Support Ads
 ·   ·  1625 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

வெற்றிக்கு எது முக்கியம்?

இந்த உலகத்தையே ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டார் அலெக்சாண்டர். ஒரு கட்டத்தில் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான வியாதி வந்துவிட்டது.

அவர் கூடவே வந்திருந்த கிரேக்க வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. அது எந்த வகையான நோய் என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஏனென்றால் இது அந்தப் பகுதியிலேயே இருப்பவர்களுக்கு வரக்கூடிய ஒரு வினோதமான நோய் ஆகையால் அந்த கிரேக்க வைத்தியர்களால் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை.

அலெக்சாண்டர் இருப்பதோ எதிரியினுடைய இடம். பாரசீக மன்னருடைய ஆளுகைக்கு உட்பட்ட இடம் அது. இந்த வியாதியை குணப்படுத்த என்ன செய்வது என்று அனைவரும் யோசனை செய்து செய்து கொண்டிருந்தனர்.

பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்து மருந்து கொடுத்தால் இந்த நோய் குணமாவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர், இருந்தாலும் எதிரி நாட்டுடைய வைத்தியரை அழைத்து எப்படி வைத்தியம் செய்வது என்று அங்கிருந்து அனைவரும் தயங்கினர். ஆனால் அலெக்சாண்டரோ அவரை வரவழைத்து வைத்தியம் பார்ப்பது என்று முடிவு செய்தார்.

முடிவு செய்தது மாதிரியே அரண்மனை வைத்தியரையும் அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பி விட்டார். அரண்மனைவைத்தியர் வந்து அலெக்சாண்டரை பரிசோதனை செய்துவிட்டு அலெக்சாண்டருக்கு வந்திருப்பது என்ன வகையான நோய் என்பதையும் கண்டுபிடித்து விட்டார்.

இந்த நோயை குணப்படுத்தி விடலாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை அதற்கு ஒரு மூலிகை ரசம் தயாரித்து கொண்டு வர வேண்டும், இன்று முடியாது நாளை மூலிகை ரசம் தயாரித்துக் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

சொன்னது மாதிரியே ரசம் தயாரித்து மறுநாள் கொண்டு வந்து விட்டார். இதற்கு இடையில் அலெக்சாண்டர் உடைய தளபதிகளில் ஒருவர் ரகசியமாக எச்சரிக்கை கடிதம் ஒன்று கொடுத்து அனுப்பி இருந்தார். அதில் அந்த வைத்தியர் கொண்டுவரும் மருந்தில் விஷம் இருப்பதாகவும், அந்த மருந்தை அருந்த வேண்டாம், என்றும் அதில் எழுதி இருந்தது.

இதை அலெக்சாண்டர் பார்த்துவிட்டு எந்தவித சந்தேகமும் இன்றி வைத்தியர் கொடுத்த மூலிகை ரசத்தை கடகடவென்று குடித்துவிட்டார்.

அதன் பிறகு அந்த கடிதத்தில் இருந்த விஷயத்தை அந்த வைத்தியரிடம் கூறினார். அதைக் கேட்ட வைத்தியர் ஒரு நொடி திகைத்து நின்று விட்டார் தன்மீது அலெக்ஸாண்டர் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து அந்த வைத்தியருக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

வைத்தியர் கொடுத்தது என்னவோ சுத்தமான மூலிகைரசம் தான், அதில் விஷம் எதுவும் கலக்கவில்லை, அதன் பிறகு அந்த வைத்தியரை பார்த்து அலெக்சாண்டர் கூறினார், நம்பிக்கை என்ற அச்சாணியை வைத்துதான் இந்த உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, எனக்கு எதிரியாக இருந்தாலும் பாரசீக மன்னர் மிகவும் பெரியவர். அப்படிபட்டவர் அரண்மனையில் இருக்கும் அரண்மனை வைத்தியர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும், தொழில் நேர்மை இல்லாதவராக இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் அவரை அரண்மனை வைத்தியராக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான் நான் வைத்தேன், என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதற்கு தகுந்தாற்போல் நீங்களும் நடந்து கொண்டீர்கள் என்று அலெக்சாண்டர் கூறினார் .

இதுதான் மானுட நம்பிக்கை என்பது ஒருவர் மீது நம்பிக்கை வைத்தால் அது உண்மையானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்பிக்கை வைக்க கூடாது.

  • 148
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய