Ads
 ·   ·  32 poems
  •  ·  5 friends
  • I

    9 followers

சுவாசம்

கல்லறை வாசங்களை

பார்த்து விட்டேன்

பழகி விட்டேன்



போர் முனையில்
பொதி செய்த
குண்டுகளாய்
மனித குணங்கள்
மாறக்கண்டு
வெடித்து சிதறியது உள்ளம்



நம்பிக்கை
தும்பிக்கை இழந்த
யானையாய்
விழுந்து கிடக்கிறது
பள்ளத்தில்



வானம் விழுந்ததாய்
விரைந்து சென்றேன்
அது
நீரில் நிழல் என்றதும்
திரும்பி விட்டேன்



அச்சு அடித்த காகிதத்தில்
அடங்கி விட்டது
உலகம்
உண்மை சுமந்த படி
சுற்றி திரிந்தால்
தினம் விழுவது செருப்படி



போதும் என்றாகி விட்டது
வாழ்க்கை
தேடல் பிழைப்பதால்
கரைந்து போன
உப்பு கல்லாய்
முயற்சிகள்
முடங்கி விடுகிறது



அடங்கி விட்டது
ஆசைகளும் ஆர்வங்களும்
ஏணிகளில்
ஏரவும் பிடிக்கவில்லை
தோணிகளில்
கடக்கவும்
பிடிக்கவில்லை



கல்லறை வாசங்களை
மட்டும்
சுவாசித்து கொண்டிருக்கிறது
சுவாசம்
  • 225
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads