Category:
Author:
விஜி
Created:
Updated:
I
ஆகாய கருவினிலிருந்து
அற்புதமாய் விழுந்தது
பூமழை குழந்தையது
பூமித்தாய் பொன்மடியில்...
ஓடையாய் மழலை கொஞ்சி
ஒய்யாரமாய் தவழ்ந்தோடி...
அருவியாய் இடறி விழுந்து
ஆர்ப்பரித்து எழுந்து..
அன்னநடை பயின்று
ஆறென உருமாறி...
பெருகிய வேகமதில்
பெருநதி என்றாகி...
பேருவகை கொண்டு
கடல் சேர்ந்திடும் தண்ணீரை...
கலங்காது காத்திடுவாள்
நிறைவாக தாங்கிடலாய்...
நிலமென்னும் அன்னை!