Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

திருந்தி கொள்வதேயில்லை

சிரித்துக் கொண்டே
இருக்கிறேன் என்பதற்காக
நான்

மகிழ்ச்சியோடு இருக்கிறேன் 
என்று 
நினைத்துக்கொள்கிறார்கள் 


ஆனால்
உள்ளுக்குள் 
எரிந்துக்கொண்டிருக்கும் 
காயத்தீயின் வலி
எனக்கு மட்டும்தான் 
தெரியும்


அறிவுடன்

முடிவெடுப்பேனென்று
பலர் என்னிடம்
ஆலோசனை கேட்பார்கள்
ஆனால் 
அன்புக்கு அடிமையாகி
ஏமாந்து போகும்
அடிமுட்டாள் நானென்று
அவர்களுக்கு தெரியாது


மற்றவர்கள்
புன்னகைக்க
வேண்டுமென்பதற்காக
எல்லாவற்றையும்
இழந்து விட்டு
அவர்கள் தந்த
காயங்களோடு
தனிமையில் இருக்கும்
போதுதான்
தவறுகளை உணர்ந்து
கொள்கிறேன் 


அவ்வாறு

உணர்ந்து கொள்வதோடு சரி
திருந்தி கொள்வதேயில்லை
  • 1214
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads