Category:
Author:
தயாநிதி தம்பையா
Created:
Updated:
I
கிடைத்தது
ஒரு நாள் தொலைந்து
போகலாம்.
பிடித்தது
ஒரு நாள் வெறுத்தும்
போகலாம்.
நிரந்தரம்
என்று ஏதுமில்லை
இவ்வுலகில்.
வெறுப்பை
விதைத்த இடத்தில் அன்பை
அறுவடை
செய்ய நினைப்பது முட்டாள் தனம்.
எந்த
உறவாயினும் சற்று கவனமாகவே
இருங்கள்.
எதிர்பார்த்த தேவைகள் கிடைக்காத
நேரத்தில்
தூக்கி எறியப்படலாம்..
உண்மையான
அன்பில் சட்டென விலகுதல்
என்பது
அத்தனை சுலபமல்ல.
நடிப்பவர்களுக்கு மட்டுமே
அது சுலபமானதாகும்.