Ads
 ·   ·  34 poems
  •  ·  5 friends
  • I

    9 followers

கைமாறு

நம்பிக்கை வைத்தே 

நடந்து செல்கிறோம் 
ஆனால் பாதை 
வேறு எங்கோ 
திரும்பி விடுகிறது 



அன்பு பயணத்தில் 
அரவம் 
தீண்டி விடுகிறது 



பச்சோந்திகளுக்கு 
பழக்கப்பட்டவை அவை  
அப்பாவிகள் நாம்தான் 
அனாதையாகி விடுகிறோம் 



பொய் தோரணங்களில் 
புதைந்து போவதால் 
உண்மை முகங்களை கண்டு 
வியந்து நிக்கிறோம் 



பணங்கள் 
குணங்களை 
மாற்றி விடுகிறது 



வசதிகள் 
வாய்மையை 
ஒழித்து விடுகிறது 



பகட்டும் பெருமையும் 
பாசத்தை அழித்து 
விடுகிறது 



போலி சேவல்களின் 
கூவலில் 
பொழுதுகள் விடியவில்லை 
திரோகங்கள் மட்டுமே 
விழித்து நிற்கிறது 



வசனம் பேசியவர்கள் 
வசதி வந்ததும் 
விஷமேறி விடுகிறது 



புதிய முகவரிகள் 
காணும்போது 
பழையவை 
காணாமல் போய் விடுகிறது 



நேர்மையாய் 
நடந்து பார் 
ஏமாளி என்பார்கள் 



உண்மையாய் 
இருந்து பார் 
உதவாக்கரை என்பார்கள் 



மனம் வைத்து 
பழகினாலும் 
குணம் காட்டி விடுவார்கள்



உயிராய் நேசித்தாலும்
கொடிய 
கைமாறு செய்வார்கள் 
துரோகம் செய்பவரை மட்டும் 
தூக்கி தோளில் சுமப்பார்கள் 


  • 321
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads