Feed Item
Added a post 

சிலருக்கு அவசரத்திற்கு கடன் கொடுத்திருப்போம். ஆனால், அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று இழுத்தடித்து விடுவார்கள்.  நாமும் அலைந்து, அலைந்து சலித்துப் போய் இது வராக்கடன் என்ற எண்ணத்தில் ஒதுக்கி வைத்து விடுவோம்.

வராக்கடனும் வசூலாக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்....

 செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்யவும். 

செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணையில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். 

சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும். 

இந்தியா - தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை ஊரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட வராக்கடன்கள் வசூலாகும். வெளிநாட்டில் உள்ளவர்கள் அந்நாட்டில் உள்ள அம்மன் கோவிலில் மனமுருகி வேண்டுதல் செய்யலாம். 

  • 140