Feed Item
Added a news 

சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் குறித்த பகுதியில் நடமாடுகின்றார் என்று முல்லைத்தீவு மாவட்ட போலீஸ் அத்தியட்சகர் கலும் C திலகரட்ன, மற்றும் உதவி போலீஸ் அத்தியட்சகர் வசந்த விதாரண, மற்றும் மல்லாவி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்மால் அம்பாலிகம , குற்றப்பிரிவு போலீஸ் உத்தியோகத்தர் யூட் அந்தோணி ஆகியோருக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலை அடுத்து மல்லாவி போலீஸ் உத்தியோகத்தர்களான சபேசன் , நிர்மலன் , பகீரதன் , புஸ்பகுமார ஆகியோர் இணைந்த கைது நடவடிக்கையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபருக்கு யாழ் மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று நீதிமன்ற பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 573