தேன்
எவ்வளவு தித்தித்தாலும்
தேவைகள்
தீர திகட்டத்தான்
செய்யும்..
நியாயங்கள்
சில இடங்களில்
ஒரு தலை பட்சமாகி
அநியாயங்களுக்கு
துணை போய் விடுகின்றது..
நான்
என்ற அகங்காரம்
தலை
விரித்தாடினால் சேதாரம்
கூடாரமடிக்கும்..
அறிவாளி
என்ற முலாம்
பூசிக் கொண்டாலே
பகுத்தறிவு பாடை
ஏறிவிடும்..
எல்லாம்
தெரியுமென்று தம்பட்டம்
அடிப்பவனுக்கும்
தன் சாவு என்று
எனதெரியாத பக்கம் ஒன்று
இருக்கத் தான் செய்கின்றது.
எவ்வளவு
தான் வளைந்து கொடுத்தாலும்
சில நேரங்களில்
மனதை உடைத்து விடுகின்றது
நேசித்த உறவு..
நான்
எனது என்ற வாசனைகள்
அழிவது தான் வாழ்க்கையில்
உண்மையான ஏகாந்தம்…