Support Ads
 ·   ·  176 posts
  • 2 members
  • 2 friends

கணநாதர் ரகசியம்

'சிதம்பர ரகசியம்' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நடராஜர் சன்னிதியில், மறைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைப் பற்றிய விளக்கமே இது.

இந்த மறைவுப் பகுதி வழியாக பார்த்தால், வானமே எல்லையாகத் தோன்றும். இறைவன் எல்லையற்றவன்,

புரிந்து கொள்ள முடியாதவன் என்பதற்காக, அமைக்கப்பட்ட சன்னிதி இது.

இதுபோல், 'கணநாதர் ரகசியம்' என்ற அமைப்பை, தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் காணலாம்.

சமீபகாலமாக, ராகு கோவில் என, இது பிரசித்தி பெற்றுள்ளது.

இந்தக் கோவிலின் நுழைவு வாசலில், கொடி மரத்தை ஒட்டி, கணநாதர் ரகசியம் என, பெயரிடப்பட்ட சன்னிதி உள்ளது.

பொதுவாக, சிவாலயங்களில் நுழைவு வாயிலின் இடதுபுறம் விநாயகர் சன்னிதி இருக்கும். இங்கே, விநாயகரின் இன்னொரு பெயரான கணநாதரின் பெயரில் சன்னிதி இருக்கிறது. இதன் வரலாறு அதிசயிக்கத்தக்கதாக உள்ளது.

பகவான் பெரியவனா, பக்தன் பெரியவனா என்ற கேள்வியை ஆன்மிகத்தில் எழுப்புவதுண்டு.

தன்னை விட பக்தனே பெரியவன் என, நமக்கு விட்டுத் தருகிறான், ஆண்டவன். இந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது தான், இந்த சன்னிதி.

ஒரு காலத்தில், இந்த கோவிலுக்குள் யாரும் நுழைய முடியாத நிலை இருந்தது. உள்ளே செல்ல முயன்ற பக்தர்கள், கீழே விழுந்து காயமடைந்தனர். இதற்கான காரணம் தெரியாமல் தவித்தனர்.

கேரள நம்பூதிரிகளை அழைத்து வந்து, பிரசன்னம் (கோவில் தொடர்பான ஜோதிடம்) பார்த்த போது, கோவிலுக்குள் தீய சக்திகள் புகுந்துள்ளதும், பக்தர்களை உள்ளே வர விடாமல் தொல்லை செய்ததும் தெரிய வந்தது.

அப்போது, நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகான், அவ்வூருக்கு வந்தார். இவர், கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லுாரில் பிறந்தவர். கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானார். இதனால், நெரூர் மகான் என, அழைக்கப்பட்டார்.

அவரிடம் பக்தர்கள் கோவிலின் நிலையை எடுத்துக் கூறினர். அவர் கோவிலுக்குள் வந்து, சிவ கணங்களுக்கு தலைவராக விளங்கும் விநாயகரையும், ஒரு யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தார். ஆனால், இவை யார் கண்களுக்கும் தெரியாது. சன்னிதிக்குள் ஒரு விளக்கு ஏற்றப்பட்டது. உடனே, உள்ளே இருந்த தீய சக்திகளை நோக்கி, தீ ஜுவாலைகள் பாய்ந்தன. அவை, அலறியடித்து வெளியேறின.

சமீபகாலமாக, ராகு தோஷ நிவர்த்திக்காக, மக்கள் இங்கு வருகின்றனர். இவர்கள், கணநாதர் சன்னிதியை வழிபட்டாலே போதும். சகல தோஷமும் நீங்கி விடும்.

கும்பகோணத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் திருநாகேஸ்வரம் உள்ளது.

  • 719
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய