Feed Item
Added a news 

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை தென் கடல் பகுதியில் இறங்குதுறை  ஒன்றை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை பிரதேச கடற்தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெளதாரி முனை மற்றும் கல்முனைப் பகுதியில் அதிகளவானகுடும்பங்கள் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக கௌதாரிமுனை பகுதியில் தென் கடல் பகுதியில் ஆழ் கடல் தொழிலுக்கு செல்ல கூடிய பகுதியாக காணப்படுவதனால் குறித்த பிரதேசத்தில் படகுத்துறை ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 542