·   ·  1983 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

விசித்தரமான வழக்கு (உண்மைச்சம்பவம்)

வீட்டை விற்றுவிட்டு.. புது ஓனருக்கு தெரியாமல் அதே வீட்டில் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்!

சீனாவில் தன்னுடைய வீட்டை புது ஓனருக்கு விற்ற பெண், புது உரிமையாளருக்கு தெரியாமல் 7 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜிங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஜாங் எனும் பெண்மணி. இவர் கடந்த 2016ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை விற்பதாக அறிவித்தார். சிலர் வீட்டை வாங்க முன்வந்தனர். ஆனால் விலை கட்டுபடியாகவில்லை.

சரியான விலைக்காக ஜாங் காத்திருந்தார். கடைசியாக 2019ம் ஆண்டு லீ என்பவருக்கு வீடு மிகவும் பிடித்துப்போய்விட்டது. பங்களா மாதிரி வீடு.. தோட்டம், மரங்கள், காற்றோட்டமான இயற்கை எழில் கொஞ்சும் வசதியுடன் இருப்பதால், வீட்டை ரூ.2.24 கோடி கொடுத்து வாங்கிக்கொள்வதாக கூறினார்.

பத்திரப்பதிவும் செய்யப்பட்டு அதே ஆண்டில் வீடு லீ கைக்கு மாறியது. லீ பரபரப்பான பிசினஸ் மேன். வீட்டில் இருக்கும் நேரம் குறைவுதான். எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் விடுமுறையில்தான் வீட்டில் அதிக நேரத்தை கழிப்பார்.

இப்படியே 7 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் இவர் குடியிருக்கும் வீட்டில் இவருக்கே தெரியாமல் வேறு யாரோ இருப்பது போன்று அடிக்கடி தோன்றியிருக்கிறது.

வித்தியாசமான சத்தங்கள், திடீர் வெளிச்சம் என அமானுஷ்யமாக நடந்திருக்கிறது...

பேய் எதாவது இருக்கும் என்று யோசித்த லீ, அதை ஓட்டுவதற்கு சில விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் இதே பிரச்சனை.

அவருடைய உள்ளுணர்வு, அவரை தவிர இங்கு வேறு யாரோ இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தது. இப்படி இருக்கையில்தான் ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யலாம் என்று முடிவெடுத்து வேலையில் இறங்கியிருக்கிறார்.

வீடுதான் பெருசாச்சே.. எனவே சுத்தம் செய்யும் பணி 2-3 நாட்கள் வரை இழுத்திருக்கிறது. எல்லா அறைகளையும் சுத்தம் செய்த அவர், கடைசியாக தோட்டம் பக்கம் வந்திருக்கிறார்.

அங்கு ஒரு கழிவறை இருந்திருக்கிறது. இதுவரை அவர் அதை பயன்படுத்தியதில்லை.

ஆனால் அதை சுத்தம் செய்து வைத்தால், நண்பர்கள் யாராவது வந்தால் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்று யோசித்து கிளீன் செய்ய கழிவறை கதவை திறந்திருக்கிறார்.

அங்குதான் ஒரு ட்விஸ்ட் காத்திருந்திருக்கிறது.

தோட்டத்தில் இருந்தது உண்மையான கழிவறை கிடையாது. கதவுக்கு பின் ஒரு படிக்கட்டு செல்கிறது. இதை கொஞ்சம் கூட லீ எதிர்பார்க்கவே இல்லை. மனதில் பயம் ஒருபக்கம், மறுபுறம் இந்த படிக்கட்டு எங்கு போகிறது என்கிற கேள்வியும் இருந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு படிக்கட்டில் இறங்கியிருக்கிறார்.

அது ஒரு அறைக்கு அழைத்து சென்றது. அந்த அறை விசாலமாக, ஒரு ஆள் வசிப்பதற்கு ஏற்றார் போல இருந்திருக்கிறது. காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்திற்கான வசதியும் அங்கு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல அறையின் ஒரு மூலையில் மினி பார் இருந்திருக்கிறது. அங்கு உயர்தர சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த லீ-க்கு இந்த வீட்டில் பேய் இல்லை, வேறு யாரோ ஒரு ஆள் இருக்கிறார் என்று தெரிந்துவிட்டது.

அறையை முழுமையாக சோதனையிட்டதில் மற்றொரு மூலையில் இந்த வீட்டின் பழைய ஓனர் ஜாங் இருந்திருக்கிறார்.

இரண்டு பேரும் ஒருவரை பார்த்து ஒருவர் கத்த.. அந்த தெருவே அமர்க்களமாகியிருக்கிறது. லீ உடனடியாக ஜாங்கை வெளியே போக சொல்லியிருக்கிறார். ஆனால், வீட்டை விற்ற பத்திரத்தில் இந்த பேஸ்மென்ட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், எனவே இது எனக்கு சொந்தமானது என்றும் ஜாங் வெளியே போக மறுத்திருக்கறார். விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.

அங்கு நீதிபதி, லீ-க்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஜாங் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், இத்தனை நாள் இங்கு தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

  • 941
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங