நம்பிக்கை வைத்தே
நடந்து செல்கிறோம்
ஆனால் பாதை
வேறு எங்கோ
திரும்பி விடுகிறது
அன்பு பயணத்தில்
அரவம்
தீண்டி விடுகிறது
பச்சோந்திகளுக்கு
பழக்கப்பட்டவை அவை
அப்பாவிகள் நாம்தான்
அனாதையாகி விடுகிறோம்
பொய் தோரணங்களில்
புதைந்து போவதால்
உண்மை முகங்களை கண்டு
வியந்து நிக்கிறோம்
பணங்கள்
குணங்களை
மாற்றி விடுகிறது
வசதிகள்
வாய்மையை
ஒழித்து விடுகிறது
பகட்டும் பெருமையும்
பாசத்தை அழித்து
விடுகிறது
போலி சேவல்களின்
கூவலில்
பொழுதுகள் விடியவில்லை
திரோகங்கள் மட்டுமே
விழித்து நிற்கிறது
வசனம் பேசியவர்கள்
வசதி வந்ததும்
விஷமேறி விடுகிறது
புதிய முகவரிகள்
காணும்போது
பழையவை
காணாமல் போய் விடுகிறது
நேர்மையாய்
நடந்து பார்
ஏமாளி என்பார்கள்
உண்மையாய்
இருந்து பார்
உதவாக்கரை என்பார்கள்
மனம் வைத்து
பழகினாலும்
குணம் காட்டி விடுவார்கள்
உயிராய் நேசித்தாலும்
கொடிய
கைமாறு செய்வார்கள்
துரோகம் செய்பவரை மட்டும்
தூக்கி தோளில் சுமப்பார்கள்