Support Ads
 ·   ·  1274 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஓய்வு- Retirement

ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு ஆண்டவனால் ஆசீர்திக்கப்பட்டு தரப்படும் நேரம்.

நான் நிறைய பார்த்திருக்கிறேன், ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்திவிடுவார்கள்..

நாம் வேலையை எப்படி காதலித்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை காதலித்து செலவு செய்ய வேண்டும் இல்லையா? பிடித்ததுபோல் அழகாய் உடை அணியுங்கள்.

எனக்கு தெரிந்த நண்பர்கள், உடம்பில் சக்தி இருக்கும்வரை வேலைக்கு போகலாம் என்று காசிருந்தும் மீண்டும் வேலையை எங்கோ தொடர்வதை மட்டும் எனக்கு புரிவதே இல்லை. யாருக்காக பணத்தை துரத்துகிறீர்கள்? மூப்பிலும் தினம் உழைத்தால்தான் சோறு என்ற வாழ்க்கை.. சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட, அல்லது சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம்.

உங்களுக்கு பிடித்த, வேலை சமயத்தில் செய்ய முடியாததை செய்யுங்கள். எனக்கு குருவிகளுக்கு கூடு கட்டுதலோ, மரம் நடுதலோ ஆசையாக இருக்கலாம்.. உங்களுக்கு கதை கட்டுரை ஆன்மீகம் இப்படி எதையாவது செய்யலாம்.

ஓடியநாட்களில் பார்க்கமுடியாத இடங்களை பாருங்கள். காலை உணவை நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு நேரத்துக்கு சாப்பிடுங்கள். கொஞ்சம் உறவுகளுடன் பேசுங்கள், நிறைய சிரியுங்கள். உங்கள் ஒத்த நண்பர்களோ, பிடித்த கூட வேலை செய்தவர்களோடு மாதம் ஒரு முறையாவது பேசுங்கள் அல்லது சந்தியுங்கள்.

மிக நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும் துக்கங்களையும் பகிருங்கள். நம் துக்கம் ஒன்றுமில்லை என்று தெரியும் நமக்கு..

மெடிகல் செக் அப்புகளை விடாதீர்கள், நேரத்துக்கு மருந்தை உட்கொள்ளுங்கள். நண்பர்கள், உறவினர்கள் இறப்பார்கள். அடுத்து நாம் தான் என்று பயப்படாதீர்கள். அந்த லிஸ்ட் கடவுளிடம் மட்டுமே இருக்கிறது. டாய்லெட் கதவுகளை பூட்டிக்கொள்ளாதீர்கள், தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச், சாவி வைத்துக்கொள்ளுங்கள்.

தெரியாதவர்களுக்கு கதவைத்திறக்காதீர்கள்.

சேர்த்துவைத்த பணத்திற்காகவோ, பென்ஷன் பணத்திற்காகவோ, ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவினர்கள் சொந்தம் கொண்டாடினால், காபி கொடுத்து அனுப்பிவிடுங்கள். இருக்கும் பணத்தை சாமர்த்தியமாய் போட்டு வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுங்கள்.

பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்களை அவர்களுக்குள் பார்க்கலாம்.

வேலையை விட்டுத்தானே ஓய்வு பெற்றோம்? இறந்தா போய்விட்டோம்?

இவை அனைத்தும் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு மட்டும் அல்ல... அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து தான்..!

ஓய்வு பெற்ற தங்களது பெற்றோர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையையும், சுதந்திரத்தையும்... அவர்களின் ஓய்வில் எவ்வித மன உளைச்சலும் ஏற்படுத்ததாத வகையில்.., பெற்றோர்களின் உடல் மன நலன் கருதி பிள்ளைகளும் நடந்து கொள்வது அவர்களின் வாழ்க்கையில் ஈடற்ற மகிழ்வையும், ஆரோக்யத்தையும் அளிக்கும்.

வாழ்வியல் போராட்டத்திற்காக ஓடிய ஓட்டத்தில்... பணி ஓய்வு என்பது அடிபணிந்து, சகித்து, பொறுமை காத்து, அவமானப்பட்டு, குடும்பத்திற்காக ஒரு சுமை தாங்கியாக தங்களது வாழ்வை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை ரசிக்க இந்த சமூகம் நமக்களித்த வரம் இது... இதையும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சுய நலத்திற்காக இழக்காதீர்கள்.

  • 611
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய