- · 5 friends
-
I

"கஜகர்ணம் " - திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன விளக்கம்
"கஜகர்ணம் "அடித்து பார்த்துவிட்டேன். ஒன்றும் முடியவில்லை "
ஒரு செயலை செய்ய முயற்சித்து முடியாமல் போகும் போது ,கடைசியில் பலரும் சொல்லும் வார்த்தை இது. அது என்ன கஜகர்ணம் ?.
அழகாக விளக்கம் தருகிறார் கிருபானந்த வாரியார்.
மனிதர்கள் முன்று வகை உண்டு
1.கஜ கர்ணம்🐘
2.அஜ கர்ணம்🐏
3.கோ கர்ணம்🐂
1. கஜகர்ணம் : -
யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !
அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...
அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
2. அஜகர்ணம் : -
ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும்.
அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
... அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
3.கோகர்ணம் :-
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !
அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .
இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
- திருமுருக கிருபானந்த வாரியார்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·