·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்டத்திலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்பதை உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் காடழிப்புக்கள் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.குறிப்பாக எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற பழமையான காடுகள் மரங்கள் கனிய வளங்கள் அழிக்கப்படுகின்றன.  இவ்வாறு அழிக்கப்படும் வளங்கள் மீள் உருவாக்கம் பெற நூற்றாண்டுகள் எடுக்கும் என்பது யாவருமே அறிந்த விடயமாகும்.

இப்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காது அல்லது எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி உணராது இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும்பாலான விவசாய நிலங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் நாளாந்தம் சட்டரீதியற்ற மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதனால் பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட கால போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்களை அழித்து அந்த பகுதியிலே மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.  இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயினால் முறைப்படு செய்யப்பட்டதுடன் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கூட கொண்டு செல்லப்பட்ட போதும் விமோசனம் எதுவும் இல்லையென பாதிக்கப்பட்டவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கரையோரப் பகுதிகளில் மிகவும் தாழ்நிலப் பகுதிகளில் மணல் அகழ்வில் மேற்கொள்ளப்படுகின்றன இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.ஏன்பதுடன் கரையோரப் பகுதிகளில் இந்த மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதால்; கடல்நீர் உட்புகுந்து எதிர் காலத்தில் உவர் நிலங்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் அதிக அளவில் நமது சுற்றுச்சூழலில் பாரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எந்த விதமான குடிநீர பற்றாக்குறையும் இல்லாத பிரதேசங்களில் இன்று குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது.  குடிநீர் கிணறுகளும் உவர் நீராக மாறியிருக்கின்றன.மனிதன் இயற்கை மீது செலுத்துகின்ற ஆதிக்கத்தின் ஒரு விளைவாகவே இது அமைகின்றது.வட மாகாணத்தில் பாரிய நீர்ப்பாசன குளமாக இருக்கும் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வுகளால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை எதிர் நோக்கலாம் என்ற கருத்தை கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த நீதி அமைச்சருக்கு தெரியப்படுத்தபட்டதுடன் அமைச்சர் மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் சட்டம் சார்ந்து செயல்படுவதில்லை என்றும் தொடர்ச்சியாக பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறான இயற்கையின் மீதான பாதிப்புக்கள் மிக மோசமாக ஏற்படுத்தப்படுகின்ற இந்த நிலைமையில் சமுகத்தின் மீதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மணல் கொண்டு செல்லப்படுகின்ற வாகனங்களை செலுத்துவதில் யாரும் வயது முதிர்ந்தவர்கள்; அல்ல மாறாக சிறுவர்கள் இளைஞர்கள்; ஈடுபட்டு வருகின்றதையே காண முடிகின்றது.

இது சிறுவர்களையும் இளம் சமூகத்தையும் சீரழிக்கின்ற ஒரு சட்ட விரோத தொழில்களாகவே இவை காணப்படுகின்றன. குறிப்பாக பாடசாலையை விட்டு இடைவிலகிய அல்லது பாடசாலைகளுக்குச் செல்லாத கிராமப்புறங்களில் இருக்கின்ற சிறுவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வுகளில்; ஈடுபடுவதுடன் வாகனங்களைச் செலுத்திச் செல்கின்றனர்.உதாரணமாக கடந்த டிசம்பர் மாதம்; ஆறாம் திகதி இரவு புளியம்பொக்கணைப் பகுதியில் இருந்து ஒரு யுவதியைக் கடத்திய சம்பவத்தில் இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் அகப்பட்டு அதிலே சாரதியாக சென்ற 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகி இருக்கிறது.இதைவிட பல்வேறு வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொலைச் சம்பவங்கள் வன்முறைகளின் பின்புலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வுகளும் அவற்றில் ஈடுபடுபவர்களும் காணப்படுகின்றனர்.

இயற்கை மீது மனிதன் ஏற்படுத்துகின்ற இவ்வாறான பாதிப்புகள் எதிர்காலத்தில் இயற்கைச் சூழலை மட்டும் பாதிக்கப்போவதில்லை ஒரு சமுதாயத்தை சீர் குலைக்கின்ற சமூகத்தையும் உருவாக்கி விடுவதாகவே அமைந்து விடும் என்பதற்கு இவ்வாறான செயற்பாடுகள் சான்றாகின்றன.(சு. பாஸ்கரன்)

  • 668
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்