Ads

Semi soft silk saree with blouse $75

semi soft silk saree with blouse

  • 624
  • More
  • 361
  • More
  • 363
  • More
  • 362
  • More
  • 362
  • More
  • 352
  • More
  • 349
  • More
  • 354
  • More
  • 354
  • More
  • 340
  • More
Comments (0)
Login or Join to comment.
  • 81
Added article 
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கலக்கிய நடிகை பிந்துகோஷ் கடைசி காலத்தில் தனது உடல்நல குறைவு காரணமாக வறுமையில் வாடி உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக உள்ளது.குண்டான உருவம், காமெடி நடிப்பு, குழந்தைத்தனமான சிரிப்பு மற்றும் வசனம் ஆகியவை தான் பிந்துகோஷ் . இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆக நடனமாடி உள்ளார். அதன் பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிந்துகோஷ் நடித்தார்இந்த நிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கோழி கூவுது என்ற திரைப்படத்தில் தான் காமெடி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது காமெடி சூப்பராக எடுபட்டதையடுத்து பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், பிரபு, விஜயகாந்த், உள்ளிட்டவர்களின் படங்களில் பிந்துகோஷ் நடித்தார். இவரது காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக உருவங்கள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, ஓசை, கொம்பேறிமூக்கன், நீதியின் நிழல், நவக்கிரக நாயகி உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.விஜயகாந்த் நடித்த வெள்ளை புறா ஒன்று என்ற திரைப்படத்தில் பிந்துகோஷ், லூஸ் மோகனுடன் இணைந்து நடித்திருப்பார். லூசு மோகன் மிகவும் ஒல்லியான உடல்வாகுவாகவும் பிந்துகோஸ் குண்டான உடல்வாகு கொண்டவராக இருக்கும் நிலையில் இந்த ஜோடியை பார்த்து பலர் ஆச்சரியமடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் லூஸ் மோகன் பிந்துகோஸ் ஆகிய இருவருக்கும் ஒரு டூயட் பாடல் உண்டு. அந்த பாடல் தான் பொண்ணுன்னா பொண்ணு எம்மாம் பெரிய பொண்ணு என்ற பாடல். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.நடிகை பிந்துகோஷ் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது சென்னை தசரதபுரத்தில் பங்களா போன்ற வீட்டை வாங்கினார். வீட்டு வேலை, சமையல் வேலை என தனித்தனியாக நான்கு வேலையாட்கள் அவரிடம் வேலை பார்த்தனர், அவர் ஆசை ஆசையாய் 10 நாய்களை வளர்த்தார். பங்களா, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தவருக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டது.தைராய்டு உள்பட பல நோய்கள் அவருக்கு இருந்ததால் அவரது சினிமா வாய்ப்பு குறைந்து போனது. ஒரு கட்டத்தில் சம்பாதித்த சொத்து எல்லாம் சிகிச்சைக்காகவே செலவழித்தார். ஒரு நாளைக்கு 16 மாத்திரைகளை அவர் சாப்பிடதாகவும் அந்த மாத்திரைகளால் சைட் எஃபெக்ட் காரணமாக மேலும் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கே பணம் இல்லாமல் வீடு கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒரு சிறிய வாடகை வீட்டில் இருந்தார். அவரது வறுமை நிலையை கேள்விப்பட்ட விஷால் அவருக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருகிறார். அது மட்டும் இன்றி அவரது நடிகர் சங்க உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் ஆயுள் காலத்திற்கு புதுப்பிக்க அவர் தான் உதவினார்.இந்த நிலையில் நடிகை பிந்துபோஸ் இறந்துவிட்டதாக கூட வதந்தி வந்தது. ஆனால் ஆனந்த விகடனில் வந்த அவரது பரிதாபமான பேட்டி தான் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்தது. நடிகை பிந்துகோஷ் மற்றும் கோவை சரளா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் அதனால் கோவை சரளா அவ்வப்போது வந்து பிந்துகோஷை நேரில் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்வார்.தன்னுடன் நடித்த எந்த நடிகரும் தன்னை வந்து பார்க்கவில்லை என்றும் விஷால் கோவை சரளா உள்பட ஒரு சிலர் மட்டுமே அவ்வப்போது வந்து போவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பெரிய நடிகர்களுடன் நடித்த போது தனக்கு நினைத்துப் பார்க்க முடியாத சந்தோஷம் இருக்கும்.இப்படி எல்லாம் நடித்த தன்னால் தற்போது எழுந்து கூட நிற்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருப்பதாகவும் இப்போது கூட எனக்கு உடல் நலம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றும் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருந்தார். நடிகை பிந்து கோஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தற்போது இருவருமே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனர்களாக உள்ளனர்.
  • 88
Nice work
  • 90
  • 102
  • 107
Good Morning
  • 107
Added a post 
கம்ப்யூட்டர் (Computer) பயன்படுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.கம்ப்யூட்டர் என்று சொல்லும் பொழுது லேப்டாப், டெஸ்க்டாப் என்று இரண்டுமே வந்துவிடுகிறது. கம்ப்யூட்டரை இயக்க கீபோர்ட் முக்கியமானது. கீபோர்ட் உதவி இல்லாமல் ஒரு கம்ப்யூட்டரை இயக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. கீபோர்ட் தான் கம்ப்யூட்டரின் இன்புட் சாதனமாக செயல்படுகிறது. கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் எத்தனை கீஸ்கள் இருக்கிறது தெரியுமா? ஒரு கீபோர்டில் மட்டும் மொத்தம் 104 கீஸ்கள் இருக்கிறது. என்ன தான் ஒரு கீபோர்டில் 104 கீஸ்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உலகளவில் உள்ள எல்லா கீபோர்ட்களிலும் உள்ள F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இதை பெரும்பாலானோர் கவனித்திருப்பீர்கள். இன்னும் பெரும்பாலானோர் இப்போது வரை இதை கவனித்திருக்கமாடீர்கள். இந்த F மற்றும் J ஆகிய இரண்டு கீஸ்களில் மட்டுமே ஏன் இந்த கோடு வழங்கப்பட்டுள்ளது? இதற்கான காரணம் என்ன? கீபோர்டில் உள்ள எல்லா கீஸ்களையும் எளிதாக அணுக அனுமதிக்கும் முறைக்கு பெயர் தான் ஹோம் ரோ கீ பொசிஷன் (home row key position) ஆகும். இந்த பொசிஷனில் உங்கள் கைகளை சரியாக வைப்பதற்கு தான் F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பொசிஷனில் உங்கள் விரல்களை வைப்பது தான் சரியான டைப்பிங் முறை என்றும் கூறப்படுகிறது. உங்கள் கைவிரல்களை F மற்றும் J கீஸ்களில் ஆள்காட்டி விரலை வைத்து, அதற்கு பின் மற்ற 3 விரல்களையும் வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாக பார்க்கப்படுகிறது.இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், A, S, D, மற்றும் F கீகளில் உங்கள் இடது கைவிரல்களும், J, K, L, மற்றும் செமிகோலன் (;) கீகளில் உங்கள் வலது கைவிரகளை வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாகும். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் கீபோர்டில் உள்ள அணைத்து கீகளையும் உங்களால் எளிதாக அணுக முடியும் மற்றும் வேகமான டைப்பிங்கிற்கும் இது தான் சிறந்த முறையாக வலியுறுத்தப்படுகிறது.இதை தவிர்த்து இந்த F மற்றும் J கீ-களில் மட்டும் காணப்படும் சிறிய கோடு போன்ற மேடு பார்வையற்றவர்கள் அவர்களின் கைகளை சரியாக கீபோர்டில் பொசிஷன் செய்ய உதவுகிறது. இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நம்முடைய கீபோர்ட்களில் உள்ள F மற்றும் J கீஸ்களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தெரிந்து கொண்ட இந்த பயனுள்ள தகவலை மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
  • 114
Added a post 
அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே, மந்திரி ஒரு தந்திரம் செய்தார்.‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’‘ஆமாம்’ என்றான் அரசன்.‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி.‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்.அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’அவர் எதுவும் பதில் பேசவில்லை.சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார். அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்து வைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’“அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூர தேவையில்லை, பொறுமையாக காது கொடுத்துக் கேட்டாலே போதும்” என்றார் ஜென் குரு
  • 122
Added a post 
ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன.ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன.நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது என்றது செவ்வெறும்பு.நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போறேன்;’ என்றது செவ்வெறும்பு.இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், ‘ இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல’ என்று சொல்ல,  இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க போறோம் ’ என்று தன் மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு, சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது.மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து,கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க.?’நான் உன்ன சாகடிக்கல நீயா தான் இறந்துட்டஎன்ன சொல்லுறீங்க..’நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போரடுறத விட்டுட்டு தண்ணீல மூழ்கி இறந்துட்ட. ஆனா நீ மட்டும் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்த நிச்சயம்; எதாவது ஒரு வகையில உதவி செஞ்சு காப்பாத்திருப்பேன்.கடைசியா ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்கோ வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்’ என்றார் கடவுள்.
  • 128
  • 134
  • 159
Added article 
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவருக்கு வந்தது. ஆனால், அதற்கு முன் அவர் மிகவும் ஆக்ரோஷமான மனிதராகவே இருந்தார். அதற்கு காரணம் இரவு, பகல் என ஓய்வில்லாமல் படங்களில் நடித்ததுதான். அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டது.படப்பிடிப்பிற்கே குடித்துவிட்டு வாருவார். தூக்கம் வரக்கூடாது என்பதற்காக ஜர்தா பீடா போடுவார். ஆனால், அப்படி இருந்த ரஜினியை ஒரு பெண் மாற்றியது பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். தர்ம யுத்தம் படத்தின் படப்பிடிப்பு ஒரு கிறிஸ்துவ தொழிலதிபரின் வீட்டில் நடந்தது. அந்த வீட்டில் ரெஜினா வின்செண்ட் என்கிற வயதானவர் தங்கியிருந்தார்.அவருக்கு அந்த வீட்டை படப்பிடிப்புக்கு கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும், அவரின் வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு ரஜினியை பிடிக்கும் என்பதால் மேலே தங்கிகொண்டு கீழ் போர்ஷனை கொடுத்தார். ஆனால், ரஜினி சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வந்தாலும் மதுபோதையில் இருந்தார். படப்பிடிப்பு சரியாக நடக்காமல் இருப்பதற்கு ரஜினிதான் காரணம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.ஒருநாள் அவரை பார்த்த ரஜினிக்கும் குற்ற உணர்ச்சி வர ‘உங்களிடம் பேச வேண்டும்’ என சொல்ல, அந்த அம்மாவும் ‘நானும் உன்னிடம் பேச வேண்டும். தினமும் இப்படி குடித்துவிட்டு வரலமா?. இப்படி வந்தா படப்பிடிப்பு எப்படி நடக்கும்?’ எனக்கேட்க ‘இனிமேல் இப்படி செய்யமாட்டேன் அம்மா’ என ரஜினி சத்தியம் செய்தார். சொன்னதுபோல கொஞ்சம் மாறி இருந்தார் ரஜினி.ரஜினி அப்போது மருத்துவர் செரியனிடம் மனநல சிகிச்சையும் பெற்றுவந்தார். ஒருநாள் செரியனிடமிருந்து அந்த அம்மாவுக்கு போன் வந்தது. ரஜினி மருத்துவமனயில் மிகவும் வயலண்டாக இருக்கிறார். அவர் அம்மா அம்மா என உங்கள் பெயரை சொல்கிறார். நீங்கள் இங்கே உடனே வாங்க’ என சொல்ல ரெஜினா அங்கே விரைந்து சென்றார். அங்கே மருத்துவர்களும், செவிலியர்களும் ரஜினியிடம் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்கள். அந்த அம்மா ரஜினியை சமாதனப்படுத்த ஹாஸ்பிட்டலில் இருந்து ரஜினி வெளியேறி அந்த அம்மாவின் வீட்டுக்கு போனார்.‘நான் இங்கேயே கொஞ்சநாட்கள் தங்கலாமா?’ என ரஜினி கேட்க அந்த ரெஜினாவும் சம்மதித்தார். அடுத்தநாள் நேற்று நன்றாக தூங்கியதாக ரஜினி சொல்ல அது செரியனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த அம்மாவிடம் ‘நீங்கள் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்திட்டீங்க’ என பாராட்டினார். அந்த அம்மா செலுத்திய அன்பில் மாறிய ரஜினி படப்பிடிப்புக்கு ஒழுங்காக போனார். அவரோடு தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி பார்த்துக்கொண்டு, படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வரசொன்னார் ரெஜினா. மொத்தத்தில் ரெஜினா அம்மா பெறாத மகனாகவே ரஜினி மாறியிருந்தார்.அந்த வீடு. அந்த அம்மா மற்றும் குழந்தைகளின் அன்பு என ரஜினி மொத்தமாக மாறினார். ஒருநாள் அந்த அம்மா அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. ’நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?’ என புலம்பிய ரஜினிக்கு நல்ல அறிவுரைகளை சொல்லிவிட்டு போனார் ரெஜினா.சில மாதங்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது ரஜினி நன்றாகவே மாறியிருந்தார். அதோடு, லதாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தார். ரெஜினா அம்மாவுக்கும் மிகவும் சந்தோஷம். ரஜினி திருமண வாழ்க்கையில் நுழைந்து ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்துவிட ரெஜினா அம்மா சமூக சேவகியாக மாறி பல நன்மைகளை மக்களுக்கு செய்தார்.80களில் பிரபலமான சமூக சேவகி இவர். மதர் தெரசா சமூக நல அமைப்பின் சென்னை நகர பொறுப்பாளராக இருந்தவர் இவர். இயற்கை வைத்தியத்தில் பல்வேறு பட்டங்களையும் பெற்றிருக்கார். ஆனாலும், அதை தொழிலாக செய்யாமல் தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்துவந்தார். அவரது அன்பிலும், சிகிச்சையிலும் மாறியவர்தான் ரஜினி.தர்மயுத்தம் படத்தில் ரஜினி பாடும் பாடல் வரிகள் இப்படி வரும்..கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா..முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா..என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா..எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்!…
  • 175
  • 175
  • 174
Added a post 
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மானிப்பாய் - காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில், பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.இதன் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்..இதேவேளை பட்டாரக வாகனம், இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்மை குறிப்பிடத்தக்கது000
  • 278
Added a post 
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளது.அதுமாத்திரமன்றி இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி கூறுகிறது.சில பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சில தரப்பினரின் கூற்றுக்களை நிராகரிப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான பிரமிட் திட்டங்கள் தொடர்பில், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 83 (இ) பிரிவின்‌ ஏற்பாடுகளின்‌ நியதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரைக்‌ கோரியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 239
Added a post 
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிவுறுத்தலானது இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் வயிற்றோட்டம் தொடர்பான நோயாளர்கள் அதிகம் பதிவாகி வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு பாடசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே, பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 224
Added a post 
எத்தனையோ ஜென்மங்களில் எத்தனையோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலொழிய நமக்கு ஒரு ஞானியின் தரிசனம் கிட்டாது. அப்படியே கிட்டினாலும் அவர்கள் ஞானிதான் என்பதை உணர முடியாது. ஏதேனும் ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் ஞானிகள் பெரும்பாலும் சாதாரணமாக இருப்பார்கள் பார்ப்பதற்கு ஒரு பெரிதாக அவர்களிடம் எந்த ஒரு குணநலமும் தெரியாது. அதனால் எளிதில் ஏமாந்து போவோம். நஷ்டம் நமக்குத்தானே ஆக ஏதேதோ சந்தேகங்கள் வந்து நம்மை குழப்பி விட்டு ஒரு ஞானியிடம் இருக்க விடாமல் செய்து விடும். வேறு ஏதேதோ மாயைகளை எல்லாம் உண்மை என்று நம்பிப் போய் விடுவோம். ஜெய் யோகி ராம்சுரத்குமார் -அன்னை மா தேவகி அவர்களின் சத்சங்கம்
  • 319
  • 311
Added a post 
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றதுமாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேராதனை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.ரயில்வே வீதிகள் மற்றும் தொழில்கள் தலைமைப் பொறியாளர் மற்றும் உள்கட்டமைப்பு மேலதிக பொது முகாமையாளர் உள்ளிட்ட பல உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 334
Added a post 
2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
  • 336
  • 323
Added article 
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்கான உடல் அமைப்பு, .பெரிய கண்கள் ,சர்வ லட்சணம் , நல்ல நடிப்பு திறன் ஆகிய அனைத்தும் பொருந்தி இருந்தும் தமிழ் திரையுலகில் பெரிதளவில் பேசப்படவில்லை . இப்படி நாயகிக்குரிய அனைத்தும் உள்ளடக்கிய ஒரு நடிகை பெரிய அளவில் வர இயலாமல் போனது .எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ‘குடும்பம்’ ( 1984 ) படத்தில் விஜய்காந்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். பி.மாதவன் இயக்கிய ‘கரையைத்_ தொடாத_அலைகள்’ (1985 ) படத்தில் நாயகியாகவும் நடித்தவர் தேவிஸ்ரீ.. இதில் இயக்குனர் பி மாதவனின் மகன் கதாநாயகனாக நடித்து இருந்தார் .முதலில் மனோபாலாவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட ‘பொண்ணு புடிச்சிருக்கு’ படத்தில் தேவிஸ்ரீ தான் நடிக்க வேண்டியது . பின்னர் இயக்குனர் கே.ரங்கராஜ் ஒப்பந்தம் ஆனதால் நாயகி மாற்றப்பட்டார் .படத்தில் இந்த வேடத்தில் நடித்தது அப்போதைய மண் வாசனை புகழ் ரேவதி .பின்னர் குறிப்பாக "வாங்க மாப்பிள்ளை_வாங்க" (1984) சங்கர் கணேஷ் இசையில் நடராஜன் குரலில் நடிகர் சிவசங்கருடன் இவர் ஆடிய டப்பாங்குத்து பாடல் " என்னடி_முனியம்மா_உன்_கண்ணுல மை".. பாடல் இன்றளவும் ஃபேமஸ்.பொருத்தமில்லாத படத்தில் பொருத்தி வைக்கப்பட்ட பாடலில் பொருத்தமில்லாத ஹீரோவுடன் ஆடி பாடியும் பாட்டு மட்டும் ஹிட் ஆகி விட்டது . ஹிட் ஆன பாடலில் நாம் இருக்கிறோம் என்ற திருப்தியுடன் தேவிஸ்ரீ இருந்து விட்டார் .பின்னாளில் இந்த "என்னடி முனியம்மா' பாடல் அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் சுஜா வருனி' கவர்ச்சி ஆட்டத்தோடு ரீ மிக்ஸ் செய்யப்பட்டு பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சாகரிகா' என்ற பெயரில் ஆட பொம்மா, மல்லி மொகுடு ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தெலுங்கிலும் இவர் பெரிய அளவில் தடம் பதிக்கவில்லை.தேவிஸ்ரீ இந்திராலயா பிலிம்ஸ் தயாரித்த ‘ஊமைக்குயில்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். இன்னொரு நாயகி இளவரசி . நாயகன் பாக்கியராஜ் அவர்களின் க்ளோனிங் யோகராஜ் என்றொரு நடிகர் . . இந்தப் படமாவது தமிழில் தனக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நம்பினார் தேவிஸ்ரீ.பின்னர் 1990 வெளியான ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் படத்தில் வில்லன் சரண் ராஜ் கெடுத்த அபலைப் பெண்ணாக நடித்து இருப்பார்.மு க ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த சீரியல் பெயர் குறிஞ்சிமலர். இந்த சீரியலில் ஸ்டாலினின் பெயர் அரவிந்தன். தூர்தர்ஷனில்13 பாகங்களாக ஒளிபரப்பான இந்த தொடரில் மு.க.ஸ்டாலின் கதாப்பாத்திரம் பெயர் அரவிந்தன். அந்த சீரியல் தாக்கத்தால், தி.மு.க தொண்டர்கள் அக்காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தனர். இதில் ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து பெரும் பாராட்டுகளைப் பெற்றவர் தேவிஸ்ரீ.தற்போது இவர் சினிமாவில் விட்டு ஒதுங்கி, அமைதியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
  • 339
Added a post 
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலையை 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் வாங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்றையதினம் (22.04.2024) புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இடம்பெற்றது.இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில் பல பகாங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. அதில் சேலை ஒன்றுக்கு 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.000
  • 367
Added a post 
சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் சமூக பொலிஸ் குழுக்களை நியமிப்பதன் உண்மையான நோக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்களை ஒன்று சேர்ப்பதாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இந்த சமூக பொலிஸ் குழுக்களை ஸ்தாபிப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதரவை கிராம மட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல குழுவை அமைக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், இலங்கையில் உள்ள 14,022 கிராம அதிகாரிகளும் இந்த குழு முறையை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 339
Added a post 
இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடும் முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுமுன்பதாக குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட இருந்ததாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 344
Added a post 
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி புதன்கிழமை கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகைதரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் தெரிவித்துள்ளது.ஈரானின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சேர்க்கப்படவுள்ளது.அத்துடன் இத்திட்டம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஈரானிய ஜனாதிபதி தற்போது மூன்று நாள் பயணமாக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை சீர்செய்வதற்காக இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.
  • 354
Added a post 
இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.கொழும்பில் தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இந்த தரைப்பாதை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்பதோடு நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும்.சுற்றுலாவை மேம்படுத்துவது இரண்டு நாடுகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர்,இலங்கையைப் பொறுத்தவரை இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.000
  • 356