Support Ads
 ·   ·  968 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

யுகாதி மகத்துவங்கள்

சிவபெருமான் ஜடாமுடியில் இருக்கும் மூன்றாம் பிறை சந்திரனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும் உண்டாகும் என்பது நியதி. மூன்றாம் பிறைச் சந்திரனை தொடர்ந்து தரிசிப்பவர்களுக்கு அந்த ஆண்டு வருமானம் பன்மடங்கு விருத்தியாகும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைக்கு பிறகு சந்திர தரிசனம் அன்று செய்ய கூடிய வழிபாடு மிகவும் விசேஷமானது. அவ்வகையில் நாளை சந்திர தரிசனம் என்ன செய்யலாம்? சந்திர தரிசனத்துடன் நாளை யுகாதி பண்டிகையும் வருகிறது! இதன் சிறப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

 பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வரும் பொழுது அதிக சக்தி கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. நாளை தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையும் சேர்ந்து வருவதால் நாளை வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. எனவே இதனைத் தவற விடாமல் தொடர்ந்து நாளையும், நாளை மறுநாள் நம்முடைய தமிழ் வருட பிறப்பையும் சேர்த்து கொண்டாடுங்கள். 

 சந்திரனைத் தரிசனம் செய்ய மாலை வேளையில் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். யுகாதி என்பதற்கு யுகத்தின் தொடக்கம் என்கிற பொருள் உண்டு. கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய அவதாரத்தின் முடிவில் கலியுகம் தொடங்குவதாக கூறியுள்ளார். எனவே ஸ்ரீ மகா விஷ்ணுவை வழிபடுவது யுகாதி நன்னாளின் சிறப்பு அம்சமாகும். 

யுகாதி பண்டிகையின் பொழுது எண்ணெய் குளியல் செய்து சகல தோஷங்களையும் நீக்கி, வாசலில் மாவிலை தோரணங்களால் அலங்காரம் செய்து, வீட்டிற்குள் இருக்கும் துஷ்ட சக்திகளை எல்லாம் வெளியில் துரத்தி விடுவார்கள். அதன் பிறகு வாழ்க்கை என்பது அனைத்தும் கலந்த கலவை என்பதை உணர்த்துவதற்கு யுகாதி பண்டிகை அன்று அறுசுவையும் கலந்த பச்சடி செய்வார்கள். இதற்கு ‘யுகாதி பச்சடி’ என்கிற பெயரும் உண்டு. மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, பயம், கோபம், ஆச்சரியம் ஆகிய ஆறு வகையான உணர்வுகளுக்கும் ஆறு சுவைகளை ஒப்பிட்டு இந்த பச்சடி செய்யப்படுவது வழக்கம். மகிழ்ச்சிக்கு வெல்லம், சோகத்திற்கு வேப்பம் மரத்தின் மொட்டுகள், வெறுப்பிற்கு புளிச்சாறு கொஞ்சம், பயத்திற்கு உப்பு, கோபத்திற்கு பச்சைமிளகாய், ஆச்சரியத்திற்கு மாங்கொட்டை அல்லது வேப்பம்பூ சேர்த்து இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளையும் ஒன்றோடு ஒன்று கலந்து இவ்வுலகிற்கு அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறார்கள். இன்றைய நாளில் மகா விஷ்ணுவிற்கு இந்த பச்சடி படைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து பின், மாலை வேளையில் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்வில் சகல யோகங்களும் வருமாம். தொழில் விருத்தி, வியாபார விருத்தி, வருமான விருத்தி, சந்ததி விருத்தி என்று நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் விருத்தியாகும். கடவுளுடைய பரிபூரண அருள் கிடைக்க இந்நாளை தவறவிடாமல் இறைவழிபாடு செய்து அனைவரும் பயன் அடையலாம். இதுவரை இருந்து வந்த துன்ப நிலை மாறி, புத்தம் புதிய வாழ்வு மலர, சந்திர தரிசனம் செய்து தமிழ் வருட பிறப்பை இனிதே வரவேற்போம்! வளம் பெறுவோம்!

  • 390
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்