்கு 12 அல்லது 15 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவலம் அதற்கும் போக்குவரத்து வசதிகள் இல்லை இதை விட எல்லாவற்றுக்கும் மேலாக குடிநீர் வசதி என்பது பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது

இந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தாங்கள் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரைக்கும் குடிநீருக்கான நெருக்கடியைத் தொடர்ந்து எதிர் கொண்டு வருவதாகவும் இது ஒரு பழக்கப்பட்ட ஒரு விடயமாகவே காணப்படுகிறது ஆனால் மீள்குடியேற்றத்தின் பின்னர் தமது பிரதேசத்திற்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்வதாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் இந்தத் திட்டம் எதுவும் இப்போது நடைமுறையில் இல்லை அவை அனைத்தும் செயலிழந்து போயுள்ளன.கடற்றொழில் என்ற ஒன்றை மட்டுமே நம்பி வாழும் தங்களுக்கு இப்போது அது கூட பிரச்சனை என்பது என்று குறிப்பிட்டார்கள் அதாவது எரிபொருள் விலையேற்றம் வெளிமாவட்ட மீனவர்களின் அனுமதியற்ற மீன்பிடி இந்திய இழுவை மடி தொழில் என எல்லாமே எங்களை கீழ் நிலைக்கு தள்ளிவிட்டது.

செல்வச் செழிப்போடும் வசதிகளுடன் நாங்கள் வாழ்ந்து கொடிகட்டிப் பறந்தவர்கள் இப்போது போதைப்பொருள் பாவனை கொள்ளை என நாங்கள் விரும்பாத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.இவையெல்லாம் எங்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி கூட எங்களுக்கு எழுந்துள்ளது.எங்கள் கிராமங்கள் பற்றி உலக நாடுகள் கூட ஆய்வுகள் செய்தன உலக நாடுகளிலும் பேசப்பட்டன ஆனால் இன்று எங்களுடைய பிரதேசம் எவரது செவிகளுக்கும் கேட்காத ஒன்றாக மாறிவிட்டது.

எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட நாங்கள் துன்பத்தை சுமக்கின்ற ஒரு அவல நிலையிலேயே காணப்படுகின்றது.எங்களுடைய நிலையை அறிந்து இந்த பிரதேசத்திற்கான பிரதான வீதியாக காணப்படுகின்ற மேற்படி 13 கிலோமீட்டர் நீளமான வீதியை புனரமைத்து தருமாறு கடந்த 11 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதும் இதுவரை ஒரு சாண் கூட புனரமைக்க படாத காணப்படுகின்றது.இறுதி யுத்தம் நடைபெற்ற பிரதேசம் என்பதற்காக இவ்வாறு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றதா? என்ற கேள்வி கூட எங்களுக்கு இருக்கிறது.

ஏனெனில் நாங்கள் அன்று இந்த பிரதேசத்தில் பெரும் மனிதப் பேரவலங்கள் சந்தித்து பெரும் அழிவுகளையும் சந்தித்து இருந்தோம் ஆனால தொடர்ந்தும் அவல வாழ்க்கை வாழும் ஒரு நிலையே காணப்படுவதாகவும் இந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(சு. பாஸ்கரன்)
  • 449
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்