Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

சிந்தனைசெய்

நீ பிறந்த

மண்ணில்

நானும்

பிறந்தேன்

ஒன்றாக

படித்தேன்

என்னையும்..என்

தமிழையும்

நீ ஏன்

வெறுக்கிறாய்?

புறக்கணிக்கிறாய்?



உன் மொழியை..நான்

மதிக்கிறேன்

பேசுகிறேன்

நீ ஏன்

பேசவும்

மதிக்கவும்

முடியாமல்

வெறுக்கிறாய்?

ஆன்மீகம்

சொல்லித்தந்த

அன்பு,கருணை,இரக்கம்

உனக்கில்லையா?

எனக்குண்டே!



பெரும்பான்மை

இனத்துக்கு

பெருந்தன்மை

வேண்டும்

உன் கரங்கள்

என்னைத்தொட

வேண்டும்

நீயும் நானும்

சகோதரரே

சமத்துவம்

வேண்டுமே!



பலத்தோடு

இருக்கிறாய்

புதைத்த

பிணத்தை

புரட்டிப்பார்க்கிறாய்

மூடிய கல்லறையை

இடித்து தகர்க்கிறாய்

இத்தனை பீதியா?

உனக்கு

பயப்படாதே..வா

கைகோர்ப்போம்

சமாதானம்

செய்வோம்...



இறந்தோரை

கல்லறையில்

தூங்கவிடு

இறந்தோர்

தூபிகளை

வணங்கவிடு

இத்தனை

வர்மமா

உனக்கு

தர்மமே

போதித்த

புத்தரும்

நானும்

கண்ணீர்

வடிக்கிறோம்

நீயும் நானும்

இறப்பது நியதி

இதைவிட

ஏதுமுண்டோ

உண்மையான

செய்தி....

  • 1047
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads