Ads
 ·   · 19 poems
  •  · 6 friends
  • S

    N

    R

    7 followers

சகியடி நீ எனக்கு

கருவில் சுமந்தாள் அன்னை

கருவிழியில் சுமக்கிறாய் நீயடி 

என் உணர்வுகளுக்கு 

உருவம் கொடுப்பவள் நீயடி 


அன்பு ஊற்றெடுக்கும்

அருவி நீயடி

அதில் விழுந்து நீச்சலடிக்கும் 

ஆசை தங்கை நானடி.


என் கனவுகளை

கவலைகளை மொழிபெயர்ப்பவளே

தொப்புள்க்கொடி தோழியடி நீ

துயரத்திலும்

தோள் கொடுப்பவள் நீயடி .


அணைக்க கைகள் இருந்தால் 

அழுவதில் கூட சுகம் தான் 

ஆத்மார்த்த அன்பு உனதடி 

அதை உணர்கிறேன் தினமும் நானடி.



அன்றாடம் என் 

அனுபவ பரிமாற்றம் உன்னோடு தானடி 

அதனால் அழுக்குகள் இல்லை

என் மனதில் என்றால் உண்மை தானடி.


அத்திபூத்தாற் போல் 

சில கோபங்களும் 

உண்டாகும் தருணங்களிலேயே 

மண்ணாக்கி விடுவாயடி 

மனம் நொந்து 

மன்னிப்பும் கேட்பாயடி .


புரிந்துணர்வின் 

பொக்கிஷம் நீயடி 

புன்னகைக்க கற்றுக் கொண்டேன் 

உன்னால் நானடி .


எனக்காய் துடிக்கும் 

இதயம் உனதடி 

இன்னொரு தாய் தான்

நீயும் எனக்கடி .


என் விம்பத்தைக் காட்டும்

கண்ணாடி நீயடி 

என் கண்களின் காயமெல்லாம் 

கண்டுபிடிப்பாய் நீயடி.


வாழ விருப்பம் கொண்டேன் 

உன்னால் தானடி 

வலிகள் எல்லாம் 

மறக்க வைத்தவளும் நீயடி .


மறுபிறப்பு ஒன்று

எடுத்து வந்தால் நீ

மகளாய் பிறக்க வேண்டுமடி 

தாயாகி உன்னை 

தாலாட்ட வேண்டும் நானடி. 


சிறந்த வழிகாட்டி நீயடி 

வாழ் நாள்வரை 

சகியடி நீ எனக்கு

சகோதரியே!

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 788
  • More
Comments (0)
    Ads
    Latest Poems (Gallery View)
    1-12
    Ads
    Ads
    Info
    Author:
    பாலசுப்பிரமணியம் சிவாந்தினி
    Created:
    Updated:
    Featured Poems
    அவள்
    வார்த்தைகளின்ஒலி வடிவத்தைவற்ற செய்தவள்பட படப்பாய் என்றும் என்படர்ந்த மார்பினில் ஓர்இறுக்கத்தை தருபவள்சிந்திக்க சிந்திக்கஇதழினில் ஈரப்பதம் குறைந்திடஇரவெல்லாம் விழிக்க செய்பவள்
    அப்பா...!
    •  · 
    •  · beesiva
    காட்டிக் கொள்ளாத பூட்டிய அன்பினைஈட்டிய வெற்றிகள் கண்டு புழுகாமல்பூரிக்கும் பெரு மகன்..!பழுதாகாமல் இருந்திட விழுதான உந்தனைவிரட்டி விரட்டி படி படி என தினம்பாசப் பந்தாடியவன்.!பார்வையும் உறுமலும் உன் பார்வைக்கு விரும்பாத வில்லனாய் வெறுமனே நடிப்பால்புடம் போட்டவன்..தடம் மாறிய வேளைகளில் வேதனையால்நொந்தழுதவன்தனக்கு எட்டாத தூரங்களை எட்ட வைத்து வளர்த்தவன்.!உயர் நிலை தொட்டதும் ஓரமாய் ஒதுங்கிஈரமான வார்த்தைகளுக்குதவமிருப்பவன்.!நேசி!  பூசி!  யோசி ! வாசி அவர் வாழ்க்கை உனக்குபெரும் பாடம்..!
    •  · 
    •  · beesiva
    உன்னை நான்மதிக்கிறேன்அதனால் நான்பேசாமல்இருக்கிறேன்பெண் என்றால்பெருமைக்குரியவளே!நானும் பெருமையாகபேசுவேன்நீயும் யாரையும்இகழ்ந்து பேசாதே!உன்னிடம்திறமையுண்டோ?செய்து காட்டுமற்றவர்களைபுகழ்ந்து காட்டுபுண்பட பேசாதே!நீயும் ஒரு பெண்ணே!பெண்ணின் பெருமைதாய்மையே!தாய்மையுனக்குமுண்டுதப்பாய் பேசாதே!தனித்திறமைகளைவெளிக்கொண்டு வரகளம்பலவுண்டுஆடு,விளையாடுஉன்னைப்போற்றபலர் வருவார்நீ பொறாமைகொள்ளாதே பெண்ணே!பொறாமையென்பதுவெற்றுத்தாள்இதில் ஏதாவதுஎழுதுபொறாமை நீங்கநீயும் முயற்சி செய்யாரையும் பிரிக்கநினைப்பதும்உன்னைப்பிரிவதும்இதில் மகிழ்ச்சியும்இகழ்ச்சியும்உனக்கே சொந்தம்...பத்தினியாள் செய்வினைக்குபழிவாங்க எண்ணாமல் புத்தகம்தனை எழுதிபுத்திதனைப்புகட்டுகிறேன்இப்படியும்பெண்கள் இப்புவியில்இருக்கிறார்கள்தப்பிடுங்கோ காளையரேதப்பிவி
    •  · 
    •  · beesiva
    அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு மார்தட்டி சிரிப்பது மோசடிகள் ஆயிரம் செய்துவிட்டு போயிவிடுங்கள் பரவாயில்லை இதயத்தில் மட்டும் துரோகம் செய்து விடாதீர்கள் 
    •  · 
    •  · beesiva
    வறுமைஉன்னிடம் தோழமை கொண்டால் பலபேர் உன்னை விட்டு தூரமாய் போய் விடுவார்கள்பாசம் வைத்தவர்கள் கூடபயந்து விடுவார்கள் மடியில் தூங்கியவர்கள்மறந்து போவார்கள் இதயத்தில் இருந்தவர்கள்இறங்கி விடுவார்கள்தலை குனிந்துதவம் கிடந்தவர்கள்தலை நிமிர்த்திதள்ளி விடுவார்கள்நலம் விசாரிக்கநடுங்குவார்கள்நீ உறவுகளைஉணர்ந்து கொள்வாய்உலகத்தைபுரிந்து கொள்வாய்அன்பைஅறிந்து கொள்வாய்மனிதர்கள் இப்படித்தான்என்பதைநீ பாடமாய் படித்துக் கொள்வாய்
    Ads