·   ·  987 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

உடல் சோர்வையும், மூட்டு வலியையும் சரி செய்யும் பச்சை சுண்டை காய் குழம்பு

அறுசுவைகளும் நிறைந்தது தான் நமது பாரம்பரியமான உணவு. அன்றாடம் நாம் அறுசுவையையும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்பில் எந்தவித நோய்களும் ஏற்படாது என்று தான் அந்த காலத்தில் அறுசுவை உணவு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதில் சில சுவைகளை அறவே சேர்ப்பதில்லை. அவற்றில் ஒன்றுதான் கசப்பு சுவை. 

கசப்பு சுவை நிறைந்த பொருட்கள் ஒன்று தான் பச்சை சுண்டைக்காய். கசப்பு சுவை தெரியாமல் எப்படி பச்சை சுண்டைக்காயை வைத்து குழம்பு செய்வது என்று தான் நாம் பார்க்க போகிறோம். சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சோர்வை நீக்கும். மூட்டு வலியை குறைக்க உதவுகிறது. மூட்டு வலி ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம். 

சிறுநீரகத்தை பெருக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். அஜீரணம், மலச்சிக்கல் போன்ற ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை தடுக்க உதவுகிறது. பச்சை சுண்டைக்காய் புளிக்குழம்பு செய்யும் முறையை  பார்ப்போம். இதற்கு முதலில் நாம் மசாலாவை அரைத்துக் கொள்வோம். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 50 கிராம் மல்லி மற்றும் 15 வர மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 1/2 டீஸ்பூன் அளவிற்கு கடுகு, 1 ஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1/2 டீஸ்பூன் மிளகு இவற்றை சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்ததாக இரண்டினக்கு கருவேப்பிலை, 1/2 டீஸ்பூன் உளுந்து இதையும் தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவிற்கு கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வறுத்து பொருட்களை நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்ததாக இரண்டு முழு பூண்டுகளை உரித்து அதை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 200 கிராம் சின்ன வெங்காயத்தையும் தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய துண்டு அளவு பெருங்காயத்தை வறுத்து அதையும் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 

1/4 கிலோ அளவிற்கு பச்சை சுண்டைக்காயை எடுத்து கழுவி விட்டு, இடி கல்லை பயன்படுத்தி இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நீரை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். விதையோடு நாம் செய்யும் பொழுது அதில் கசப்பு சுவை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு எலுமிச்சம் பழம் அளவிற்கு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும். 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் 1/2 ஸ்பூன் அளவிற்கு கடுகும், 1 ஸ்பூன் அளவிற்கு சீரகமும் சேர்க்க வேண்டும். பிறகு அதில் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். நன்றாக சிவந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். 

பிறகு அரைத்து வைத்திருக்கும் பூண்டையும் போட்டு வதக்க வேண்டும். இரண்டும் வதங்க ஆரம்பித்ததும் பொடித்து வைத்திருக்கும் பெருங்காயத்தை அதனுடன் சேர்க்க வேண்டும். வெங்காயமும் பூண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 5 தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் சுண்டைக்காயை அதில் சேர்க்க வேண்டும். குழம்பிற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து சுண்டைக்காயை நன்றாக வேக வைக்க வேண்டும். 

சுண்டைக்காய் வெந்த பிறகு ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவில் 10 கிராம் அளவிற்கு சேர்க்க வேண்டும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 1/2 டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு, பிறகு அடுப்பை அணைத்து விடலாம். மிகவும் சுவையான கசப்புத் தன்மை அற்ற பச்சை சுண்டைக்காய் புளிக்குழம்பு தயாராகி விட்டது.

  • 77
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்