Ads
Stay Green
Stay Green
Empty
இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இது குறித்து அவரது தந்தை இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,எனது மகள் 2025 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார். எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, எனது மகள் இந்த ஆண்டு 5 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளார்.கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர்களுக்கான போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணையாளர்கள் கிடைக்காததால் அதில் பங்குபற்ற முடியவில்லை.இவர் கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார். எனவே இவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி வசதி தேவையாகவுள்ளது. எனவே நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எமது பிள்ளை மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்க்க வழிவகுக்கும் என்றார்.000
- 163
நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு நேற்றையதினம் இரவு வேளை கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதை படகு நயினாதீவு -குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு துறைமுகத்தில் தரித்துவிடப்பட்டிருந்த நிலையில் வீசிய கடும் காற்றின் வேகத்தில் கடலில் மூழ்கியுள்ளது.இதேவேளை, அண்மையில் இப் பாதை படகு திருத்தப்பட்டு சீரான சேவையினை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்000
- 166
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார். வட்ட மேசை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும் போது ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்றும் அவ்வாறான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அது இரு நாடுகளுக்குமான நன்மைகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.000
- 164
பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலை - கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த அவர், இந்தியாவிலிருந்து தரமற்ற பேருந்துகளே இறக்குமதி செய்யப்படுவதாகச் சுட்டிக் காட்டியிருந்தார். 000
- 167
தனது அதிகார வரம்பை மீறி, இந்தியாவுக்கு எதிராக செயற்;பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவரை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது.இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.காஸ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த 7 முதல் 10ம் திகதி வரை இரண்டு நாடுகளும் போர் ஒன்றில் ஈடுபட்டன.எனினும், பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்தநிலையில், புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அவரை, “ஏற்றுக்கொள்ள முடியாதவர்' என அறிவித்து, அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. எனினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை00
- 170
யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக நடைபெற்றது.இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.000
- 173
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் இந்த பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு அறிவித்துள்ளது.கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பட்டியலில் உறுப்பினர்களை பெயரிடும் போது பெண் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றதும், ஏற்கனவே தேர்தலில் வட்டாரங்களில் வெற்றியீட்டிய வேட்பாளர்களின் பெயர்களுடன் இணைத்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்கள் நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 000
- 173
இந்தியா - பாகிஸ்தான் போர்பதற்றத்தின் போது, பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்கள் அனுப்பியதாக வெளியான செய்திகளுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்களுடன் சரக்கு விமானம் சென்றதாக வெளியான செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சீன இராணுவம், தனது மிகப் பெரிய இராணுவ சரக்கு விமானத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் சியான் Y-20 இராணுவ போக்குவரத்து விமானம் பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்களை கொண்டு சென்றதாக கூறப்படும் செய்தியும் பொய்யானது" என்று சீன அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இணையம் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது அல்ல. இராணுவம் தொடர்பான தவறான தகவல்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் அந்நாடு அவசரமாக இராணுவ தளபாடங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா இராணுவ உதவிகளை வழங்க முன்வந்ததாகவும், அதன் காரணமாகவே இராணுவ தளபாடங்கள் அனுப்பப்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சீனா இந்த செய்திகளை திட்டவட்டமாக மறுப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 172
எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்...அப்படியா...!?ஆமா டாக்டர்... இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும்... சின்ன வயசுல அப்பா, அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல...இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே...?ஆமா டாக்டர்... ஆமா...?சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...உங்க பேரென்ன...ராமநாதன்...என்ன தொழில் பண்றீங்க...பைனான்ஸ்...நைட்டு நல்லா தூங்குவீங்களா...?கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...நெறய டாக்டர்....அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...?ஆமா டாக்டர்..எந்த மாதிரி நடிகைங்க...ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க....சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...!!??சிலசமயம் அம்பிகா, ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?ஷகிலா...ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்... அதவெச் செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க...ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்...அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க...சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க...45, 48, 54, 41...நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47... மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...!!என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா...?தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன்... அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க... திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல... பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்...!அடேய்... இந்தாடா... அடப்பாவி... போய்ட்டானே!!
- 218
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்ப உறுப்பினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். கல்வி பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கால தாமதமாக கிடைக்கும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுரிஷபம்சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணம் தொடர்பான வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைமிதுனம்கால்நடைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் கடகம்உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகளின் மீது ஆர்வமும், விருப்பமும் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்சிம்மம்புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கன்னிநிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் சாதகமாகும். எதையும் சமாளிக்கும் மன தைரியம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுதூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை துலாம்உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். பாசம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதாவிருச்சிகம்மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கை துணைவர் பிடிவாதமாக இருப்பார்கள். திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். எந்தவொரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். பயனற்ற பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொடர்பான ரகசியங்களை பகிர வேண்டாம். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் தனுசுஉலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர் பாலின மக்கள் தொடர்பான விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுவகையான உணவுகளை உண்பதில் ஆர்வம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்மகரம்மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் கும்பம்மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமீனம்உயர் அதிகாரிகளின் மூலம் மறைமுகமான ஆதாயம் கிடைக்கும். கல்வி தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
- 321
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி புதன்கிழமை 14.5.2025.திதி : இன்று அதிகாலை 12.31 வரை பிரதமை. பின்னர் துவதியைநட்சத்திரம் : இன்று காலை 11.35 வரை அனுஷம். பின்னர் கேட்டை.நாமயோகம் : இன்று அதிகாலை 05.50 வரை பரிகம். பிறகு சிவம்.கரணம் : இன்று அதிகாலை 12.31 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 01.16 வரை தைத்தூலம். பிறகு கரசை.கரணம் : இன்று அதிகாலை 12.31 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 01.16 வரை தைத்தூலம். பிறகு கரசை.அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09..30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 04.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- 328
பாகிஸ்தான் பிரதமர் போரில் வெற்றி பெற்றதாக, எதிரிகள் தோல்வி அடைந்து கோழைகள் ஆகிவிட்டதாக பெருமையாக பேசிய நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் முற்றிலும் மாறாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "நாம் உண்மையில் போரில் தோல்வி அடைந்து விட்டோம்" என்பது தான் நிஜமான நிலை என்று அவர் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.கராச்சியில் உள்ள Malir Cantt என்ற ராணுவ தளத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மை என்றும், அதோடு மேலும் சில இடங்களிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதல் கடல் வழியாக இந்தியா வைத்திருக்கும் INS Vikrant என்ற போர் கப்பலிலிருந்து நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் வெளியிட்ட செய்திகளெல்லாம் பொய்யாக இருப்பதாகவும், பாகிஸ்தான் உண்மையில் இந்த போரில் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக தெரிவித்தார். இதன் பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசின் பொய் அம்பலத்திற்கு வந்துள்ளது
- 487
எல்லார் வீட்டிலும் நடக்கும் கதை தாங்க இது !மனைவி - என்னாங்க..."சொன்னது எல்லாம் ஞாபகமிருக்கா...?? நான் ரயிலேறின பிறகு எதையும் மறந்துட மாட்டீங்களே"...!!கணவன் - "மாட்டேன்"...மனைவி - "எதச் சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுங்க"...கணவன் - "கவலை படாம போயிட்டு வாம்மா, நாலே நாளுதானே நான் பாத்துக்கிறேன்"...மனைவி- "உங்கள நம்ப முடியாது, எதுக்கும் இன்னொரு தடவ பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லிடுறேன்"....பாயிண்ட் நம்பர் 1..."வீட்ல வச்சது வச்சபடி இருக்கணும். எதாவது எடம் மாறியிருந்ததுன்னா எக்கச்சக்கமா கடுப்பாயிடுவேன்".பாயிண்ட் நம்பர் 2... "சமையல் கட்ட நீட்டா தொடச்சி வச்சிருக்கேன், காபி, டீ போட்டு சாப்ட்டா... டம்ளரையும், பால் காய்ச்சுன பாத்திரத்தையும் காய விடாமா, உடனே கழுவி கவுத்தி வச்சிடணும்"...கணவன் - "உத்தரவு"...மனைவி - பாயிண்ட் நம்பர் 3..."சாதம் மட்டும் சமைச்சிக்குங்க. பக்கத்து வீடுகள்ல இருக்கிற சுந்தரியக்காவும், மாலதியும் அவங்க வீட்டு கொழம்பு, கூட்டு, பொரியல கொண்டு வந்து கொடுப்பாங்க. அத சாப்ட்டுட்டு... மறக்காம பாத்திரத்த கழுவி அவங்ககிட்ட கொடுத்துடுங்க. அப்பத்தான் மறுநாளுக்கும் கொழம்பு வரும்"...கணவன் - "சரிம்மா"...மனைவி - பாயிண்ட் நம்பர் 4...பொண்ணுங்கள கூடப் பொறந்தவங்களா பாருங்க. அனாவசியமா வழியாதீங்க"..."ம்ம்... ம்ம்"...பாயிண்ட் நம்பர் 5..."வீட்ல நான் இல்லன்னு, உங்க குடிகார பிரண்டுகள கூப்ட்டு வந்து... கூத்தடிச்சி ஏரியால உங்களுக்கு இருக்கிற நல்ல பேர கெடுத்துக்காதீங்க""ஓக்கேம்மா"...பாயிண்ட் நம்பர் 6..."அடக்க ஒடுக்கமா இருங்க... வீட்ட விட்டு வெளிய போனா... நீட்டா தலைய சீவி, பவுடர் போட்டுட்டு போங்க... பாண்டை மாதிரி போகாதீங்க"..."சரிம்மா"...பாயிண்ட் நம்பர் 7..."எங்கயாவது பணத்த ஒளிச்சி வச்சிருக்கனான்னு எலி மாதிரி எல்லாத்தையும் உருட்டாதீங்க. பீரோல கணிசமா பணத்த எண்ணி வச்சிருக்கேன். வேணும்னா எடுத்து செலவு பண்ணுங்க... ஆனா, நான் வர்றதுக்குள்ள வச்சிடுங்க. அப்படி வக்கலன்னா பெனால்ட்டி போட்டு வாங்கிடுவேன்"..."உம் பணம் எனக் கெதுக்கு?? எல்லாம் பத்திரமா இருக்கும் நீ பத்திரமா போயிட்டு வா"..."அப்புறம் பாயிண்ட் நம்பர் 8..."பால்காரன் போட்டுட்டு போற பால் பாக்கெட்ட உடனே எடுத்து கழுவி ஃபிரிஜ்ல வச்சிடுங்க. இல்லன்னா பூனை தூக்கிட்டுப் போயிடும்... என்ன கேக்குறீங்களா"...!?"கேக்குது... கேக்குது"..."அப்புறம் பாயிண்ட்"...கணவன் - யம்மா போதும்மா.. ரொம்ப லெந்தியா போகுது... பாரு ரயிலும் பிளாட்பார்ம்ல வந்திட்டிருக்கு"...மனைவி -;"சரி... சரி... சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்"...நான்காம் நாள் காலை...----------------------------------------------மனைவி வீடு வந்த பின்"என்னதிது... வீடு... வீடு மாதிரியா இருக்கு?? ஒரே தூசியா இருக்கு... வெளக்க மாத்த எடுத்து கூட்டக் கூடவா உங்களால முடியல"...!?கணவன் - கூட்டலாம்னு தான் நெனச்சேன்... ஆனா, நீ சொன்ன மொத பாயிண்ட் ஞாபகம் வந்துச்சி... அதனால வெளக்க மாத்தையே தொடல...மனைவி - "அப்படி நான் என்ன சொன்னேன்"...!?கணவன் - "வச்சது வச்ச எடத்துல இருக்கணும்னு நீ தான சொன்ன... அதனால, இந்த நாலு நாளும் வெளக்க மாத்த அம்மா சத்தியமா கையிலயே தொடலையே"...!!மனைவி - "அடப்பாவி மனுஷா"... !!!!!!!
- 488
வாழ்க்கையின் ரகசியமே மகிழ்ச்சியைப் பெறுவதாகும்.அந்த மகிழ்ச்சியை எப்படி பெற்று வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதை ஒரு சிறு கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.ஒரு பெரிய குருவின் ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தான்.அவனின் சோகத்தைப் பார்த்த குரு சீடனிடம் “நீ ஏன் மிகவும் சோர்வாகக் காணப்படுகிறாய்?” என்று கேட்டார்.அதற்கு சீடன் “என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை” என்று கூறினான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.அங்கு பட்டாம் பூச்சிகள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனிடம் “இங்கு பறந்து திரிந்து கொண்டு இருக்கும் பட்டாம் பூச்சிகளில் ஒன்றை பிடித்து விட்டு வா” என்று கூறினார்.சீடனும் குருவின் ஆணைப் படி பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க ஓடினான்.ஆனால் சீடனால் பட்டாம் பூச்சிகளில் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.சோர்ந்து களைப்புடன் திரும்பிய சீடனைப் பார்த்து “பரவாயில்லை வா. நாம் தோட்டத்தின் அழகினைப் பார்த்து ரசிக்கலாம்” என்று கூறினார்.பின் சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்து வந்தார்.அங்கு இருவரும் தோட்டத்தின் அழகினை கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர்.சிறிது நேரத்தில் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த பட்டாம் பூச்சிகள் அவர்களையும் சுற்றத் தொடங்கின.சற்று நேரத்திற்கு முன்பு சீடன் பிடிக்க முயன்ற பட்டாம் பூச்சி இப்போது அவன் கைகளில் வந்து அமர்ந்தது.குரு சிரித்த படி சீடனிடம் “இது தான் வாழ்க்கை. மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்வினை அமைதியாய் ரசிக்கும் போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்” என்றார்.அதனைக் கேட்டவுடன் “வாழ்க்கையின் ரகசியத்தை நான் புரிந்து கொண்டேன். வாழ்க்கையினை ரசித்து மகிழ்ச்சியுடன் வாழ்வேன்” என்று கூறினான்.
- 491
இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான மறைந்த ரத்தன் டாடாவின் கனவுகளில் ஒன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கார் இருக்க வேண்டும் என்பது. நடுத்தர மக்களும் கூட கார் பயன்படுத்த பொருளாதார தடை இல்லாதவாறு மிகவும் குறைந்த விலையில் கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வெளியான கார்தான் டாடா நேனோ. பார்ப்பதற்கு சுண்டெலி போல தோற்றம் தரும் நானோ 2009ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.1 லட்சம் என்ற விலையில் அறிமுகமான இந்த காரை வாங்க நடுத்தர மக்கள் மிகவும் விருப்பம் காட்டினார்கள். முதல் சில ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான யூனிட்களில் விற்பனையான நானோ கார்கள் பின்னர் விற்பனையில் சரிவை சந்தித்ததன. அதன்பின்னர் 2019ம் ஆண்டில் நானோ கார் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.தற்போது மீண்டும் நானோ கார் 2.0 திட்டத்தை கையில் எடுக்க டாடா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபமாக வெளியாகும் கார்களை போலவே கவரும் வகையிலான டிசைனில் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் மதிப்பீட்டிற்குள் அனைவரும் வாங்கும் அளவில் நானோ 2.0 வெளியாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுகுறித்து டாடா அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடாத நிலையில் இது வெறும் வதந்தியாகவே தொடர்ந்து வருகிறது.
- 498
நடுநிசியில் நித்திரையிலிருந்து விழித்தெழுந்த சடகோபனுக்கு யாரோ வீட்டின் கதவை தட்டுவது போல கேட்டது. சட்டென எழுந்த அவர் வாசற்கதவை திறந்து பார்க்க ,அங்கே குப்பென்று வீசியது சிகரெட் நாற்றம், ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எவருமே இல்லை...ஒரு நொடியில் அரண்டு போன சடகோபன் செய்வதறியாது தெருக் கதவை சாத்த முயல, அவரது கைகள் துவண்டு வலுவிழந்தன. யாரோ தன்னை மீறி உள்ளே செல்வது போல் தோன்றவே வாய்விட்டு அலறினார் சடகோபன்."ஏங்க என்ன கெட்ட கனவா ? ஏன் இப்படி கத்துறீங்க?" என தூங்கிக் கொண்டிருந்த கணவன் சடகோபனை எழுப்பினாள் பூங்கோதை . இது வெறும் கனவுதான் என தெரிந்தாலும் அதை நம்ப மறுத்தது அவரது மனம் .. அவர் இதயமோ அதிவேகமாய் துடித்திட ,தூக்கமற்ற நிலையும் அவரை பின் தொடர்ந்தது.விடிந்தபின் கண்ணயர்ந்து தூங்கிய சடகோபனை சாவு மேளம் தட்டி எழுப்ப, கலக்கத்துடன் மனைவியை பார்த்தார் சடகோபன்."பாவம்..பக்கத்து வீட்டு இளங்கோ போயிட்டாருங்க" என்று மனைவி கண் கலங்கியவாறு சொல்ல அதிர்ந்தார் சடகோபன்.நேற்று இரவு வரை ஓடிஆடி நடமாடிக் கொண்டிருந்த மனிதர், இன்னும் சிறிது நேரத்திற்குள் கண்ணாடி பெட்டிக்குள்ளே அடங்க போகிறார்... நம்ப மறுத்தது மீண்டும் அவரது மனம்..பூங்கோதை அவரைப் பார்த்து "நம்ப முடியலைங்க.. அவர் உயிர் பிரிந்த நேரம் நீங்க நடு சாமத்துல கத்திக்கிட்டே எழுந்திருச்சிங்களே அதே நேரம் தான்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போனாள் பூங்கோதைசடகோபனின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தனநண்பன் இளங்கோவுடன் இவருக்கு நாற்பது வருட நட்பு. ஒரே வீட்டுமனையை வாங்கி, இரு வீடுகளை ஒட்டியே கட்டியது இவர்களது நெருங்கிய நட்பிற்கு ஓர் அடையாளம் .. ஆனால் பல வருடங்கள் கழித்து அதே வீட்டு மனை இருவரிடையே இட ஒதுக்கீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தி அவர்களை பிரிக்கவும் செய்தது.பகைமையை வளர்த்துக் கொண்டு, இளங்கோவுடன் பேசியே பத்து வருடங்கள் ஆனாலும், இன்று ஏனோ பரிதவித்தது இந்த பாவி மனம்.அவரது நினைவுகளை கலைப்பது போல், வாசலில் வந்து நின்றான் இளங்கோவின் பதினைந்து வயது மகன் அபிநவ்."ஐயோ! அங்கிள்! அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாரு !" என அவன் கதறிய கதறலில் துடித்து போனார் சடகோபன்.ஓடி வந்து அவனை அப்படியே தாங்கிப் பிடித்து சட்டென இளங்கோவின் வீட்டிற்குள் நுழைந்தார் சடகோபன்.. இறந்து கிடந்த நண்பனின்உணர்வற்ற கால்களை தன் கைகள் நடுங்கியபடி தொட்டார். சில்லிட்ட அந்த கால்களின் மேல் சொட்டியது அவரது கண்ணீர்."நல்ல மனிதன் தான். அந்த பாழாய் போன புகைப் பழக்கம் .. ஆளை சீக்கிரமாகவே கொண்டு போயிடுச்சு" என்று யாரோ சொல்வது காதில் விழ, இறந்த உடலை குலுக்கினார் சடகோபன்."ஏன்டா இப்படி செஞ்ச? பத்து வருஷமா என்னோட பேசாம இருந்தியே! அப்படியே போக வேண்டியது தானே.. இப்ப மட்டும் சாகப் போறேன்னு வந்து சொல்லிட்டு போனியா ? " என தலையில் அடித்துக் கொண்டு அழ, அதற்கு பதில் அளிப்பது போல் "அண்ணே! உங்க தோழனை அந்த எமனுக்கு விட்டுக் கொடுத்துடீங்களே! இனி யார் இருக்கா எங்களுக்கு?" என அலறி கொண்டே ஓடி வந்து காலில் விழுந்தாள் இளங்கோவின் மனைவி மகேஸ்வரி.சடகோபனை கண்ட இளங்கோவின் பிள்ளைகள் மூவரும் அழுது கொண்டே அவரை சுற்றிக் கொண்டனர் இளங்கோவின் பதினாறு வயது மகள் ஸ்ருதி சடகோபனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். வெடித்தது அவரது இதயம். வேற்றுமை தெரியாத இந்த உறவுக்கு பெயர் என்ன? நான் என்ன இந்த பெண் பிள்ளைக்கு அந்நிய ஆணாக தெரியவில்லையா? இரத்த சொந்தம் இல்லாத உயர்ந்த நட்பென்ற உறவின் அடையாளம் தானா இது? இவர்களை தள்ளி வைத்து தவறு செய்து விட்டேனே" என எண்ணி ஓவென வீடே அதிரும்படி கத்தினார் சடகோபன்.இரு வீட்டிற்கும் இடையே தடுப்பு சுவர் இல்லாததால் வாசற் தெளிக்கும் தண்ணீரும், பூத்தொட்டிகளில் ஊற்றும் தண்ணீரும் ஒருவர் வீட்டில் இருந்து மற்றொருவர் வீட்டுக்கு ஓடி செல்ல, சுனாமி அலையாய் மாறியது சண்டை. இருவரின் மனைவிகளிடையே மோதல்..காலத்தின் கொடுமை.. இதோ அவ்விருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்...அங்கே அடித்த பறையின் ஒலியோ சடகோபனுக்கு அவரை சாட்டைக் கொண்டு அடிப்பது போல் தோன்றியது..நேற்று இருந்தவன் இன்று இல்லை.. இந்த அடங்கப் போகும் வாழ்க்கையில் நமக்குள் ஏனடா அத்தனை ஆர்ப்பாட்டம்? அழிச்சாட்டியம்?நண்பா! இன்று நீ! நாளை நான்! இதுவே வாழ்க்கையின் நியதி! இன்றைய காலகட்டத்தில் ஆடி அடங்கும் நம் வாழ்க்கையிலே ஆறடி நிலம் கூட சொந்தமில்லை. இதில் ஒன்றரை அடி இடத்திற்காக கூட வெட்டு குத்து .இன்று மன்னிப்பு கேட்பதால் மாண்டவன் வருவானா? மெல்ல எழுந்து நண்பனின் இறுதிச் சடங்கை நிறைவாக தன் செலவில் செய்ய ஆரம்பித்தார் சடகோபன்.. இதோ இரு வீட்டுப் பிள்ளைகளும் ஒன்றாய் கூடி ஈம சடங்குகளை செய்தனர். இங்கே நண்பன் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் வேகமாக சடகோபனின் வீட்டு வாசலை தேடி ஓடியது. இவன் இறந்த பின்பும் நம்மிடம் வந்து வம்பு இழுக்கிறானோ? என தோன்ற அருவியென கொட்டியது கண்ணீர்.அந்த நீரையே உற்றுப் பார்த்தார் சடகோபன்.. தேங்கிய அந்தத் தண்ணீரில் மங்கலாக வந்து மறைந்தது நண்பன் இளங்கோவின் உருவம்.நடுநிசியில் நித்திரையிலிருந்து விழித்தெழுந்த சடகோபனுக்கு யாரோ வீட்டின் கதவை தட்டுவது போல கேட்டது. சட்டென எழுந்த அவர் வாசற்கதவை திறந்து பார்க்க ,அங்கே குப்பென்று வீசியது சிகரெட் நாற்றம், ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எவருமே இல்லை...ஒரு நொடியில் அரண்டு போன சடகோபன் செய்வதறியாது தெருக் கதவை சாத்த முயல, அவரது கைகள் துவண்டு வலுவிழந்தன. யாரோ தன்னை மீறி உள்ளே செல்வது போல் தோன்றவே வாய்விட்டு அலறினார் சடகோபன்."ஏங்க என்ன கெட்ட கனவா ? ஏன் இப்படி கத்துறீங்க?" என தூங்கிக் கொண்டிருந்த கணவன் சடகோபனை எழுப்பினாள் பூங்கோதை . இது வெறும் கனவுதான் என தெரிந்தாலும் அதை நம்ப மறுத்தது அவரது மனம் .. அவர் இதயமோ அதிவேகமாய் துடித்திட ,தூக்கமற்ற நிலையும் அவரை பின் தொடர்ந்தது.விடிந்தபின் கண்ணயர்ந்து தூங்கிய சடகோபனை சாவு மேளம் தட்டி எழுப்ப, கலக்கத்துடன் மனைவியை பார்த்தார் சடகோபன்."பாவம்..பக்கத்து வீட்டு இளங்கோ போயிட்டாருங்க" என்று மனைவி கண் கலங்கியவாறு சொல்ல அதிர்ந்தார் சடகோபன்.நேற்று இரவு வரை ஓடிஆடி நடமாடிக் கொண்டிருந்த மனிதர், இன்னும் சிறிது நேரத்திற்குள் கண்ணாடி பெட்டிக்குள்ளே அடங்க போகிறார்... நம்ப மறுத்தது மீண்டும் அவரது மனம்..பூங்கோதை அவரைப் பார்த்து "நம்ப முடியலைங்க.. அவர் உயிர் பிரிந்த நேரம் நீங்க நடு சாமத்துல கத்திக்கிட்டே எழுந்திருச்சிங்களே அதே நேரம் தான்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போனாள் பூங்கோதைசடகோபனின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தனநண்பன் இளங்கோவுடன் இவருக்கு நாற்பது வருட நட்பு. ஒரே வீட்டுமனையை வாங்கி, இரு வீடுகளை ஒட்டியே கட்டியது இவர்களது நெருங்கிய நட்பிற்கு ஓர் அடையாளம் .. ஆனால் பல வருடங்கள் கழித்து அதே வீட்டு மனை இருவரிடையே இட ஒதுக்கீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தி அவர்களை பிரிக்கவும் செய்தது.பகைமையை வளர்த்துக் கொண்டு, இளங்கோவுடன் பேசியே பத்து வருடங்கள் ஆனாலும், இன்று ஏனோ பரிதவித்தது இந்த பாவி மனம்.அவரது நினைவுகளை கலைப்பது போல், வாசலில் வந்து நின்றான் இளங்கோவின் பதினைந்து வயது மகன் அபிநவ்."ஐயோ! அங்கிள்! அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாரு !" என அவன் கதறிய கதறலில் துடித்து போனார் சடகோபன்.ஓடி வந்து அவனை அப்படியே தாங்கிப் பிடித்து சட்டென இளங்கோவின் வீட்டிற்குள் நுழைந்தார் சடகோபன்.. இறந்து கிடந்த நண்பனின்உணர்வற்ற கால்களை தன் கைகள் நடுங்கியபடி தொட்டார். சில்லிட்ட அந்த கால்களின் மேல் சொட்டியது அவரது கண்ணீர்."நல்ல மனிதன் தான். அந்த பாழாய் போன புகைப் பழக்கம் .. ஆளை சீக்கிரமாகவே கொண்டு போயிடுச்சு" என்று யாரோ சொல்வது காதில் விழ, இறந்த உடலை குலுக்கினார் சடகோபன்."ஏன்டா இப்படி செஞ்ச? பத்து வருஷமா என்னோட பேசாம இருந்தியே! அப்படியே போக வேண்டியது தானே.. இப்ப மட்டும் சாகப் போறேன்னு வந்து சொல்லிட்டு போனியா ? " என தலையில் அடித்துக் கொண்டு அழ, அதற்கு பதில் அளிப்பது போல் "அண்ணே! உங்க தோழனை அந்த எமனுக்கு விட்டுக் கொடுத்துடீங்களே! இனி யார் இருக்கா எங்களுக்கு?" என அலறி கொண்டே ஓடி வந்து காலில் விழுந்தாள் இளங்கோவின் மனைவி மகேஸ்வரி.சடகோபனை கண்ட இளங்கோவின் பிள்ளைகள் மூவரும் அழுது கொண்டே அவரை சுற்றிக் கொண்டனர் இளங்கோவின் பதினாறு வயது மகள் ஸ்ருதி சடகோபனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். வெடித்தது அவரது இதயம். வேற்றுமை தெரியாத இந்த உறவுக்கு பெயர் என்ன? நான் என்ன இந்த பெண் பிள்ளைக்கு அந்நிய ஆணாக தெரியவில்லையா? இரத்த சொந்தம் இல்லாத உயர்ந்த நட்பென்ற உறவின் அடையாளம் தானா இது? இவர்களை தள்ளி வைத்து தவறு செய்து விட்டேனே" என எண்ணி ஓவென வீடே அதிரும்படி கத்தினார் சடகோபன்.இரு வீட்டிற்கும் இடையே தடுப்பு சுவர் இல்லாததால் வாசற் தெளிக்கும் தண்ணீரும், பூத்தொட்டிகளில் ஊற்றும் தண்ணீரும் ஒருவர் வீட்டில் இருந்து மற்றொருவர் வீட்டுக்கு ஓடி செல்ல, சுனாமி அலையாய் மாறியது சண்டை. இருவரின் மனைவிகளிடையே மோதல்..காலத்தின் கொடுமை.. இதோ அவ்விருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்...அங்கே அடித்த பறையின் ஒலியோ சடகோபனுக்கு அவரை சாட்டைக் கொண்டு அடிப்பது போல் தோன்றியது..நேற்று இருந்தவன் இன்று இல்லை.. இந்த அடங்கப் போகும் வாழ்க்கையில் நமக்குள் ஏனடா அத்தனை ஆர்ப்பாட்டம்? அழிச்சாட்டியம்?நண்பா! இன்று நீ! நாளை நான்! இதுவே வாழ்க்கையின் நியதி! இன்றைய காலகட்டத்தில் ஆடி அடங்கும் நம் வாழ்க்கையிலே ஆறடி நிலம் கூட சொந்தமில்லை. இதில் ஒன்றரை அடி இடத்திற்காக கூட வெட்டு குத்து .இன்று மன்னிப்பு கேட்பதால் மாண்டவன் வருவானா? மெல்ல எழுந்து நண்பனின் இறுதிச் சடங்கை நிறைவாக தன் செலவில் செய்ய ஆரம்பித்தார் சடகோபன்.. இதோ இரு வீட்டுப் பிள்ளைகளும் ஒன்றாய் கூடி ஈம சடங்குகளை செய்தனர். இங்கே நண்பன் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் வேகமாக சடகோபனின் வீட்டு வாசலை தேடி ஓடியது. இவன் இறந்த பின்பும் நம்மிடம் வந்து வம்பு இழுக்கிறானோ? என தோன்ற அருவியென கொட்டியது கண்ணீர்.அந்த நீரையே உற்றுப் பார்த்தார் சடகோபன்.. தேங்கிய அந்தத் தண்ணீரில் மங்கலாக வந்து மறைந்தது நண்பன் இளங்கோவின் உருவம்.
- 501
கனடிய பிரதமர் மார்க் கார்னி நாளை புதிய அமைச்சரவையை நியமிக்க உள்ளார். புதிய அமைச்சரவையில் 50% க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்கள் என பிரதமரின் அலுவலகம் (PMO) உறுதிப்படுத்தியுள்ளது.கார்னியின் புதிய அமைச்சரவை 30 பேருக்கு கீழ்ப்பட்ட மையக் குழுவாகவே அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாக, 10 செயலாளர்கள் (Secretaries of State) நியமிக்கப்படுவர் எனவும், இவர்கள் இளைய அமைச்சர்கள் போன்று தனித்தனி கோப்புகளை கையாள, முதன்மை அமைச்சர்கள் முக்கிய துறைகளை நயமாக வழிநடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நடைமுறை, முன்னர் சில பிரதமர்களால் பின்பற்றப்பட்டாலும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் வன்கூவர் மாநகர மேயர் கிரேகர் ராபர்ட்சன், வீடு தொடர்பான துறையை பொறுப்பேற்கிறார். முன்னாள் கியூபெக் மாகாண அமைச்சர் கார்லோஸ் லெய்டாவும் பதவி உயர்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது துறை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முதலில் வெளியான தகவல்களில், நீண்டகால அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டு அமைச்சரவையைவிட்டு விலக உள்ளார் என கூறப்பட்டிருந்தது. எனினும், தற்போது கிடைத்த புதிய தகவலின்படி, அவர் அமைச்சரவையில் தொடர உள்ளார் மற்றும் நாளைய பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
- 505
இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு நானே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன் போது கருத்து தெரிவித்த அவர் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த சூழலில், மே 10ல், என் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் உடனடி போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய உதவியது.இரு நாடுகளின் தலைமைகளும் அசைக்க முடியாதவை சக்தி வாய்ந்தவை. சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், மன உறுதியை அவர்கள் கொண்டிருந்தனர். நீங்கள் போரை நிறுத்தாவிட்டால், உங்களுடன் வர்த்தகம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தேன். இதையடுத்து, போரை நிறுத்துவதாக திடீரென அவர்கள் தெரிவித்தனர்; அதன்படி, செய்து விட்டனர்.போரை நிறுத்துவதற்கு வர்த்தகத்தை நான் பயன்படுத்தியது போல, உலகில் யாருமே இதுவரை செய்ததில்லை. இந்த போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்கும் என கருதுகிறேன். இரு நாடுகளும் நிறைய அணு ஆயுதங்களை வைத்துள்ளன. நாங்கள், ஒரு அணு ஆயுத மோதலை நிறுத்தி இருக்கிறோம். மோதல் தொடர்ந்தால், மோசமான அணு ஆயுதப் போராக மாறி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். எனவே, இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தத்துக்கான பணிகளை மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு நன்றி.இனிமேல், இரு நாடுகளுடனும் அமெரிக்கா நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறது. தற்போது, இந்தியாவுடன் வர்த்தக பேச்சு நடத்தி வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடனும் பேச்சு துவங்கப் போகிறோம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
- 505