Support Ads
 ·   ·  1983 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

உலகின் கொடூரமான சடங்குகள்

பிரேசில் நாட்டின் அமேசான் மலைக்காடுகளில் வாழும் 'சதேரே-மாவே' பழங்குடியின மக்கள் தங்கள் இனத்தின் பதின்ம வயது சிறுவர்களை வீரர்களாக உருவாக்கும் நிகழ்ச்சியாக இந்த 'Bullet Ant Glove' என்கிற சடங்கை ஏற்பாடு செய்கிறார்கள். 'புல்லட் எறும்புகள்' என்று அழைக்கப்படும் கொடூர எறும்புகளை இயற்கையான முறையில் மயக்கமடையச் செய்து அவற்றை ஒரு பெரிய கையுறையின் மேற்பகுதியில் நூற்றுக்கணக்கில் விட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுகின்றனர்.

அந்த கையுறையின் மேற்பகுதிக்கும் உள்பக்கத்திற்கும் இடையில் ஒரு மெல்லிய சணல் துணியைக் கொண்டு தடுப்பு அமைக்கப்படுகிறது. அதாவது அந்தக் கையுறையின் உள்பக்கத்திற்குள் எவரேனும் கையை நுழைத்தால், அந்தக் கையுறையின் மேற்பகுதியில் உள்ள அந்த எறும்புகளால் சணல் துணியின் தடுப்பு மூலமாகக் கொட்ட மட்டுமே முடியும், கொட்டி சதையைப் பிய்த்து இழுக்க முடியாது (பாதுகாப்பு கொடுக்கிறார்களாம்).

புதிய வீரர்களை உருவாக்கும் நிகழ்ச்சியாக இந்தத் துன்பத்தைத் தாங்கும் சடங்கினை பின்பற்றுகின்றனர். எறும்புகள் மயக்கம் நீங்கி மீண்டும் விழித்தெழுந்த பிறகு, சிறுவன் தன் கையைக் கையுறையில் நுழைக்க வேண்டும். இந்தச் சடங்கின் நோக்கம் 10 நிமிடங்கள் முழுவதும் கையுறையை அணிந்து எறும்புகளின் கொட்டுகளைத் தாங்குவதாகும். நிகழ்ச்சி முடிந்ததும், எறும்புகளின் விஷத்தால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் கையின் இயக்கம் தற்காலிகமாக நின்று விடும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தச் சிறுவர்கள் 20 முறை இந்தச் சடங்குக்கு உட்படுத்தப்பட்டு அந்த வலியை தாங்க வேண்டும்.

Bullet Ant Glove சடங்கின் போது எறும்பின் கொட்டின் வலியானது ஒரு துப்பாக்கி குண்டு பட்டதைப் போல உணர வைக்குமாம், மேலும் 24 மணி நேரம் வரை இந்த வலி நீடிக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு கடுமையான ஒவ்வாமையின் (allergy) விளைவால் மூச்சு திணறலும் ஏற்படுமாம்.

  • 575
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங