Support Ads
 ·   ·  1274 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

உதாசீனம் செய்து விடாதீர்கள்

ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.

பின்பு அதை மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின் சொத்தான கவிதையை மனநலம் சார்ந்த ஒரு பத்திரிக்கையின் கிருஸ்துமஸ் பதிப்பில் வெளியிட்டார். ஒரு காணொளி கோவையும் இந்த எளிய, அனால் தெளிவான கவிதையை வைத்து தயாரிக்கப்பட்டது.

இந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டு செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இணையத்தில் உலகை வலம் வருகிறார்

_________________________________

எரிச்சலூட்டும் முதியவனா?!

என்ன பார்க்கிறீர் செவிலியரே? என்ன பார்க்கிறீர்?

என்னை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்?

மண்டையில் ஏதுமில்லா - எரிச்சலூட்டும்

முதியவன் என்றா?

எங்கோ வெறிக்கும் கண்களுடன்..

எக்குதப்பான தடுமாற்றங்களுடன்..

வாயில் வழியவிடும் உணவுடன்..

வாய்மொழியற்ற பார்வையுடன்..

உங்களை, நீங்கள் செய்வதை கவனிக்காமல்..

எங்கோ ஒரு வெளியில் -

எல்லாம் இழந்துகொண்டிருக்கும் நிலையில்..

‘உன்னால் முடியும் செய் பார்க்கலாம்’ – என

உரக்க நீங்கள் என்னிடம் சொல்லும்போதும்..

எதிர்ப்போ இல்லையோ..

எனக்கு உங்களது சேவைகளாய் -

உணவூட்டி உடல்துடைத்து..

என் நாளை நிரப்பிக்கொண்டிருக்கும் நீங்கள் -

என்னை பார்த்து அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள்!

அப்படி என்றால்..

நீங்கள் உண்மையில் என்னை பார்க்கவில்லை..

கண்ணை திறவுங்கள் தாதியரே!

உங்கள் சொற்படியே நடந்துகொண்டு..

நீங்கள் தருவதையே சாப்பிட்டுக்கொண்டு..

இதோ அசைவின்றி அமர்ந்துகொண்டு

நான் யாரென சொல்கிறேன்.. கேளுங்கள்!

பெற்றோரும் உடன்பிறந்த

சகோதர சகோதரிகளுடன்

அன்பால் இணைந்த

பத்து வயது குழந்தையாகவும்...

பின்பு சிறகு முளைத்து பறக்கும் மனதுடன்

காதலை கண்டுகொண்டு கனவுகளுடன்

எனது பதினாறிலும் இருந்தேன்!

இருபதில் இணையை தேடிகொண்டேன்!

இதயம் துள்ளிக்குதிக்க

இன்றும் இனிமையாய் ஒலிக்கிறது

நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...

என்துணை தேடும் மகவுகளுடன்

மனமகிழும் வீடும் அமைந்து இருந்தது

அதோ என் இருபத்தைந்தில்..

முப்பது வயது மனிதனாக

வேகமாய் வளரும் குழந்தைகளின்

நெருங்கிய பாசப்பிணைப்பை உணர்ந்தேன்!

நாற்பதில் இளைஞரான என் மகன்கள்

வளர்ந்துவிட்டதால் விட்டு சென்றார்கள்..

நான் கலங்கி போகாமல்

பார்த்துக்கொண்டதென்னவோ

எனது அருகிலேயே இருந்த துணைவிதான்..

ஐம்பது வயது ஆனது.. மீண்டும் குழந்தைகள்

என் காலை சுற்றி விளையாடின..

ஆனால் எனக்கும் எனது இணைக்கும்

குழந்தைகளை பற்றிதான் தெரியுமே!

எனக்கு இருண்ட காலம் உதித்தது..

என் மனைவி மறைந்துபோனாள்..

எதிரே என் காலத்தை பார்க்கிறேன்..

நெஞ்சை உலுக்குகிறது உதறல் எடுக்கிறது..

என் மகவுகளின் கவனிப்புகளெல்லாம்

அவர்களின் மகவுகளுக்கே!

எனது வருடங்களை..

அதிலிருந்த அன்பை நினைத்துப்பார்க்கிறேன்!

இப்போது நான் முதியவன்...

இயற்கை கொடூரமானது –

அது எள்ளிநகையாடி

முட்டாளாக்கும் முதுமையை திணிக்கிறது..

வனப்பையும் வீரியத்தையும்

உதிர்கிறது என் உடம்பு

இதோ கல்லான இதுகூட

இதயமாய் இருந்ததுதான் ஒருகாலத்தில்..

ஆனால் பிணம்போன்ற இந்த உடலில்

உள்ளேயொரு இளைஞனாக இன்றும்

இழைந்துகொண்டேதான் இருக்கிறேன்!

உழைத்து ஓய்ந்துவரும் இதயம்

வீங்கி ஏங்குகிறது..

அந்த மகிழ்ச்சிகளும் வலிகளும்

நீங்காமல் நிலைக்கிறது..

வாழ்க்கையை அனுபவித்து

மீண்டும் வாழ நினைக்கிறது..

கடந்த வருடங்கள் என்னவோ சிலதுதான்..

ஆனால் விரைந்து கழிந்து போனதே..

எதுவும் நிலைத்திருக்க முடியாது என்ற

எளிய அறிவை இங்கு ஏற்கவைக்கிறது..

ஆகவே கண்களை திறவுங்கள் மக்களே

திறந்து பாருங்கள்..

இங்கே எரிச்சலூட்டும் முதியவனில்லை

உற்று நோக்குங்கள்..

பாருங்கள்...

நான்!

_________________________________

அடுத்தமுறை வயதானவரை பார்க்கும் போது இந்த கவிதையை நினைவுகொள்ளுங்கள். உள்ளே இருக்கும் இளமையான ஆத்மாவை வெளிதோற்றத்தை வைத்து உதாசீனம் செய்துவிடாதீர்கள். நாமெல்லோரும் ஒருநாள் அப்படி இருக்கபோவது தான் இல்லையா?

இதை பகிர்ந்துகொள்ளுங்கள் (மூலம் பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரிஃபித்)

உலகின் மிகவும் அழகான சிறந்த விஷயங்களை பார்க்கவோ, கையால் தொடவோ முடியாது; மனதிலிருந்து உணர்ந்து பார்க்கவே முடியும்!

- முன்னுரையும் கவிதையும் தமிழாக்கம் Dr, Surya CR

  • 327
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய