Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

ஒரு விதவையின் கண்ணீர்

கணவன் மறைந்து விட 

கண்ணீர் அவளை 

மணந்துக் கொண்டது 

எத்தனை துன்பங்கள் 

அவளுக்கு 

மாலையாய் விழுந்தது 

சமூகத்தின் புறக்கணிப்பு 

சத்தம் இல்லாமல் 

அவளது குறவளையை 

நசித்துக் கொண்டிருந்தது 

சோகங்கள் சொந்தமாய் 

உறவாட

வறுமை 

கோரத் தாண்டவம் ஆடியது 

சகுனம் பார்ப்பவர்கள் 

மனதை 

காயப்படுத்திக் கொண்டே 

இருந்தார்கள் 

எத்தனை பழி சொற்கள் 

அவளுக்கு 

வலி கொடுக்கிறது 

அதை போக்க 

வழி கூட இல்லாமல் 

தவித்துக் கொண்டிருக்கிறாள் 

இந்த போராட்ட வாழ்க்கை

போதும் என்றாகி விட்டது

உடைந்து விழுந்த 

ஒரு பூவைப் போல 

தினமும் 

நசுக்கப் பட்டு 

விழி ஓரமாய் 

கண்ணீர் கோடுகளுடன் 

கழிகிறது காலம் 

  • 1170
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads