Support Ads
 ·   ·  987 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆஹா இதுவல்லவா ரசம்

சில பேருக்கு எப்படி தான் ரசம் வைத்தாலும், அந்த ரசத்தில் சுவை இருக்காது.  எல்லோர் வீட்டிலும் ரசம் வைப்பதற்கு தக்காளி, புளி மிளகு, சீரகம் பூண்டுதான் போடப்போகிறார்கள். அப்படி ஸ்பெஷலாக ரசம் மணப்பதற்கு என்னதான் காரணம். எப்படித்தான் சுவையான ரசம் வைப்பது என பார்க்கலாம்.

உங்களால் புளிக்கரைசலில் போட்டு கையாலேயே தக்காளியை நன்றாக கரைக்க முடியும் என்றால் கரைத்துக் கொள்ளலாம். பழுத்த தக்காளியை கரைத்து விடலாம். தக்காளி கொஞ்சம் கட்டியாக இருந்தால் சிரமம் இருக்கும். அதனால் மிக்ஸி ஜாரில் போட்டுக்கலாம் தவறு என்றும் கிடையாது. 

அடுத்து மூன்று சின்ன வெங்காயப் பல் எடுத்து ஒன்றும் இரண்டுமாக தட்டி வச்சுக்கோங்க. அதுவும் அப்படியே தனியாக இருக்கட்டும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊத்திக்கோங்க. அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பழத்தை ஊற்றி ரசத்துக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, உங்கள் கையை கொண்டு அந்த தக்காளி பழத்தையும் ரசத்தையும் ஒருமுறை கரைக்க வேண்டும். 

மிக்ஸி ஜாரில் தக்காளியை அரைத்து ஊற்றினாலும் இப்படி ரசத்தை கையால் கரைத்துக் கொடுக்கும் போது, ஒரு ருசி கிடைக்கும். இப்போது இந்த கரைசல் அப்படியே இருக்கட்டும். இந்த ரசத்திற்கு 500ml தண்ணீரில் இருந்து 600ml தண்ணீர் சரியாக இருக்கும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், வெந்தயம் ஒரு சிட்டிகை, வர மிளகாய் கிள்ளியது 3 போட்டு, மிளகாய் பொன்னிறமாக சிவந்து வந்ததும் கருவேப்பிலை 1 கொத்து, இடித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் போட்டு, ஒரு நிமிடம் வதக்குங்க.

அதன் பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்த மிளகு சீரக விழுது, மல்லித்தழை கொஞ்சம், போட்டு 10 செகண்ட் வரை வதக்கி, பெருங்காயத்தூள் போட்டு, புளி கரைசலையும் தக்காளி கரைசல் உப்பு போட்டு கரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த கலவையை இந்த கடாயில் தாளிப்பில் ஊற்றி விடுங்கள். உப்பு காரம் புளிப்பு சரி பார்த்துக்கோங்க. ரொம்பவும் புளி அதிகமாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாம். 

ரசம் மிதமான தீயில் இரண்டு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதை உடனடியாக இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். அவ்வளவுதான். தேவைப்பட்டால் இதன் மேலே இன்னும் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி ஒரு மணி நேரம் கழித்து, ரசத்தை ருசித்து பாருங்கள். ஆஹா இதுவல்லவா ரசம். 2 நாள் கூட இந்த ரசத்தை வைத்து சாப்பிடலாம்.

  • 207
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்