Feed Item
Added a news 

தான் எப்போதும் அமைச்சு பதவியை கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். புதிய அமைச்சு பொறுப்பை ஏற்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது சேவை நாட்டுக்கு தேவை என கூறும்போது தயக்கமின்றி அதனை ஏற்றுக்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி – நீங்கள் ஜனாதிபதியை அச்சுறுத்தினீர்களா? அமைச்சு பதவியை வழங்காவிடின் 53 பேருடன் எதிர்க்கட்சியில் சென்று அமர்வீர்களா?

பதில் - வேறு யாரும் தொடர்பில் என்னால் எதனையும் கூற முடியாது. நான் யாரையும் அச்சுறுத்தவும் இல்லை, அமைச்சு பதவியை கோரியதும் இல்லை. அமைச்சு பதவிக்கு பின்னால் நான் என்றும் ஓடியதுமில்லை. ஜனாதிபதி பொறுப்பினை வழங்கினால் அதனை ஏற்க தயார்.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன் அமைச்சு பதவிகளை வழங்குவது பொருத்தமாக இருக்கவில்லை. இந்த நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும். எனவே, தாம் எப்போதும் அமைச்சு பதவியை கோரவும் இல்லை அதன் பின்னால் சென்றதும் இல்லை. என்னால் நாட்டுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் அதனை செய்ய தயார் என பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

  • 227