Ads
 ·   ·  34 poems
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆதாரம்


ஒதுக்கி கொள்வதற்காகவும்
ஒதுங்கி கொள்வதற்காகவும்
காரணம் தேடுகிறார்கள்
சிலர்



பாசங்கள் அவர்களுக்கு
பாதம்
அப்பி வைத்த
சுவடுகள் மட்டுமே



தள்ளி போவதற்காய்
தடயம் தேடுபவர்கள்
கோபம் படுவதாயும்
பழி சொல்லி போவார்கள்



உலகம்
மனிதர்களை
மிருகங்களாய்
மாற்றிக் கொண்டிருக்கிறது



மனிதத்தை களவாடி
சவக்குழிக்குள்
புதைத்து விடுகிறது



பிழை பிடிப்பதில்
பிழைப்பு நடத்துப்பவர்கள்
மனதை
கொலை செய்து விடுகிறார்கள்



பாவப்பட்ட சிலர்
கோவப்பட்டு
அவர்களுக்கு
ஆதாரம்
கொடுத்து கொண்டிருக்கிறார்கள்


  • 356
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads